நடிகர் அஜித் என்றாலே 'தல' என்று அனைவரும் அன்போடு அழைக்கின்றனர். தற்பொழுது சில நாட்களுக்கு முன்பு "கடவுளே அஜித்தே " என்ற கோஷங்களும் பெருகி வந்தது. இதனைப் பார்த்து மன வேதனை அடைந்த அஜித் குமார், இனி தன்னை அப்படி யாரும் அழைக்க வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அப்படி கூறுவதை முற்றிலுமாக நிறுத்தினர்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித் தனது நடிப்பில் ஒரு புறம் ஆர்வத்தை காட்டினாலும் மறுபுறத்தில் கார் ரேசுகளிலும், உலகம் சுற்றும் வாலிபனாக இன்றும் தனது bmw பைக்கை எடுத்துக் கொண்டு மலைகள் முதல் குன்றுகள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து தன் வாழ்க்கையை இனிமையாக கழித்து வருபவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படி இருக்க, பைக் ரெய்டுகளில் அதிக ஆர்வம் செலுத்தும் நடிகர் அஜித்தை பிடிப்பது என்பது அனைத்து இயக்குநர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. அந்த வகையில், சமீப காலமாக, கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்த சூழலில், தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வந்தார் அஜித். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார். இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.
இதையும் படிங்க: ரசிகர்களின் தீர்ப்பே தயாரிப்பாளரின் தீர்ப்பு..! ரீரிலீஸ் ஆகிறது அஜித்தின் "குட் பேட் அக்லி"..!

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித் ரேஸிற்கு மீண்டும் தயாராகும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார். இதனை அடுத்து, அதே ரேஸில் நடிகர் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க, தற்பொழுது இந்த ரேஸில் நடிகர் அஜித்தின் டீம் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து இருக்கிறார். இதுவரை இரண்டு வெண்கலப்பதக்கம் வென்ற அஜித்தின் அணி தற்பொழுது வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று உள்ளது.

இப்படி இருக்க, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் விருது வாங்கி இருக்கிறார் நடிகர் அஜித். கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் விருதை பெற்று கொண்ட அஜித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து நடிகர் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் " நான் ரேஸ்களில் கலந்து கொள்ளும் நேரங்களில் சினிமாவில் நடிப்பதில்லை எனவும் சினிமாவில் நடிக்கும் பொழுது எந்த ரேஸ்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவையும் தீர்க்கமாக எடுத்து உள்ளேன். இதுதான் சரியான வழியாக இருக்கும் என்றும் நம்புகிறேன். எனவே வரும் நவம்பர் மாதத்தில் எனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படம் அடுத்த ஆண்டு, அதாவது 2026ல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என்ற செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதன்கீழ் "அஜித் குமார் மெக்லாரன் சென்னாவை வீட்டிற்கு கொண்டு வந்ததன் மூலம் சென்னா உயிர் பெற்றார்!" என பதிவிட்டு இருக்கிறார். அதன்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்லாரன் ஆட்டோமோட்டிவ் (MCLAREN Automotive) என்ற நிறுவனம் ரேஸ் காரை தயாரித்துள்ளது. இந்த காரின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது அந்த காரை தன் வசமாக்கி அதில் கெத்தாக சாய்ந்து போஸ் கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.
இதையும் படிங்க: இரண்டு நடிகைகள் உடன் நடிக்க தயாராகியுள்ள அஜித்...! என்ன AK ரசிகர்களே ரெடியா..!