தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களின் மனதில் உற்சாக நாயகனாக இருப்பவர்தான் நடிகர் அஜித் குமார். இவர் பார்க்க அழகாகவும் கலராகவும் இருப்பதினால் நடிக்க மட்டும் தான் செய்வார் என நினைத்தால் அதுதான் தவறு. அவர் ஒருபுறம் நடிப்பு மறுபுறம் தனக்கு பிடித்த வகையில் பைக் ரைட் செய்வது, மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பாடங்களை கற்று கொடுப்பது, என தன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வந்த அஜித் தற்பொழுது கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார்.

இப்படிப்பட்டவர், இதுவரைக்கும் தமிழில் மட்டுமே படங்களை நடித்து உள்ளார். ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிசார்ந்த ரசிகர்களுக்காக இவரது படம் டப்பிங்கில் இன்றுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு வளர்ந்த நடிகர் அஜித் குமார், 1992 ஆம் ஆண்டு வெளியான "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர், "அமராவதி" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்த அஜித் அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் பலரது கவனத்தை பெற்றது.
இதையும் படிங்க: ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

இதனை அடுத்து, அஜித் குமாரின் நடிப்பில் வெளியான "ஆசை" திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. அதன் பின்னர் இயக்குனர் சரணின் "காதல் மன்னன்" படத்தில் நடித்தார் அஜித். இந்த படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும், அஜித்குமாரின் ப்ளாக் பஸ்டர் படமாக பார்த்தால் 2002-ம் ஆண்டு வெளியான "தீணா" திரைப்படம் தான். இதற்கு பின்பு தான் அஜித்துக்கு "தல" என்ற பெயரை ரசிகர்கள் அன்புடன் வைக்க ஆரம்பித்தனர்.

இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இப்படிப்பட்ட நடிகர் அஜித் சமீபத்தில் நடித்திருந்த ஃபேன் பாய் திரைப்படமான "குட் பேட் அக்லி" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. அனைவரது எதிர்பார்ப்புக்கு பலனாக இத்திரைப்பதத்தை அட்டகாசமாக எடுத்திருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கும் நடிகர் அஜித் தனது மகனுக்கு கொடுத்த சத்தியத்திற்காக ஜெயிலில் பல வருட தண்டனைகளை பெற்ற பின்னர் தனது மகனின் பிறந்த நாளுக்கு அவரைப் பார்க்க வருகிறார் அவர் வெளியே வரும்பொழுது அவர் மகன் ஜெயிலுக்கு போகும் போது அது அவருக்கு மிகவும் வலிக்கிறது. ஒரு பக்கம் மகனைக் காப்பாற்றுவதா? இல்லை இன்னொருபக்கம் தன்னை புரிந்து கொள்ளாத மனைவிக்காக பேசுவதாக என தெரியாமல் புலம்பி கொண்டிருக்கும் அஜித் தனது மகனைக் காப்பாற்ற பல கட்ட போராட்டங்களில் இறங்குகிறார்.

கடைசியாக எப்படியோ தனது மகனை வெளியே எடுத்துவிடுவார் நடிகர் அஜித். இந்தத் திரைப்படம் உலக அளவில் ரூ.285 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இப்படிப்பட்ட அட்டகாசமான திரைப்படத்தை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் 'ஏகே 64' திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்க தற்பொழுது நடிகர் அஜித் குமார் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், "முதன்முதலில் நான் நடிக்க வந்தபோது எனக்கு தமிழ் சரியாக பேச கூட வரவில்லை. நான் பேசும் சாயலில் ஆங்கில மொழியின் கலப்பு அதிகமாக இருந்தது. இதனால் எனக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தது. அவைகள் என்னை பலவீனம் ஆக்கியது. பின் எனது பலவீனங்களை சரி செய்ய அதிக பயிற்சி எடுத்தேன். தவறுகளை சரி செய்தேன். அந்த உழைப்புக்கு கிடைத்த பலன் தான் நான் இன்று அடைந்திருக்கும் நிலைமை என அனைவருக்குமே தெரியும். சினிமா எப்படியோ கார் ரேஸிங்கிலும் அப்படித்தான் அதிக காயங்கள் உண்டாகும். ஆனால், விடாமுயற்சியுடன் பயிற்சி எடுப்பேன், விரைவாக கற்றுக்கொள்வேன்.

எனக்கு இப்பொழுது 54 வயதாகிறது. எனினும் என்னால் முடிந்தவரை கார் ரேஸை தொடர ஆசைப்படுகிறேன். கடவுளின் கருணையால் எனக்கு இன்றும் உடல்நிலை நன்றாக இருக்கிறது. பெரிய அளவில் காயங்கள் ஏதும் இன்றி என்னுடன் பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்பால் சிறப்பாக வாழ்ந்து வருகிறேன். சில ரேஸர்கள் 60 வயதை தாண்டி ரேஸிங்கில் ஈடுபட்டதை பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். அவர்களை போல நானும் 60 வயது வரை ரேஸிங்கில் ஈடுபடலாம். அதனால், தற்போது ரேஸிங்கில் ஈடுபடுகிறேன். இந்த கார் ரேஸிங்கில் அஜித்குமார் கார் ரேஸிங் நிறுவனத்தை அனைவரும் பார்க்கும்படியாக ஈடு இணையற்ற ஒன்றாக மாற்றுவதே தனது விருப்பம். என்னை பற்றி பேசும் மற்றவர்களின் விமர்சனங்களால் என்னை நானே ஒருநாளும் மதிப்பிட்டுக்கொள்ள மாட்டேன்.

நான் வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன். எனது கடைசி காலத்திலும் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்தேன், நான் ஏதோ செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி மற்றற்ற மகிழ்ச்சி அடைவேன். என கூறியுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவர் பேசியதை மோட்டிவேஷனாக எடுத்து கொண்டு வாழ்வில் பயணிக்க இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் அஜித் படத்தில் கேஜிஎப் நாயகியா..! ஏகே 64 படத்தை ஹிட்டாக்க ஆதிக் ரவிச்சந்திரனின் பிளான்..!