லோகேஷ் கனகராஜன் இயக்கம் என்றால் அதிரடி சண்டை காட்சிகளை வைத்திருப்பார், ஆனால் காதல் என்ற வார்த்தைகளும், ரொமன்ஸ் என்ற வார்த்தைகளும் இவர் படத்தில் சுத்தமாக இருக்காது என்னும் அளவிற்கு தனது இயக்கத்தை மக்கள் மனதில் கொண்டு சேர்த்தவர். அதுமட்டும் அல்லாமல் பிரபலங்ளின் படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் என்ற பெயரையும் பெற்றவர்.

அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து வீடியோ சாங்கில் நடித்து அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். இப்படி இருக்க, இதுவரை இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட். குறிப்பாக, நடிகர் விஜய் வைத்து "மாஸ்டர்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதில், நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை வைத்து படத்தின் காட்சிகளை அசத்தியிருப்பார். அது மட்டுமல்லாது உலகநாயகன் கமல்ஹாசன் மனதை கவரும் அளவிற்கு கதையை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் தனது இயக்கத்தில் "விக்ரம்" படத்தை தயாரித்து, கமலஹாசனுக்கு தலை சிறந்த வெற்றிப் படத்தை கொடுத்தார்.
இதையும் படிங்க: ரஜினிக்கே ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்... "மிஸ்டர் & மிஸ்ஸஸ்" படக்குழுவின் சர்ப்ரைஸான அப்டேட்...!

மேலும், "கைதி" திரைப்படத்தை மிகவும் மிரட்டலாக காண்பித்து அசத்தி இருப்பார். சமீபத்தில் நடிகர் விஜயை வைத்து இவர் இயக்கிய "லியோ" திரைப்படம் பல விமர்சனங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி படமாக ஓடியது. இவருடைய படங்கள் அனைத்தும் போதை தடுப்பு மற்றும் கேங்ஸ்டர் பேட்டனை வைத்து இயக்கி வரும் நிலையில், இவர் தனது அடுத்த படத்தை ரஜினியை வைத்து இயக்கி இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தை நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். மேலும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் பாலிவுட் ஹீரோவான அமீர் கான் நடித்துள்ளார்.

இந்த நிலையில், அனைவரது எதிர்ப்பார்பையும் எகிற செய்துள்ள ரஜினியின் கூலி படமானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இப்படி இருக்க, லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 'கைதி 2' படத்தை இயக்கவுள்ளதாகவும் அதில் ரீஎண்ட்ரி கொடுத்த லேடி சூப்பர் ஸ்டாரை நடிக்க வைக்க உள்ளயதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மங்களூரில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்து, யோகா ஆசிரியராக அவதாரம் எடுத்து பின் 2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான "சூப்பர்" என்ற படத்தில் நாகர்ஜுனாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா.

அதன் பின் தமிழில் இதுவரை ரெண்டு, அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, தோழா, பாகுபலி 2, எஸ் 3,பிரமாண்ட நாயகன், பாகமதி, சைலன்ஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுஷ்கா. சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் 'இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக தனது உடல் எடையை அதிகரித்தார்.

அதன்பிறகு உடற்பயிற்சி, யோகா என பல்வேறு முயற்சிகள் செய்தார். ஆனால் எதுவும் அவருக்கு பலனளிக்க வில்லை. உடல் எடையும் குறைந்த பாடில்லை. இதனால் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்து, நீண்ட நாள் மருத்துவ ஒய்வுக்கு பின் தற்பொழுது மீண்டும் பழைய அனுஷ்காவாக ரசிகர்களுக்கு காட்சியளிக்க தயாராகி இருக்கிறார்.

மேலும் தற்பொழுது கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்காவின் 50-வது படமான 'காதி' திரைப்படத்தில் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. இப்படி ரீஎண்ட்ரி கொடுத்துள்ள அனுஷ்காவை விட கூடாது என நினைத்த லோகேஷ் கனகராஜ், தனது கைதி 2 படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, கைதி 2 வில் லோகேஷுடன் இணைகிறார் அனுஷ்கா.
இதையும் படிங்க: ஒரே பதிவில் ரஜினியை கடுப்பாக்கிய ப்ளூ சட்டை மாறன்..! கொதிக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!