சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவரது பாடலை கேட்டு மனதில் ஆறுதல் அடைவார்கள், நடனம் ஆடுவார்கள், புத்துணர்ச்சி பெறுவார்கள் என்றால், அதற்கு காரணமாக இருப்பவர் தான் இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பார்க்க அமைதியாக இருப்பதை போல் தோற்றம் அளிக்கும் இவர், இசை கருவியில் கைகளை வைத்தால் அமைதிகளை களைத்து இசை அரக்கனாக மாறி, கர்ஜிக்க தொடங்கி விடுவார்.
அவரது கர்ஜனைக்கு கிடைத்த பரிசு தான் நாம் இன்று கேட்கும் அனைத்து பாடல்களும். இப்படி அமைதியாக இருந்து பாடல்களை உருவாக்குவதில் எந்தளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வல்லவரோ, அதே அளவுக்கு தன்னிடம் கேள்வி கேட்பவர்களுக்கும் 'தக் லைஃப்' கொடுப்பதில் வல்லவர்.

இவரது பாடல்களில் ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிடித்த பாடல் என்றால் உடனடியாக மக்களின் மனதில் இருந்து வரும் பாடல் "முஸ்தப்பா முஸ்தப்பா டோண்டோரி முஸ்தப்பா" என்ற பாடலும், "தோழா.. முன்னாள் வாடா... உன்னால் முடியும்" என்று மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் பாடல்தான். இப்படி நட்புக்கும், காதலுக்கும், வாழ்க்கைக்கும் என மிரட்டலான மற்றும் மெலடியான பாடல்களை கொடுத்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இதையும் படிங்க: பவன் கல்யாண் பெயரில் சொத்து.. மறைந்த ஷிகான் ஹுசைனி உயிலில் உருக்கம்..!

இத்தனை பெருமைகளும் சொந்தக்காரரான ஏ.ஆர்.ரகுமானின் ஆரம்ப வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருந்தது. குடும்பத்தில் வருமானம் இல்லாத காலக்கட்டத்தில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து வருமானம் ஈட்டி வந்தார். அப்பொழுது கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் முதலிய இசைக்கருவிகளை வாசிக்க கற்று கொண்டார்.

அதன்பின் தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். தனது 11வது வயதில் 'இளையராஜா' இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்து, பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி தன்னுடைய திறமையை வளர்த்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், முறையாக டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இதனை அடுத்து, 1992ம் ஆண்டு தனது வீட்டிலேயே "மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர்" அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், சினிமாவில் இசைப்பயணத்தை தொடங்க காரணமாக இருந்தவர் இயக்குநர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மக்களுக்கு பிடித்து போக அதன்பின், இந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து "இசைப்புயல்" என்ற பட்டத்தை மக்களிடம் இருந்து பெற்றார்.

அதன்பின், இவரது உழைப்புக்கு பலனாக, ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றார். மேலும் "ஸ்லம் டாக் மில்லியனியர்" என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதும், 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும், பாஃப்டா விருதும் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையையும் தட்டி சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதனை தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் "பத்ம பூசண் விருது" இவருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையான சேகர் குறித்து சிறப்பான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் ரகுமான். என்னவெனில், ஒரு குறிப்பிட்ட மலையாள படத்திற்கு என் தந்தை சேகர் இசையமைத்தார். அப்போது எந்த ட்யூனை வாசித்து கொடுத்தாலும் அந்தப் படத்தின் இயக்குநருக்கு அந்த ட்யூன் பிடிக்கவும் இல்லை, அதனை ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால் கடுப்பான என் தந்தை, தேசிய கீதமான 'ஜன கன மண' பாடலின் ட்யூனை மெதுவாக வாசித்து காண்பித்தார். உடனே அந்த இயக்குநருக்கு ட்யூன் பிடித்துப்போனது. அப்பொழுது தான் எனக்கு புரிந்தது "என் தந்தைக்கு நிறைய சென்ஸ் ஆஃப் ஹியூமர் இருந்தது" என்று, என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பரவாயில்லை இசையமைப்பாளர் அனிருத் போல நேரடியாக ட்யூனை எடுக்காமல், எடுத்த ட்யூனை தெரியாத படி கொடுத்து இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையான சேகர் என அவரை புகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டு புடவை... தலையில் கனகாமரப்பூ சும்மா தகதகன்னு மின்னிய கீர்த்தி சுரேஷ்!