சினிமா துறையில் தனது முதல் படத்தில் தாவணி பாவாடையுடன் அழகாக வரும் நடிகைகள் நாட்கள் செல்ல செல்ல கவர்ச்சியாக மாறி அனைவரையும் திணறடித்து வருவர்.

அவர்கள் வரிசையில் இன்றும் சினிமாவில் கவர்ச்சி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவரும் மற்ற நடிகைகள் போல தான் ஆரம்பத்தில் கிராமத்து பெண்ணாக தோற்றமளித்தாலும் காலப்போக்கில் சினிமா அவரை கவர்ச்சி நாயகியாக மாற்றி உள்ளது.
இதையும் படிங்க: ஆரஞ்சு கலர் பாவாடை சட்டையில் ஆளை மயக்கும் நடிகை அதுல்யா ரவி..!

அதே போல், பார்க்க அழகாக இருக்கும் அதுல்யா, சேலையில் கூட கவர்ச்சியாக தான் தெரிகிறார். அந்த அளவிற்கு அனைவரையும் வருடி இழுக்கும் கவர்ச்சி முகத் தோற்றத்தை உடைய அழகிய சிற்பமாக மாறி இருக்கிறார் அதுல்யா.

இப்படி இருக்க, நடிகை அதுல்யா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் என்றால் அது "நாகேஷ் திரையரங்கம்" தான்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் இவரது நடிப்பு வெளியுலகத்திற்கு தெரியாமல் போனது. இதனை தொடர்ந்து மனம் தளராத அதுல்யா, தனது அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தார்.

அவர் காத்திருப்புக்கு பலனாக இயக்குனர் சிவராஜ் இயக்கத்தில், புதுமுக நடிகர் ஜிகே உடன் இணைந்து நடித்த "காதல் கண் கட்டுதே" என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.

ஆனால் திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியடித்தாலும் பத்திரிகைகளில் இப்படம் நல்ல கருத்துக்களை பெற்றது.

பின், 2018ம் ஆண்டு இயக்குநர் துரை இயக்கத்தில், சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், ரோசிணி பிரகாஷ், பாலா சரவணன் ஆகியோருடன் அதுல்யா ரவி நடித்து வெளியான திரைப்படம் "ஏமாலி".
இதையும் படிங்க: ஆரஞ்சு கலர் பாவாடை சட்டையில் ஆளை மயக்கும் நடிகை அதுல்யா ரவி..!