தனக்கு பிடித்தமான ஒரு நண்பரை தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து வந்து மாபெரும் சிக்கலில் தவித்து வருகிறது அப்படகுழு என்றே கூறலாம். கமலஹாசன் நடிகர் சிவராஜ்குமாரை பெருமையாக பேசும் வகையில், தமிழிலிருந்து பிறந்த கன்னட மொழியிலிருந்து வந்த ஆருயிர் நண்பரே எனக் கூறிய ஒற்றை வார்த்தைக்காக இன்று ஒரு மாநிலமே மன்னிப்பு கேளுங்கள்....மன்னிப்பு கேளுங்கள்... என்று பரிதவிப்பதை பார்த்து சற்று பாவமாகவே இருந்தாலும், அப்படி கமலஹாசன் என்னதான் தவறு செய்துவிட்டார் என ஒரு பக்கம் அனைவரும் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக மொழியை பற்றி அவதூராக பேசியிருக்கிறார் நடிகர் கமலஹாசன் எனவும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல அரசியல் கட்சிகள் முதல் பல விமர்சகர்கள் வரை தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதிலும் நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் எனவும் மீறி நீங்கள் வெளியிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் எனவும் சொல்லி ஒரு மன்னிப்பை அவர் வாயிலிருந்து வாங்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எதற்கும் அசையாத கமலஹாசனை பார்த்து கோபமடைந்த கிளர்ச்சியாளர்கள் சிலர், சமூக வலைத்தளத்தில் 'ஜனநாயகன்' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட மாட்டோம் பார்த்துக் கொள்ளுங்கள் ஒழுங்காக மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் என்று அழுகாத குறையாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் மணிரத்தினம் - STR காம்போ..! அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..!

அதிலும் கமலஹாசன் என்ன தமிழ் அறிஞரா...உங்களுக்கு என்ன தெரியும், முதலாவது மன்னிப்பு கேளுங்கள் பிறகு படம் ரிலீஸ் ஆவதை குறித்து பார்க்கலாம் என கர்நாடக நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட பின்பும் நடிகர் கமலஹாசன் தனது கடிதத்தில், 'நான் சொல்லியதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள், அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன் என தெரிவித்து இருந்தார். இதனைப் பார்த்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் நாகப்பிரசன்னா, மிஸ்டர் கமலஹாசன் நீங்கள் எழுதி இருக்கும் லெட்டரில் இருப்பது அனைத்தும் சரிதான். ஆனால் மன்னிப்பு என்ற வார்த்தையே இதில் காணுமே... இப்பொழுது நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்களா அல்லது என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்று எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை எனக் கூறினார்.

அதற்கு கமலஹாசன் தரப்பு தவறாக பேசியிருந்தால் தானே மன்னிப்பு கேட்க முடியும்... தவறுதலாக புரிந்து கொள்வதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என தங்களது வாதத்தை முன் வைத்தனர். இதனை அடுத்துப் பேசிய நீதிபதி, உங்கள் ஈகோவில் இருந்து வெளியே வராமல் இருக்கிறீர்கள். அது கமலஹாசனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, நீங்கள் பேசியது மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது. உங்கள் பேச்சால் தான் இவ்வளவு பிரச்சினையும் அதை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் அதற்கு மன்னிப்பு என்ற வார்த்தை நீங்கள் கேட்டே ஆக வேண்டும் என கூறினார். இப்படி இருக்க தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அப்பகுதியில் தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் கமலஹாசன் தன்னுடைய முடிவிலிருந்து மாறாமல் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் கமலஹாசனின் இந்த அமைதியை பற்றி காரசாரமாக பேசி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில், " மன்னிக்கிறவன் மனுஷன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன். இந்த வரிகளை கமலஹாசன் தானே சொன்னார். ஒரு மன்னிப்பு தானே இதை கேட்பதில் அப்படி என்ன உங்களுக்கு ஈகோ. படம் எத்தனை கோடி போட்டு புரொடியூஸ் பண்ணி இருக்கிறோம் அதை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என ஒரு மாநில அரசாங்கம் சொல்லுகிறது. ஒரு உயர் நீதிமன்றம் வந்து சொல்லுகிறது, உங்களுக்கு என்ன அப்படி ஒரு ஈகோ மன்னிப்பு கேட்கிறதுல... ஏன் இந்த மன்னிப்பை நீங்கள் கேட்டிருக்க வேண்டியதுதானே... அந்த வசனத்தினுடைய கடைசி அர்த்தத்தை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதில் சொல்லுவாரு... அவன் தப்பு உணர்ந்து விட்டான் அதனால் மன்னிப்பு கேட்கிறான். தப்பே பண்ணாமல் நான் எதற்கு டா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்வி இருக்குது அல்லவா அதனை எல்லோரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்.

இப்பொழுது எல்லோரும் 'ஸ்டாண்ட் வித் கமலஹாசன்' என சொல்லுகிறார்கள். ஏன் ஸ்டாண்ட் வித் கமலஹாசன் என்ன சொல்லுகிறார்கள், எதற்காக அவருடன் நாம் நிற்க வேண்டும். உண்மையில் சொல்ல வேண்டுமானால் கமலஹாசன் ஒரு தீவிரமான சினிமாவாதி. நான் ஒரு சினிமா விவசாயி என அவர் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார். விவசாயி எப்படி விவசாயத்தின் மீது அதிகமாக காதல் கொண்டிருக்கிறாரோ அதேபோல் தான் சினிமாவின் மீது அதிக காதல் கொண்டவர் கமல்ஹாசன். அப்படிப்பட்ட சினிமா ரிலீஸ் ஆக மறுக்கும் ஒரு மாநிலத்தில் பரவால்ல முடிந்ததை பார்த்துக்கொள் போடா... அப்படின்னு சொல்லுகிற 'ஆண்மை' இருக்குல்ல... அதுதான் பெரியது.

ஏன்..? மறுபடியும் கேட்கிறேன் என்ன கமலஹாசனுக்கு ஈகோ? ஏன்னா... இது அவருக்கோ அவரது படத்துக்கு வந்த பிரச்சனை அல்ல.... இது நம் தாய்மொழிக்கு வந்த பிரச்சனை.... ஒரு மாநிலமே ஒண்ணுமே சொல்லாத ஒரு விஷயத்திற்கு, அதாவது நடிகர் சிவகுமாரை பார்த்து கமலஹாசன், நீயும் நானும் அண்ணன் தம்பி தான் பா... என்ன தமிழ்ல இருந்து தானே உன் மொழியும் பிறந்தது என வரலாறு நிரூபித்த ஒரு உண்மையை மேடையில் சொல்லி இருக்கிறார்.

இத்தனை வருட காலமாக தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள், உலகத்தில் இருந்து இங்கு வந்த வெள்ளைக்காரனே... தென்னிந்தியா, திராவிடத்தில் இருக்கக்கூடிய பகுதிகள் என எல்லா பகுதிகளிலும் ஆராய்ச்சி செய்து வேறு நாட்டுக்காரன் சொன்ன அந்த வரலாறையே நீங்க மறுக்குரீங்கன்னா.. அதற்கான ஆவணச் சான்றுகளை எடுத்துட்டு வாங்க. இந்த நேரத்தில் கமலஹாசன் எடுத்து நிற்கும் ஸ்டாண்ட் இருக்குதுல்ல அதுதான் பெருசு.. படத்த ரிலீஸ் பண்ண மாட்டீங்களா, பரவால்ல பண்ணாதீங்க.. ஏன்னா படத்தை விட மொழி முக்கியம் என அவர் எடுத்த முடிவு. இதற்காகவே கமலஹாசன் அவர்களுக்கு நாம் பெரிய வணக்கம் வைக்க வேண்டும். இந்த சூழலில் அவருடன் நாமும் கைகோர்த்து நிற்க வேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்காக தன்மானத்தை இழந்து வாழ கூடாது. இந்த நேரத்தில் எவ்வளவு திராணியோட, எவ்வளவு திமிருடன், எவ்வளவு ஆண்மையுடன் கமலஹாசன் நிற்கிறார்களோ அதுதான் ஒவ்வொரு தமிழனும் தனது மொழி மீது வைத்திருக்கும் பற்றும் காண்பிக்கிறது. பாரதிதாசன் சொன்னது போல மொழியை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே தமிழைப் பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே எனக் கூறியிருக்கிறார்.

இன்றைக்கு கமலஹாசன் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டிய பொறுப்பில் நாம் அனைவரும் இருக்கிறோம். அவருக்கு பெரிய வாழ்த்துக்களை நாம் சொல்லிவிட்டு அவருடைய கையைப் பிடித்து உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் சார் என நான் சொல்ல தயாராக இருக்கிறேன் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா " என பேசி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: வெளியானது சிம்புவின் "ஓ மாறா" பாடல்..! ரசிகர்களை உற்சாகப்படுத்திய தக் லைஃப் பட சாங்..!