"அமலாபால் நடித்த படம் மைனா... ஐ எம் கம்மிங் ஃப்ரம் சைனா" என்று சிங்கம் - 2 படத்தில் நடிகர் சந்தானம் சொல்லும் அளவிற்கு ஃபேமஸ் ஆக இருப்பவர்தான் நடிகை அமலாபால். பார்க்க குடும்பப் பெண் தோற்றத்தில் இருக்கும் இவரது காந்த பார்வையிலேயே பல இளசுகள் விழுந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் முத்து போன்ற இவரது சிரிப்பு நடிகர் தனுஷ் மட்டுமல்ல பலரது வாழ்க்கையுமே மாற்றி இருக்கிறது.

இப்படிப்பட்ட நடிகை அமலா பாலின் திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் கொடுத்தவைகளாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த 'சிந்து சமவெளி' திரைப்படத்தில் இவர் பல விமர்சனங்களை சந்தித்தாலும் அடுத்தடுத்து வந்த படங்களில் நற்பெயரையே சம்பாதித்து வந்தார். இப்படிப்பட்ட அமலா பால், கேரளா மாநிலத்தில் உள்ள எர்னாகுள நகரத்தில் பிறந்தவர். இவர் பிறப்பால் கிறிஸ்துவ மதத்தினை சார்ந்தவர். அமலா பால் கல்லூரியில் படிக்கும் பொழுதே படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டதால் படவாய்ப்புக்காக பல இடங்களில் அலைந்து திரிந்தார். பின் கேரளாவில் உள்ள மாடலிங் துறையில் பணியாற்றிய அமலா பாலுக்கு 2009-ம் ஆண்டு "நீலதம்ரா" என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படம்..! வெளியான மாஸ் அப்டேட்..!

இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவருக்கும் பிடித்து போக பின் தமிழில் நடிக்க களமிறங்கினார். தமிழில் ஆரம்பத்தில் வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கான சில ரசிகர்களை உருவாக்கினார் அமலா பால். இதனை அடுத்து "மைனா" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய தமிழ் திரையுலகில் தனக்கான ரசிகர்களை பெற்றார். மேலும் நடிகர் விஜயுடன் இவர் நடித்த தலைவா, விக்ரமின் தெய்வத்திருமகள், ஆர்யாவின் சேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அபார திறமையை காட்டியுள்ளார். இப்படிப்பட்ட அமலா பால், கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகனும் உள்ளார்.

இப்படி இருக்க, மைனா, சிந்து சமவெளி, வீரசேகரன், தெய்வத்திருமகள், விகடகவி, வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி, கடவர், விக்டிம், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமலா பால் தனது கணவரை குறித்து பேசிஇருக்கிறார்.

அதில், "எனது வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருகிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவராலும் எனக்கு எந்த திரில்லும் ஏற்பட்டதே கிடையாது. இதனால் மனவேதனை அடைந்த நான் கடவுளிடம் சென்று, 'எனக்கு மட்டும் ஏன்? இப்படிப்பட்ட ஆண் நண்பர்களை கொடுத்து இருக்கிறீர்கள். உண்மையில் நான் இனிமையான பெண் அல்லவா, என்னை ஆச்சரியப்படுத்தும் ஆண் நண்பர்தானே என் வாழ்க்கைக்கு தேவை. அது ஏன் உங்களுக்கு புரியவில்லை' என புகார் செய்தேன். அதன் பின்னர்தான் என் வாழ்வில் வந்தார் எனது அன்பு கணவர் ஜெகத் தேசாய். அவர் எனக்கு நிறையவே திரில் தந்ததுடன் பல ஆச்சரியங்களையும் அள்ளி கொடுத்தார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: தனுஷ் பற்றிய உண்மையை போட்டுடைத்த அமலா பால்..! VIP ஷூட் டைமில் கேரவனுள் நடிகர் செய்த சேட்டை அம்பலம்..!