தமிழ் திரையுலகின் ரூட்டே குடும்ப படங்களிலிருந்து முற்றிலுமாக மாறி ஆக்சன் காட்சிகள், அதிரடி காட்சிகள், கிளாமர் காட்சிகள் என குடும்பங்களே தியேட்டருக்கு வர முடியாத அளவிற்கு மாறிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டதான சூழலில் புதிய படங்களை காண குடும்ப ஆடியன்ஸ் ஒருவருக்கும் நாட்டம் இல்லாமல் போக என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்ற தயாரிப்பாளர்கள் அதற்கு ஒரு வழியை கண்டுபிடித்தனர்.

அதன்படி, மக்கள் அனைவரும் விரும்புவது பழைய படங்களைப் போலவே குடும்ப காட்சிகளையும் சென்டிமென்ட் காட்சிகளையும் தான் என்பதால், பழைய திரைப்படங்களையே ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் மீண்டும் தயாரித்து அத்திரைப்படங்களை ரீலீஸ் செய்து வருகின்றனர். இதனால் தற்பொழுது வெளியாகும் படங்களை விட ரீ-ரிலீஸ் படங்களுக்கு கூட்டங்கள் அலை மோதுகின்றன. தற்பொழுதைய காலகட்டத்தில் மனிதர்களிடம் அன்பு குறைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மீண்டும் அதனை உருவாக்கும் வகையிலான திரைப்படங்கள் வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. அதற்கு உதாரணம் தான் தற்பொழுது நடிகர் சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் வெளியானது. அதேசமயம் நடிகர் சூரியின் 'மாமன்' திரைப்படமும் வெளியானது.
இதையும் படிங்க: அய்யய்யோ சிம்ரனின் உண்மையான பெயர் இதுதானா..! மனம் திறந்த நடிகை..!

இரண்டுமே நல்ல திரைப்படங்கள்தான் ஆனால் ஏன் காமெடி கலந்த 'டிடி நெக்ஸ்ட் லெவலை' மறந்த மக்கள் சென்டிமென்ட் ஆன 'மாமன்' படத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் தற்பொழுது உறவுகளே உறவுகளை அடித்துக் கொள்ளும் காலத்தில் இப்படிப்பட்ட தான படங்கள் தேவைப்படுகிறது என மக்களும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நடிகர் கமல்ஹாசனின் 'தக்லைஃப்' திரைப்படம் பல போராட்டங்களுக்குப் பின்பு வெளியானாலும் ஆக்ஷன் கலந்த அதிரடி திரைப்படம் என்பதால் அந்த படமும் பெயிலியரில் போய் முடிந்துள்ளது. ஆனால் இதே சூழ்நிலையில் வெளியான 'குடும்பஸ்தன்' திரைப்படமாக இருக்கட்டும் அல்லது சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படமாக இருக்கட்டும் இவைகள் இரண்டு படமும் கம்மி பட்ஜெட்டிலேயே உருவானாலும் இந்த படத்தை மக்கள் போற்றுகின்றனர். ஆதலால் இனி வரும் காலங்களிலாவது இயக்குனர்கள் இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இவை அனைத்திற்கும் தற்பொழுது அடித்தளமிட்டிருக்கும் படம் தான் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் அபிஷன் ஜீவந்த் இயக்கத்தில் நடிகை சிம்ரன், நடிகர் சசிகுமார் ஆகியோருடன் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோரின் நடிப்பில் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி அதிரடியாக வெளியான திரைப்படம் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. முழுக்க முழுக்க இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை மக்கள் கண்டு ரசித்து வந்தனர்.

இத்திரைப்படத்தின் கதை எனப் பார்த்தால் இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் கடல் வழியாக தனது குடும்பத்தை அழைத்து வரும் சசிகுமார், யோகி பாபுவின் உதவியால் சென்னைக்கு வருகிறார். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வேலை தேடி வந்த அவருக்கு இறுதியாக கார் ஓட்டும் வேலை கிடைக்க தனது குடும்பத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையிலாக இலங்கையில் இருந்து வந்த ஒரு குரூப் வெடிகுண்டு வைத்ததாக தகவல்கள் பரவ போலீஸ் டீம் அவர்களை தேடி சென்னைக்கு வருகிறது.

ஆனால் அகதியாக இருந்த சசிகுமார் குடும்பத்தை காப்பாற்ற ஒரு காலணியே செய்த உதவி தான் இத்த திரைப்படத்தின் அல்டிமேட் காட்சியாக இருந்தது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க மனிதாபிமானத்தையும் அருகில் யாரும் பேசாமல் இருந்தாலும் பேச்சுத் துணை என்று இருந்தால் அது எவ்வளவு பெரிய பலம் என்பதை உணர்த்தும் திரைப்படமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் யாரும் இல்லாமல் தனிமையில் இருப்பவர்களிடம் காசு பணம் கொடுக்கவேண்டாம். சாப்பிட்டாயா என கேட்கும் ஒரு வார்த்தையே அவர்களது வாழ்வில் மிகப் பெரிய விஷயமாக இருக்கும் என்பதையும் இயக்குனர் உணர்த்தி இருப்பார். இப்படி இருக்க இத்திரைப்படத்தை குறித்து நடிகர் சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராஜமவுலி, நானி, சூர்யா என பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். தற்பொழுது அனைவருக்கும் பிடித்தமான இத்திரைப்படம் ரூபாய் 86 கோடி ரூபாய் வசூல் செய்து ஜூன் 2ம் தேதியில் இருந்து 'ஜியோ ஹாட்ஸ்டாரில்' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தின் இயக்குனரான அபிஷன் ஜீவந்த் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பதிவிட்டு அதன் கீழாக தனது சொந்த ஊரில் ஆட்டோ டிரைவருடன் ஏற்பட்ட உரையாடல்களை பொங்க தெரிவித்திருக்கிறார். அதில், " நான் முகமூடி அணிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அண்ணா திடீரென்று யூடியூப்பில் "முகை மழை" பாடலைப் போட்டார். என் முகம் உடனடியாக பிரகாசித்தது, அவருக்கு படம் பிடித்திருக்கிறதா? என்று நான் அவரிடம் கேட்டேன். தயக்கமின்றி, அவர், "நான் டூரிஸ்ட் ஃபேமிலியை தியேட்டரில் மூன்று முறை பார்த்தேன்" என்று கூறினார், மேலும் அவர் தனது கையை காண்பித்து "என் கைகளைப் பாருங்கள்! இந்தப் படத்தைப் பற்றிப் பேசும் பொழுதே எனக்கு புல்லரிக்கிறது. அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்றார்.

பின்னர் அவர் சசிகுமார் சாரின் கதாபாத்திரத்துடன் எவ்வாறு ஆழமாக இணைந்திருக்கிறார் என்பதைப் பற்றிப் பேசத் தொடங்கினார், குடும்பத்தின் எதிர்காலத்திற்காக கடுமையாகப் போராடிய தனது சொந்த தந்தையுடன் அவரை ஒப்பிட்டார். அவரது தந்தை இப்போது இல்லை, படத்தைப் பார்த்ததும் வலுவான நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தார். அவர் உணர்ச்சிவசப்பட்டு, கொஞ்சம் உடைந்து போனார். நான் படத்தின் இயக்குனர் என்று நான் அவரிடம் சொன்னபோது, அவர் மகிழ்ச்சியில் மூழ்கி, படத்தின் மீதான தனது அன்பை முழு மனதுடன் வெளிப்படுத்தினார். என்ன ஒரு தருணம். உங்கள் சிறிய பங்களிப்பின் காரணமாக ஒருவர் புன்னகைக்கிறார், குணமடைகிறார் அல்லது ஆழமாக உணர்கிறார் என்பதை நீங்கள் உணரும்போது - அந்த வகையான மகிழ்ச்சி உண்மையிலேயே அளவிட முடியாதது " என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மம்முட்டியான் பாடலை யாரை கேட்டு பயன்படுத்தினீங்க.. டூரிஸ்ட் ஃபேமிலியில் வந்த பாடலுக்கு தியாகராஜன் ரியாக்ஷன்..!