தமிழ் திரையுலகில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்த சிம்ரனை மக்கள் ரசிக்க தொடங்கியுள்ளனர் என்றே சொல்லலாம். சமீபத்தில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் ஒரே ஒரு ரோலில் வந்தாலும் திரிஷாவை ஓரம் உட்கார வைத்து அந்த கிரிடிட்டை மொத்தமாக தட்டி சென்று விட்டார் சிம்ரன். இவரால் மீண்டும் தமிழ் நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர். மாஸ் ஆக்ஷன் காட்சிகளில் தற்பொழுது நடித்து வரும் நயன்தாராவையே பின் தள்ளவிடுவார் போல் இருக்கிறது இவரது நடிப்பு. இப்படி சரளமாக பேசும் சிம்ரன், உண்மையில் மும்பையை சேர்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், மும்பையை சேர்ந்த சிம்ரன், தமிழ் திரையுலகில் 1997ம் ஆண்டு வெளியான "ஒன்ஸ்மோர்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை அடுத்து நடிகை சிம்ரன் தமிழில் பல படங்களில் நடிக்க அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும், 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு படத்திற்கு ரூ.75லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகையும் இவர் தான். இதனை அடுத்து, தமிழ் திரையுலகில் மட்டும் 10 விருதுகளை இதுவரை வென்றுள்ளார். மேலும், 4 பிலிம்பேர் விருதுகளையும் இதுவரை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: மம்முட்டியான் பாடலை யாரை கேட்டு பயன்படுத்தினீங்க.. டூரிஸ்ட் ஃபேமிலியில் வந்த பாடலுக்கு தியாகராஜன் ரியாக்ஷன்..!

தமிழில் மட்டும் இதுவரை நடிகை சிம்ரன், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், அவள் வருவாளா, கொண்டாட்டம், நட்புக்காக, ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, உன்னை கொடு என்னை தருவேன், பிரியமானவளே, 12 B, பார்த்தாலே பரவசம் , பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ரமணா, கன்னத்தில் முத்தமிட்டாள், யூத், கோவில்பட்டி வீரலட்சுமி, உதயா, பிதாமகன், நியூ, ஆய்த எழுத்து, நம் நாடு, சத்தம் போடாதே, சேவல், வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை, தநா -07 அல 4777, பேட்ட, பாவ கதைகள், மகான், ராக்கெட்ரி: நம்பி விளைவு, கேப்டன், அந்தகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், 'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து, சிம்ரன் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சிம்ரனை கண்ட ரசிகர்கள் அனைவரும் அவரை நிறைய படங்களில் நடிக்க சொல்லி பாச மழை பொழிந்து வருவதால் நடிகை சிம்ரன், இனி அடுத்தடுத்து குடும்ப சென்டிமெண்ட் கதைகளில் பெரும்பாலும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதேபோல இனி வரும் காலங்களில் சண்டைபோடும் ஆக்சன் வேடங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன். என் தெரிவித்திருந்தார். இதனால் தமிழ் திரையுலகில் மறைந்து போன, சிம்ரன், ரம்பா, சினேகா என பலரும் கம்பேக் கொடுப்பதால் தற்போதைய நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.

இப்படி இருக்க, தற்பொழுது தனியார் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை சிம்ரன் தனது உண்மையான பெயரை கூறியிருக்கிறார். அவர் பேசுகையில், " எனது உண்மையான பெயர் சிம்ரன் அல்ல... என் உண்மையான பெயர் 'ரிஷிபாலா'தான். இப்பொழுதும் என் குடும்பங்கள் உறவுகள் அனைவரும் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். என் பாஸ்போர்ட்டில் கூட அந்த பெயர்தான் இருக்கும். ஆனால், 'ரிஷி' என்கிற பெயர் ஆண் பெயர் போல இருக்கிறது என யோசித்த இயக்குநர் சாவென் குமார் டக்தான் என் பெயரை சிம்ரன் என மாற்றினார்.

உண்மையிலேயே, என்னுடைய பெயரையே எனக்கு முதலில் உச்சரிக்கவே தெரியவில்லை மிகவும் கஷ்டப்பட்டேன். ஏனெனில் 'சிம்ரன்’ என்பது பஞ்சாபி பெயர். நானும் பஞ்சாபி தான் ஆனால், எனக்கு சுட்டுப்போட்டாலும் பஞ்சாபி வராது. காரணம் நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை தான்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோடை விடுமுறை முடிவில் டூருக்கு போலாமா...? இப்பொழுது ஓடிடியில் வந்தாச்சு "டூரிஸ்ட் ஃபேமிலி"..!