தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு முன்பு, மாடலாக இருந்த திவ்ய பாரதி, 2015ம் ஆண்டில் "மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்" பட்டத்தையும், அதே ஆண்டில் "பிரபலமான புதிய முகம் மாடல் என்ற பட்டத்தையும் வென்றார்.

பின்னர் 2016ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற அழகி போட்டியில் 'பிரின்சஸ் ஆஃப் கோயம்புத்தூர் 2016' என்ற பட்டத்தைப் பெற்றார்.
இதையும் படிங்க: ‘ரசவாதி’ படத்திற்கு சர்வதேச பாராட்டுடன் விருது...! பிரான்ஸ் திரைப்பட விழாவில் சுவாரசியம்..!

இதனை தொடர்ந்து, மாடலிங்கில் பல்வேறு வாய்ப்புகள் திவ்யபாரதிக்கு கிடைக்க, பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அதன்பின் 2021ம் ஆண்டு வெளியான "பேச்சிலர்" திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

இதனால் இப்படத்தில் நடித்தமைக்காக "எடிசன் விருதுகள் 2022 இல், அவர் ரைசிங் ஸ்டார் ஃபிமேல் விருதையும்" பெற்றார்.

இதனை அடுத்து, தற்பொழுது வெளியான யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலருடன் நடிகை திவ்யபாரதியும் இணைந்து நடித்துள்ள இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேய் படம் தான் 'கிங்ஸ்டன்'.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவ்யபாரதி, இந்த படத்தின் கதையை இயக்குநர் கமல் தன்னிடம் சொன்னபோது ஒரு லுக் அவுட் வீடியோவையும் காண்பித்தார் அதை பார்த்த உடனே இப்படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டேன் இதனால் முதல்முறையாக நான் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன் என கூறியிருந்தார்.

பேச்சிலர் படத்தை தொடர்ந்து இப்படத்திலும் ஜீவியுடன் இவர் இணைந்து நடித்துள்ளதால் ஜீவிக்கும் திவ்யபாரதிக்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சங்கீதா மற்றும் கிரிஷ் ஜோடி விவாகரத்து வதந்தி..! நேரடியாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை..!