அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டெஸ்பூர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர் நடிகை கயாடு லோஹர். அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்த பின், முதலில் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்ட அவர் படிப்பை முடித்த பின் மாடலிங் பக்கம் செல்ல விருப்பப்பட்டார். இதனால் முறையாக மாடலிங்கில் கவனம் செலுத்தி பல மேடைகளை கண்ட கயாடு-க்கு அதன் மூலம் நல்ல அடையாளமும் கிடைத்தது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் `Everyuth Fresh Face' என்ற நிகழ்ச்சியின் 12-வது சீசனின் டைட்டிலையும் வென்றிருக்கிறார். அவ்வளவு தான் அதன் பிறகு இவரது முகத்தை பார்த்த இயக்குநர்கள் இவரை வைத்து படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர். இதனை அடுத்து, 2021-ம் ஆண்டு 'முகில்பேடே' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கயாடு. இத்திரைப்படத்தை தொடர்ந்து அந்த ஆண்டிலேயே மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பித்தார். இதனை அடுத்து இவர் நடித்த டிராகன் படம் இவரை மக்களுக்கு அடையாளம் காட்டியது.
இதையும் படிங்க: ஒரே பார்ட்டி.. சோலியை முடித்த தயாரிப்பாளர்.. சிக்கலில் கதறும் கயாடு லோஹர்..!

மேலும், தற்பொழுது 'இதயமுரளி' படத்திலும் நடித்து வரும் கயாடு, அடுத்ததாக STR 49, ஜீ.வி.பிரகாஷ் உடன் ஒரு படம் என பல படங்களை தனது கையில் வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தினார் கயாடு. அந்த வகையில், டிராகன் படத்தில் ரூ.30 லட்சம் வரை சம்பளமாக பெற்ற கயாடு லோஹர் தற்பொழுது இதயமுரளி மற்றும் சிம்பு படத்தில் நடித்து வருவதால், தான் நடித்து வரும் படங்களுக்கு ரூ.2கோடியை சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர், விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் ஆஜராகாததால் அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பு வட்டத்தில் வசமாக சிக்கி இருந்தார் ஆகாஷ் பாஸ்கரன்.

இப்படி இருக்க, டாஸ்மார்க் ஊழலை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த அமலாக்கத் துறை சோதனையில் வசமாக சிக்கி உள்ள தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் லிஸ்டில் நடிகை கயாடு லோஹரின் பெயரும் இடம் பெற்று இருந்தது. இது தொடர்பாக விசாரித்ததில், ஆகாஷ் பாஸ்கரன் நடத்தும் பார்ட்டிகளுக்கு நடிகை கயாடு லோஹர் அடிக்கடி சென்று இருப்பதும் அவர்களது நட்பு வட்டாரத்தில் இவர் இருப்பதும், பல லட்சம் பணங்களை பரிசாக பெற்று இருப்பதும் தெரியவந்தது.

சினிமாவில் ஒரே படத்தில் உச்சிக்கு செல்ல நினைத்த கயாடு லோஹரின் இமேஜும் ரசிகர்களது வெறுப்பையும் சம்பாரித்து படிப்படியாக கீழே இறங்கி வருகிறார் லோஹர். இதனால் மிகுந்த வேதனையில் இருக்கும் நடிகை கயாடு, இவற்றை எப்படி சரி செய்வது மீண்டும் தன்னுடைய ரசிகர்களை கவர என்ன செய்வது என யோசித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் நடித்து வரும் பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்திற்காக அவர் பட்ட பாடுகள் மற்றும் கஷ்டங்களை விவரிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக தன் உடல் முழுவதும் மண்ணும், ரத்தமும் கலந்த மேக்கப் போட்டு சூட்டுக்கு தயாராகும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த விடியோவானது தற்பொழுது இணையத்தில் அதிகப்பேரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: STR-கே ஜோடின்னா சம்பளம் உயர்த்த வேண்டாமா.. என்ன பாஸு..! நடிகை கயாடு லோஹர் அதிரடி..!