நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். கடந்த 1995ம் ஆண்டு மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பெயரும் 'கூலி' தான். தற்பொழுது ரஜினி நடித்திருக்கும் படத்தின் பெயரும் 'கூலி' என்பதால் ரசிகர்களிடம் இப்படம் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

மேலும் இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது 'கூலி' திரைப்படம். மேலும்,கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பற்றி உள்ளது. இப்படி இருக்க, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் படத்தில் சந்தானம்..! 11 ஆண்டுகளுக்கு பின் இணையும் அட்ராசிட்டி கூட்டணி..!

இந்த சூழலில், கூலி படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவடைந்துள்ளதால் தற்பொழுது தனது 172வது படமான ஜெயிலர் 2 திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் ஒன்றாம் பாகத்தின் தொடர்ச்சியே ஜெயிலர் 2 ஆகும். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் படைப்பும் அனிரூத் இசையும் மட்டுமே.

ரூ600 கோடிக்கு மேல் வசூல் மாபெரும் வெற்றியை தேடி தந்த ஜெயிலர், 2வது பாகத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இப்படி இருக்க, கோயம்பத்தூரில் நடைபெற்ற முதல்கட்டப்படப்பிடிப்பை முடித்த ரஜினி தற்பொழுது கேரளாவில் அடுத்த கட்ட படிப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்த சூழலில், இப்படத்தில் ஏற்கனவே நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவையும் நடிக்க வைக்க திட்டம் திட்டியுள்ள நெல்சன் தற்சமயம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் நல்ல செய்திகள் வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயிலர்-2வை பார்த்து தியேட்டரே அதிரப்போகுது..! நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அப்டேட்..!