இந்திய திரையுலகில் பல நடிகர்கள் இருந்தாலும், இன்றும் தனியாக தெரிந்தவர் நடிகர் தனுஷ் தான். இவருக்கு என்ன தான் திறமை இல்லை என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு இன்று அவரது வாழ்க்கை மாறியுள்ளது எனலாம். அப்படிப்பட்ட இவரது இயற்பெயர் என்ன என்று கேட்டால் "வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா" என்று கூறுவர். இதுமட்டுமல்லாமல் இவரை "இந்தியன் புரூஸ் லீ" என்று பலரும் அழைக்கின்றனர். அந்த அளவிற்கு தற்பொழுது அவரது உடலை செதுக்கி சீஃஸ் பேக் வைத்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து, நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய தனுஷ், தற்பொழுது கோலிவுட், பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இப்படி, இன்று உலகையே தனது திறமையால் கையுக்குள் வைத்து கலக்கி வரும் தனுஷின் ஆரம்ப வாழ்க்கையில் அவருக்கு அச்சாணியாக இருந்த முதல் படம் 2002-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான "துள்ளுவதோ இளமை" என்ற திரைப்படம் தான்.
இதையும் படிங்க: தக் லைஃப் பட முத்தக்காட்சி சர்ச்சை..! அதிரடி பதிலால் ஆஃப் செய்த நடிகை அபிராமி..!

ஆனால் முதலில் நடிகர் தனுஷை யாரும் நடிகராக ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக நிறைய அவமானங்களை சுமந்தார். இந்த சூழலில் தனக்கு வந்த கேலி கிண்டல்களை பொருட்படுத்தாமல் திருடா திருடி, திருவிளையாடல், பொல்லாதவன், படிக்காதவன், வேங்கை, வேலையில்லா பட்டதாரி, த்ரீ, மாரி, ராயன் என வரிசையாக பல படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தை திரையுலகில் பிடித்தார்.

இப்படி, பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறிய தனுஷை "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்தின் மூத்த மகளான "ஐஸ்வர்யா ரஜினிகாந்த்" காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் பிரிந்து உள்ளனர். மேலும் தனுஷின் பெற்றோர்கள் என ஒரு தம்பதி வந்து அவரை பாடாய்ப்படுத்தினர். இத்தனை வலிகளையும் தாங்கி கொண்ட தனுஷ் தனது கெரியரில் முழு கவனம் செலுத்தி தற்பொழுது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னாவை வைத்து அவர் இயக்கியிருந்த 'பவர் பாண்டி' திரைப்படம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்தார். ஆனால் அப்படம் தோல்வியை சந்தித்தது.

இந்த சூழலில், அவ்வளவுதான் தனுஷ் என அனைவரும் கூறிய நிலையில், தற்பொழுது அவர் தயாரிப்பில் வெளியான neek திரைப்படம் பெரிய ஹிட் கொடுத்தது. இந்த நிலையில்,"இட்லி கடை" என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் நடிப்பில் "குபேரா" என்ற திரைப்படம் வரும் ஜூன் 20-ம் தேதி வெளிவர உள்ளது. இப்படி இருக்க, நடிகர் தனுஷ் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் தன்னை பற்றி வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதன்படி, அவர் பேசுகையில், "எவ்ளோ வதந்திகளை வேண்டுமானாலும் பரப்புங்க. எப்படிப்பட்ட நெகட்டிவிட்டி வேண்டுமானாலும் பரப்புங்க. என்னுடைய ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆவதற்கு முன்பு என்னைப்பற்றி நெகட்டிவிட்டியை கொஞ்சம் நல்லாவே பரப்புங்க.

தம்பிங்களா என்கிட்ட விளையாடும் பொழுது கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க ராஜா. மனதார சொல்லுகிறேன், இங்கு அமர்ந்திருக்கும் அனைவரும் என் ரசிகர்கள் கிடையாது, எனது சினிமா பயணத்தில் 23 வருஷமாக என் கூடவே பயணித்த கம்பெனிஷன்ஸ். அதுனால என் படம் ரிலீசாவதற்கு முன்பு நீங்க பரப்பும் ஒரு வதந்தியால் என்னை காலி செய்துவிட முடியும் என நினைத்தால் அதை விட முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. என்னிடத்தில் இருந்து ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது. ஏனெனில் சந்தோசம் நிம்மதிக்கு மேல் வாழ்க்கையில் எதுவுமே நமக்கு முக்கியம் இல்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தன்னை பற்றி பேசிய நடிகர் கமல்ஹாசன்.. தரமான பதில் கொடுத்த நடிகர் நானி...!