கடந்த 2022-ம் ஆண்டு ஹோம் பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரிஷப் செட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கன்னடத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என அனைத்து மொழிகளிலும் வெளியானது. இந்த காந்தாரா திரைப்படத்தின் முதல் பாகத்தை பார்த்து ஈர்க்கப்பட்ட அனைவரும் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை காண மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனால் கடந்த வருடத்திலிருந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இப்படி இருக்கையில் இப்படத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்ட 'துணை நடிகரான கபில்' ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் மரணம் அடைந்தார். அடுத்த ஒரு வாரத்தில் படத்தில் நடித்து வந்த வேறொரு நடிகரான 'ராஜேஷ் பூஜாரி' திடீரென மாரடைப்பால் உயிர் இழந்தார். அடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு-க்காக வந்த கேரளாவைச் சேர்ந்த 'பிஜு' என்பவர் ஹோட்டலில் தங்கி இருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையும் படிங்க: நடிகர் ஆர்யா சொன்னது உண்மையா? - பிரபல ஓட்டலை யாருக்கு விற்றிருக்கிறார் தெரியுமா?

இதனால் இப்படத்தை எடுக்கவே பயந்து எல்லோரும் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கும் வேலையில் கர்நாடகாவில் உள்ள மாணி என்ற அணைப்பகுதியில் 'காந்தாரா - 2 படத்திற்கான படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வந்தது. அப்பொழுது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆழம் குறைவாக இருந்ததால் அனைவரும் சில காயங்ககளுடன் உயிர் தப்பினர். இதனால் படக்குழுவினர் பயந்து போய் இருப்பதற்காகவும் ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பதாகவும் அனைவரும் பேசிவரும் நிலையில், காந்தாரா - 2 படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆதர்ஷ் இதனை குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், " நாங்கள் மாணி ஆற்றில் சூட்டிங் எடுப்பது உண்மைதான். ஆனால் நாங்கள் சென்ற எந்த படகும் கவிழவில்லை.

தற்போது படக்குழுவினர் மாஸ்திகட்டேயில் உள்ள மணி நீர்த்தேக்கத்தின் அருகில் தான் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அங்கு இருந்த ஒரு பெரிய படகின் பின்னணியில் தான் இந்த படப்பிடிப்பே நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த நேரத்தில் பருவமழை காரணமாக, அந்த படகின் மேல்பகுதி கவிழ்ந்தது. ஆனால் பட குழுவினர் அனைவரும் தரையில் இருந்து படத்தை இயக்கி கொண்டு இருந்ததால் அவர்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த படப்பிடிப்பை வனத்துறை, உள்ளூர் காவல்துறை, மற்றும் ஊர் தலைவர்களிடமும் அனைத்து அனுமதிகளையும் பெற்று தான் இயக்கி வருகிறோம். தயவு செய்து எந்த செய்திகள் வந்தாலும் அல்லது வதந்திகள் வந்தாலும் உடனே அதனை 'காந்தாரா' படத்துடன் இணைப்பதை நிறுத்துங்கள். உண்மையிலேயே நாங்கள் எதற்கு இப்படி உயிரைக்கொடுத்து கடுமையாக உழைத்து கொண்டு இருக்கிறோம் தெரியுமா.. ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை கொடுப்பதற்காகவே தான்.

எந்த கவனச்சிதறல் இல்லாமல் படக்குழு வேலை செய்ய வேண்டுமானால் உங்கள் வதந்திகளை நீங்கள் கொஞ்சம் நிறுத்தவேண்டும். ஆதலால் தயவு செய்து அனைவரையும் பயமின்றி படத்தை இயக்க அனுமதிக்குமாறு கேட்டு கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!