நடிப்பில் புலியாக திகழும் சித்தார்த்தின் உண்மையான பெயர் சூரியநாராயண். சென்னையில் பிறந்த நடிகர் சித்தார்த் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். பின்பு இவர் சினிமாவில் அடியெடுத்து வைத்த முதல் படமான "பாய்ஸ்" திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

இதனை தொடர்ந்து, ஆய்த எழுத்து, நூற்றெண்பது, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்.எச்4, தீயா வேலை செய்யணும் குமாரு, காவியத்தலைவன், ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக், அரண்மனை 2, அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை, நவரசா, சித்தா, டக்கர், இந்தியன் 2, மிஸ் யூ, லவ்வர், அயலான், சித்தார்த் 40 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் கிரிக்கெட் சம்பந்தமான "டெஸ்ட்" திரைப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதையும் படிங்க: திகில் கிளப்பும் விஜய் ஆண்டனியின் "மார்கன்"..! படத்தின் முதல் 6 நிமிட வீடியோவால் அரண்டு போன ரசிகர்கள்..!

என்னதான் இருந்தாலும் அவருடைய படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். குறிப்பாக "ஏன்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு" என்ற பாடலை கேட்டால் அனைவரது எண்ணத்தில் தோன்றும் ஒரே நடிகர் சித்தார்த் மட்டுமே. இவர் பேச்சுகளும் பார்வைகளும் நடிப்புகளும் விதவிதமாக... ரகரகமாக... அற்புதமாக இருக்கும். அந்த வகையில், இவரது நடிப்பில் வெளியான "சிவப்பு மஞ்சள் பச்சை" படத்தில் சிறந்த காதலனாகவும், மச்சானுக்கு மாமனாகவும், சிறந்த போலீஸாகவும் நடித்து இருப்பார். இந்த நடிப்பு பலரையும் கவர வைத்தது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான "இந்தியன் 2" படத்தில் நடித்து இருப்பார். அப்படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியில் "தனது பெயரை கூறி சோஷியல் மீடியா சார்" என்று போலீஸிடம் பதில் கூறி பல மக்களின் ட்ரோலுக்கு ஆளாகி இருப்பார். இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் இதுவரை தோற்றதாக சரித்திரமே இல்லை . கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் கண்டிப்பாக ஓடிவிடும். அதே போல் நடிப்பில் மிகவும் ஆர்வமுள்ள இவர் பாடகராகவும், திரைக்கதை எழுத்தாளருமாகவும், சினிமா துறையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இப்படி இருக்க, தற்பொழுது சித்தார்த்தின் நடிப்பில் வெளியாக உள்ள "3BHK" பட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் ஒரு நடுத்தர குடும்பத்தில் வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, வீடு கட்டுவதற்காக போராடி தோற்றுப்போகும் அப்பா சரத்குமார், அப்பா கனவை நினைவாக்க போராடும் சித்தார்த், ஆனால் அவருக்கு படிப்பு கைகொடுக்காமல் போகவே மிகவும் போராடி முயற்சி செய்து கடைசியில் வீடு வாங்குவாரா..? மாட்டாரா..? என்பதை ட்ரெய்லரின் முக்கியமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ட்ரெய்லரில் சரத்குமார், "வீடு தானே நமக்கு கௌரவம்" என்பது எல்லாம் அல்டிமேட்டாக உள்ளது. ஜூலை 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காதுலே..! போதை பொருள் வழக்கில் ஷாக் கொடுத்த கிருஷ்ணாவின் மெடிக்கல் ரிப்போர்ட்..!