யார் கண் பட்டதோ என தெரியவில்லை நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. இதற்கு முன்பாக நடிகர் கமலஹாசன், பிரபல இயக்குனரான ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் படுதோல்வி அடைந்த பின்பு... பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவான 'தக் லைப்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் அவருக்கு தோல்வியை கொடுக்க தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாதபடி அமர்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.

இப்படிப்பட்ட சூழலில் படத்தைக் குறித்து பல நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வரும் வேளையில், ஒருபுறம் நல்லவேளை இந்த படத்தை இங்கு வெளியிடவில்லை என ஒரு கூட்டம் எள்ளி நகையாடி வருகிறது. அப்படி என்னதான் இத்திரைப்படத்தில் மணிரத்தினம் கதையை வைத்திருக்கிறார் என பார்த்தால், "வழக்கம்போல நடிகர் கமலஹாசனுடைய கேங்கிற்கும் சட்டத்தை காப்பாற்றுகின்ற போலீசுக்கும் இடையே நடக்கும் தகராறில் பாவம் பரிதாபமாக நடிகர் சிம்புவின் அப்பா கொல்லப்படுகிறார்.
இதையும் படிங்க: 'தக் லைஃப்' படம் இன்னும் பாக்கலையா.. பாதி "ஜில்லா" பாதி "செக்க சிவந்த வானம்".. படம் அப்படி இருக்கு..!

இப்படி சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த நடிகர் சிம்பு, அந்தத் தகராறில் தான் ஆசை ஆசையாய் பார்த்துக் கொண்ட தனது சகோதரியும் தொலைத்து விட்டு பிரிந்து செல்கிறார். இந்த சூழலில் 'ஜில்லா' திரைப்படத்தில் நடிகர் விஜயை எடுத்து மோகன்லால் வளர்க்கிறாரோ அதேபோல, தந்தை இழந்து பரிதாபமாக நிற்கும் சிம்புவை எடுத்து வளர்க்கிறார் நடிகர் கமலஹாசன். கமலஹாசன் சொல்லும் அனைத்து விஷயங்களையும் தட்டாமல் செய்கின்ற நடிகர் சிம்புவை தனது கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்திற்கு தலைவனாகவும் இளவரசனாகவும் அறிவிக்கிறார் கமல். அந்த நேரத்தில் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் வருவதைப் போலவே நடிகர் கமலஹாசன் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது.
இதில் பலத்த காயம் அடைந்த நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வர, அந்த சமயத்தில் தன்னுடைய இடத்தை பிடிக்க சிம்பு தான் இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என கமலஹாசன் தீர்க்கமாக நம்புகிறார். இதனை அறிந்து மனம் உடைந்து போன சிம்பு தன்னை இத்தனை வருடங்களாக வளர்த்த தனது தந்தையே இப்படி நினைத்து விட்டாரே என மனம் சோர்ந்து அவர் மீது வைத்த மொத்த நம்பிக்கையும் இழந்து போகிறார். வழக்கம்போல இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாசர், பகவதி, ஜோஜூ ஜார்ஜ் ஆகிய மூவரும் திட்டம் தீட்டி சிம்புவினுடைய கைகளாலே கமலை கொள்ள வகை தேடினர். அவர்களது திட்டம் போட்டபடியே, சிம்பு அவரை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவரை கீழே தள்ளிவிட பாவம் கமலஹாசன் பரிதாபமாக இறந்து விடுவார். அவ்வளவுதான் இதற்குப் பின்பு தான் கதையே சூடுபிடிக்க ஆரம்பித்தது.

நாம் அனைவரும் ட்ரெய்லரில் பார்த்ததைப் போல கமல் இறந்து விட்டார் என்று கூறி 'இனிமேல் நான் தான் இங்க ரங்கராய சக்திவேல்' என சிங்கம் கர்ஜிப்பதை போல் கர்ஜித்து கமலின் இடத்தை சிம்பு பிடிக்கிறார். இதனை அடுத்து நடிகர் கமலஹாசன் உயிரோடு வருகிறாரா? இல்லையா" தனது இடத்தை பிடிக்கிறாரா? இல்லையா? அல்லது தன்னை மலையிலிருந்து தள்ளிவிட்ட சிம்புவை பழிவாங்குவாரா? மாட்டாரா? என்பதெல்லாம் மீதி கதையாக உள்ளது.

இப்படி ஒரு கதையை எடுத்து வைத்திருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தை பலரும் வசைப்பாடிவரும் இந்த நேரத்தில் பல இயக்குனர்கள் இந்த திரைப்படத்தை பாராட்டியும் வருகின்றனர். மேலும், தக் லைஃப் படம் வெளியான நாளில் இருந்து இதுவரை ரூ.82 கோடி மட்டுமே வசூல் செய்து படுதோல்வியை சந்தித்துள்ளது. இப்படியான சூழலில், இந்த படத்தின் கதையை நாங்கள் எங்கேயோ கேட்டிருக்கிறோமே என ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் இது நடிகர் விஜயின் ஜில்லா படம் எனவும், செக்கச்சிவந்த வானம் எனவும் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் நம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இப்படத்தின் முதல் பாகம் முழுவதும் ஒரு நாவலின் கதை என்பதை தற்போது ரசிகர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

அதன்படி, இத்திரைப்படத்தின் சில காட்சிகள் 'என். கணேசன்' என்பவர் எழுதிய 'அமானுஷ்யன் ' என்ற நாவலில் எழுதிய கதையாகவே இருக்கிறது என்றும் அந்த நாவலின் ஆரம்ப அத்தியாயங்களைப் படித்து பார்த்தால் அவை அனைத்தும் அப்படியே தக் லைப் படத்தின் காட்சிகளாக இருப்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. மேலும், இப்படத்தில் வரும் சில வசனங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டு மக்கள் பார்க்கும் வகையில் காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது. இப்படி இருக்க ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தை புத்தகத்தை பார்த்து எடுத்த மணிரத்தினம் இந்த திரைப்படத்தையும் அப்படியே அப்பட்டமாக காப்பி பேஸ்ட் செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தக் லைஃப் ரிலீஸ் நேரத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ..! படத்தின் காட்சிகள் அதில் இடம்பெற்றதால்...?