தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காலமாக பொங்கல் திருவிழா சீசன் கருதப்படுகிறது. குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில், அடுத்தாண்டு பொங்கல் சீசன் மிகுந்த போட்டித் தன்மையுடன் உருவாகி வருகிறது என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல பெரிய படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் மேலும் ஒரு முக்கிய திரைப்படம் இணைந்துள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்துள்ள “மன சங்கர வரபிரசாத் கரு” (எம்.எஸ்.வி.ஜி) திரைப்படம், ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே மட்டுமின்றி, திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இருக்க சிரஞ்சீவி, பல தசாப்தங்களாக தெலுங்கு சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வரும் நடிகர். அவரது ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், நயன்தாராவுடன் அவர் இணைந்து நடித்துள்ள இந்த படம், அவரின் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக அமையும் என கூறப்படுகிறது. நயன்தாராவும், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து, கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் என்பதால், இந்த கூட்டணி அதிக கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: என்னப்பா.. திணறடிக்கும் ட்ரீட் கொடுக்கிறீங்க..! நயன்தாரா Birthday-க்கு 'NBK111' பட First Look அப்டேட்.. மாஸ்..!

இந்த திரைப்படத்தில், வெங்கடேஷ் மற்றும் கேத்தரின் தெரசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, வெங்கடேஷ் மற்றும் சிரஞ்சீவி ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. இருவரும் தெலுங்கு சினிமாவின் மூத்த மற்றும் மதிப்புமிக்க நடிகர்கள் என்பதால், அவர்களின் கூட்டணி திரையில் எவ்வாறு வெளிப்படும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் பீம்ஸ் சிசிரோலியோ. இவர் ஏற்கனவே பல வெற்றிப்பாடல்களை வழங்கியுள்ள நிலையில், இந்த படத்திலும் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் இசை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் வெளியீடு என்பதால், பாடல்கள் மற்றும் பின்னணி இசை முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கியவர் அனில் ரவிபுடி. காமெடி, குடும்ப உணர்வுகள் மற்றும் வணிக அம்சங்களை சரியான அளவில் கலந்து, வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநராக அவர் அறியப்படுகிறார். அதனால், “மன சங்கர வரபிரசாத் கரு” திரைப்படமும் ஒரு முழுமையான பொங்கல் விருந்தாக அமையும் என திரை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தை, ஷைன் ஸ்க்ரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் கீழ், சாஹு கராபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா இணைந்து தயாரித்துள்ளனர்.
பிரம்மாண்ட தயாரிப்புகள் மற்றும் தரமான திரைப்படங்களை வழங்குவதில் இந்த தயாரிப்பு நிறுவனங்கள் பெயர் பெற்றவை என்பதால், இப்படத்தின் தயாரிப்பு மதிப்பு குறித்தும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு நிகழ்ச்சியின் போது, இயக்குநர் அனில் ரவிபுடி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேட்டியில், அவர் இந்த படம் உருவான விதம், நடிகர்கள் தேர்வு மற்றும் தனது தனிப்பட்ட விருப்பங்கள் குறித்து சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, கதாநாயகி நயன்தாரா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அனில் ரவிபுடி அளித்த பதில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. “பலர் என்னிடம் கேட்டார்கள், நயன்தாரா இந்த படத்திற்கு எப்படி ஒப்புக்கொண்டார் என்று. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் நேரம் நன்றாக இருந்தது. அவர் ஒப்புக்கொண்டார்” என்று அவர் நகைச்சுவையுடன் கூறினார்.

இந்த பதில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே சிரிப்பையும் கைதட்டலையும் பெற்றது. குறிப்பாக நயன்தாரா, சமீப காலங்களில் மிகவும் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து வருவதால், அவர் சிரஞ்சீவியுடன் இந்த படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. அதனால், இந்த படத்தில் அவரது கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், அனில் ரவிபுடி தனது நீண்ட நாள் கனவு ஒன்றையும் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “தெலுங்கு சினிமாவின் நான்கு தூண்களாக கருதப்படும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா மற்றும் வெங்கடேஷ் ஆகிய நால்வரையும் ஒரே படத்தில் அல்லது ஒரே திரையில் காண்பிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “அந்த கனவின் ஒரு பகுதி இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
சிரஞ்சீவி மற்றும் வெங்கடேஷை ஒரே படத்தில், ஒரே திரையில் காட்டும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றும் அவர் கூறினார். அவரது இந்த உரை, மெகா ஸ்டார் ரசிகர்களிடமும், வெங்கடேஷ் ரசிகர்களிடமும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பொங்கல் சீசன் என்றாலே, குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்கும் கதைகள் முக்கியமாக இருக்கும். அந்த வகையில், “மன சங்கர வரபிரசாத் கரு” திரைப்படமும் குடும்ப உறவுகள், உணர்ச்சிகள், நகைச்சுவை மற்றும் வணிக அம்சங்களை சமநிலையுடன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த படம் கவரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
மேலும், அடுத்தாண்டு பொங்கல் போட்டியில் ஏற்கனவே பல பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், சிரஞ்சீவி – நயன்தாரா கூட்டணி கொண்ட இந்த படம், பாக்ஸ் ஆபீஸில் எவ்வாறு செயல்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், நட்சத்திர பலம், அனில் ரவிபுடியின் இயக்கம் மற்றும் பொங்கல் வெளியீடு ஆகியவை படத்திற்கு சாதகமாக இருக்கும் என திரை வட்டாரங்கள் கணிக்கின்றன. மொத்தத்தில், அடுத்தாண்டு பொங்கல் சீசனை மேலும் சூடுபடுத்தும் திரைப்படமாக “மன சங்கர வரபிரசாத் கரு” உருவாகி வருகிறது.

சிரஞ்சீவி, நயன்தாரா, வெங்கடேஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள், அனுபவம் வாய்ந்த இயக்குநர் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பு ஆகிய அனைத்தும் இணைந்துள்ள இந்த படம், பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு ஒரு முழுமையான திரைவிருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வெளியாகும் வரை, இது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே பேசுபொருளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Guys அவங்க Normal People கிடையாது..! ஆக்ஷன் நடிகை 'நயன்தாரா'வுக்கு இன்று 'Happy Birthday '..!