"அண்ணா அடிக்காதீங்க அண்ணா வலிக்குது அண்ணா என பெண்கள் கதறிய குரல் இன்றும் பலரது நெஞ்சை பதற வைப்பதாகவே உள்ளது. அந்த அளவிற்கு கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 போரையும் தீர்ப்புக்காக சமீபத்தில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் காவல் துறையினர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஒரே பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை தருவது என பல முக்கிய குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 9 பேரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட பின்னர் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

அதில், குற்றவாளிகளான 9 பேரும் இளம் வயதினர். மேலும், திருமணமாகாதவர்கள்.. அவர்களுடைய எதிர்காலத்தையும், வயதான அவர்களது பெற்றோர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டிய காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி நந்தினி தேவி அதனை மறுத்து, முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள், இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள், மூன்றாம் குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகள்,
இதையும் படிங்க: திருப்பி அடிச்சா தாங்க மாட்ட..! பாக். தாக்குதலுக்கு பார்த்திபன் காட்டமான பதிவு..!

நான்காம் குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள், ஐந்தாம் குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள், ஆறாம் குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஏழாம் குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள், எட்டாம் குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஒன்பதாம் குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை தமிழகமே கொண்டாடி வருகின்றது.

இதற்கு பல பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருவதுடன், அண்ணா பல்கழைக்கழக கேஸையும் கொஞ்சம் பாருங்க என கூறி வருகின்றனர். இந்த சூழலில், நடிகர் பார்த்திபன் "ஒத்த செருப்பு" படத்தில் தான் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து ஆதங்கமாக பேசி இருந்த deleted scene வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன் கீழ் " இது ஒத்த செருப்பு deleted scene-ல்!அந்த நேரத்தில் எனக்கிருந்த ஆதங்கக் குரல். அப்படி தப்பித்து செல்லாதபடி …வரைமுறையற்ற பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வன்முறைக்கு பாரபட்சமற்ற அழுத்தமான தீர்ப்பு எழுதிய penக்கு பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பில் நன்றிகள்

ஆயுளுக்கும்! ஆயுள் தண்டனை என்பது ஆயுளுக்குமான தண்டனையாக தானே இருக்க வேண்டும் அது ஏன் ஆயுள் பாத் போல சில வருடங்களில் தண்டனையை தலை முழுகி விட்டு வரும் தண்டனையாக கொடுக்கிறார்கள் என்ற கேள்வி என் மன கோர்ட்டின் சாட்சி கூண்டில் பதிலின்றி நிற்கும்! குற்றம் செய்பவர்களுக்கு உச்ச பட்ச பயத்தை உண்டாக்கும் தீர்ப்பை வழங்கிய நீதிபதி நந்தனி தேவி அம்மையாருக்கு பாராட்டுக்கள்+ வாழ்த்துகள்.
உச்ச நீதிமன்றமும் இதே தீர்ப்பை உறுதிபடுத்தும் என்ற நம்பிக்கையுடன் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்" என தனது ஆதங்கத்தை தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: நடிகை சுஹாசினியை வம்பிழுத்து சிக்கிய பார்த்திபன்..! மேடையிலேயே வெளுத்து வாங்கிய நடிகை..!