பொதுவாக வாகனங்களின் பின்புறத்தில் பார்த்தால் 'படியில் பயணம் நொடியில் மரணம்' என எழுதி இருப்பர்.. அதேபோல் 'தலைக்கவசம் உயிர்க்கவசம்' என எழுதி இருப்பர். அந்த அளவிற்கு ஒருமுறை உயிர் போனால் மீண்டும் வராது என்பதை உணர்த்தும் வகையில் பல முன்னேற்பாடுகளை அரசாங்கமும் செய்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக இயற்கைக்கு மாறாகவும் சில காரியங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக தற்பொழுது அகமதாபாத் விமான நிலையத்தில் நடைபெற்ற கோர விபத்து தற்பொழுது உலக நாடுகளையே உலுக்கி உள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மேகினி நகரில் ஏர் இந்திய விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இப்படிப்பட்ட இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்தனர்.
இதில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் மேலே எழும்ப முடியாமல் கீழே விழுந்ததில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் 10ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டாடா நிறுவனம் சார்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி நிவாரணமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையும் அளிக்கப்படும் என தெரிவித்து இருந்தன.
இதையும் படிங்க: ஆட்டோவில் ஏரிய டூரிஸ்ட் பேமிலி பட டைரக்டர்... நொடி பொழுதில் டிரைவர் செய்த செயலால் அதிர்ச்சி..!

இதை அடுத்து விடுதியின் கட்டிட இடுப்பாடுகளை அகற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கி நிறைய பேர் இறந்திருக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்டதான சூழலில் விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் கணக்குகளை சேர்த்தால் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலகட்ட முயற்சிகளுக்கு பின்பு கிட்டத்தட்ட ஆறு பேரினுடைய உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், பலரின் உடல்களின் அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களது டிஎன்ஏ டெஸ்டுகள் அனைத்தும் முடித்த பின்பு அவர்களது உறவினர்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. பல கட்ட முயற்சியில் தேடப்பட்டு வந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் என்று சொல்லக்கூடிய கருப்பு பெட்டியானது தற்பொழுது கிடைத்துள்ளதால் விரைவில் விமான விபத்துக்கு உண்டான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், விமானம் விழும் காட்சிகளும் அதிலிருந்து உடல்கள் சிதறிவிலும் காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருவதுடன் ஒருவரது துண்டிக்கப்பட்ட தலையை மக்கள் மாறி மாறி செல்பி எடுப்பது எல்லாம் இணையத்தில் கண்டு பலரும் வேதனை அடைந்து வருகின்றனர். இப்படிப்பட்டதான சூழலில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல நடிகர் சல்மான் கான் தங்களது வேதனைகளை இணையத்தின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றனர். அதன்படி நடிகை பிரியங்கா சோப்ரா, " மிக மிக சோகம். நினைத்துப்பார்க்க முடியாத இழப்பை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் பிரார்த்திக்கிறேன் " என பதிவிட்டு இருக்கிறார்.

அவரை தொடர்ந்து, நடிகர் சல்மான்கான் " ஆமதாபாத் விமான விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பயணிகள், பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பிரார்த்தனைகள்' என கூறியுள்ளார்.

மேலும் பல பிரபலங்கள் தங்களது வேதனைகளை தொடர்ந்து பதிவுகளாக தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹீரோ ஹீரோயின்களுக்கு ஆப்பு வைத்த விஷால்.. இனி நடிக்கனும்னா இது கட்டாயம் வேணுமாம்..!