தமிழ் நடிகர்களிலேயே மிகவும் முக்கியமான நடிகர் விஷால். இவர் அதிகமாக திரையில் தோன்றுவதை விட செய்திகளிலேயே தோன்றுவார் அந்த அளவிற்கு இவர் தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

இப்படிப்பட்ட நடிகர் விஷால் பார்க்க உயரமாகவும், ஆக்ஷனில் அட்ராசிட்டி செய்யும் வகையில் இருந்தாலும் உண்மையில் குணத்தில் குழந்தை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தற்பொழுது இவரது உடல்நிலைகளும் அவ்வப்போது மாறி வர, அவரது ரசிகர்கள் அவரைக் கண்டு மிகவும் மன வருத்தத்தில் இருந்தனர். ஆனால் திடீரென்று ஒரு நாள் நடிகை தன்ஷிகாவை தான் காதலிப்பதாக கூறி அவரை ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்ய போவதாக சொன்னவுடன் அவரது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று இருக்கின்றனர். ஏனெனில் சமீபகாலமாக அவரது உடல்நிலையை கண்ட அவரது ஆருயிர் ரசிகர்கள் அவருக்கு வாழ்க்கையில் துணை என்று ஒருவர் வந்துவிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து முற்றிலுமாக நீங்கி விடுவார் என கூறி வந்தனர். அதற்கு ஏற்றார் போல் தற்பொழுது அவருக்கு வாழ்க்கை துணையும் கிடைத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இதற்காக தான் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.. நடிகர் விஷால்!

இது ஒரு பக்கம் இருக்க இனி வாழ்க்கையில் அனைத்தும் நமக்கு மகிழ்ச்சியான காரியம் தான் என நினைத்த நடிகர் விஷாலுக்கு பேர் இடி ஒன்றைக் கொடுத்தது உயர் நீதிமன்றம். காரணம் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஷால் தனக்கு சொந்தமாக வைத்திருக்கும் 'விஷால் பிலிம் ஃபேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செல்வனிடம் பெற்ற 21 கோடி 29 லட்சம் ரூபாய் கடனை லைக்கா நிறுவனம் ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர் பல நாட்களாக அந்தத் தொகையை லைக்கா நிறுவனத்திற்கு கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்.

இதனால் வெறுப்பான லைகா நிறுவனத்தினர் உயர்நீதிமன்றத்தில் தனது தொகையை பெற்று தரும்படி வழக்கு ஒன்றை தொடர்ந்தார், அதனை விசாரித்த நீதிபதிகள் கொண்ட அமர்வு, இறுதியாக 21 கோடியை 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வழக்குச் செலவுத் தொகையும் சேர்த்தே வழங்க வேண்டும் எனவும் விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இப்படி அவருக்கு ஒரு புறம் சிக்கல் இருக்க, எப்படியாவது தனது திருமணத்திற்கு முன்பாக நடிகர் சங்க கட்டட வேலைகளை முடிக்க வேண்டும் என்று நினைத்த விஷால் தற்பொழுது அதற்கு மும்முரமாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இனி வரும் காலங்களில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே சினிமாவில் நடிக்க முடியும் என்று நடிகரும் நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைப்படத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவது போல, நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் திரைப்படங்களில் கேமரா முன்நின்று நடிக்கும் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் அனைவருமே நடிகர் சங்க உறுப்பினர் அட்டை பெற்றவராகத்தான் இருக்கவேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை ஆயுள் உறுப்பினராக சேருவதற்கு சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள உறுப்பினர்களின் மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவிகளுக்கும், ஈமச்சடங்குக்கும் செலவிடப்பட்டு வருகிறது. இதுவரை சங்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நடித்து கொண்டிருப்பவர்களிடம் அதன் பயனை எடுத்துரைத்து, வருகிற 20-ந் தேதிக்குள் உறுப்பினர் அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நடிகர்-நடிகைகளின் மேலாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்" என விஷால் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருவிழாவில் மயங்கி விழ சரக்கு அடித்ததுதான் காரணமா..! நடிகர் விஷால் சொன்ன விளக்கம்..!