இன்றும் நடிகர் தனுஷின் சிறந்த படம் என்றாலே அனைவரும் கூறும் படம் "புதுப்பேட்டை". அந்த படத்தில் நடிகர் தனுஷ் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இன்று பல கேங்ஸ்டர் படம் வந்தாலும் பல விதமான ஆக்ஷன் காட்சிகளை கொடுத்தாலும் இது போன்ற ஒரு படத்தை யாராலும் எடுக்க முடியாது. ஏன் இன்று மிகப்பெரிய இயக்குனர்களாக இருக்கும், நெல்சன், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், பிரதீப் ரங்கநாதன், அஷ்வத் மாரிமுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் என யாராலும் கொடுக்க முடியாது.

முழுக்க முழுக்க சுயநலவாதியான கேரக்டர் படம் தான், ஆனால் அனைவரையும் ரசிக்க வைத்தது, கைத்தட்ட வைத்தது. அப்படி பட்ட படத்தை எடுத்த இயக்குனர் தான் செல்வராகவன். இன்று பல படங்களில் சீரியசான காட்சிகளிலும் காமெடி காட்சிகளிலும் நடித்து வரும் இவரது படங்களின் அருகில் கூட எந்தவித இயக்குனர்களும் வரமுடியாது. அப்படி இருக்கும் இவரது படங்கள் அனைத்தும் ஹிட்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2வில் இணையும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்..! லோகேஷுக்கு டஃப் கொடுக்கும் நெல்சன் திலீப் குமார்..!

இதுவரை சினிமாவில் இவர் இயக்கிய படங்கள் என பார்த்தால், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, என்.ஜி.கே முதலிய படங்களை எழுதி இயக்கி உள்ளார். இவைகளிலும் இவர் இயக்காமல், எழுதி வெளியான படங்கள் என்றால் துள்ளுவதோ இளமை, யாரடி நீ மோகினி, மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்கள் எனலாம். இப்படி பட்ட செல்வராகவன், 2010ம் ஆண்டு டிரீம் வேலி கார்ப்பரேஷன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில், கார்த்திக், பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரேமியா, ரீமா சென் மற்றும் பல்லாயிரம் துணை நடிக்கர்களை வைத்து உருவான திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்". இப்படம் அப்பொழுது வெற்றி அடையவில்லை என்றாலும் இப்பொழுது இப்படத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால் அதில் செல்வராகவனுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.

இந்த நிலையில், 2004 -ம் ஆண்டு வெளியான "7ஜி ரெயின்போ காலனி" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. இத்திரைப்படத்தில் முதன் முதலாக தோன்றியவர் தான் நடிகர் ரவி கிருஷ்ணா. இவருடன் சோனியா அகர்வால் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். வேலைக்கு செல்லாத மகன், தன் காதலியின் ஊக்கப்படுத்தும் பேச்சால் வேலைக்கு சேர்ந்து, தந்தையின் அன்பை அழகாக காட்டும் அருமையான படமாக இருந்தது. அதுவும் தனது மகன் பைக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததை நினைத்து மகனுக்கே தெரியாமல் அப்பா ஆனந்த கண்ணீர் விட்டு அழுவதும் அதனை கேட்டு மறைமுகமாக மகன் அழுவதெல்லாம் ஹார்ட் டச் சீனாக இருந்தது.

இப்படி பட்ட படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் இருக்க, 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகம் வருகிறது என்றால் ரசிகர்கள் அமைதியாகவா இருப்பார்கள். அந்தவகையில், ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையில், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் படத்தின் வெளியிட்டு தேதியை குறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறுகையில், தற்பொழுது தெலுங்கில் நடிகர் பவன் கல்யான் நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஹரிஹர வீர மல்லு' படத்த்தின் எடிட்டிங் வேலைகளை முடித்து அதனை வெளியிடுவதில் மும்முரமாக இருக்கிறோம். மேலும் இந்தப் படம் ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வேலைகள் அதிகமாக உள்ளது. எனவே இந்த படம் வெளியான பிறகு '7 ஜி ரெயின்போ காலனி' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பித்து சீக்கிரமாக முடிக்க உள்ளோம். கவலை வேண்டாம் கண்டிப்பாக இந்த வருடத்திற்குள் 7ஜி ரெயின்போ காலனி 2வை திரையில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்,
இதையும் படிங்க: துபாயில் நடிகர் விஜய்சேதுபதி செய்த தில்லாலங்கடி வேலை...! அப்பட்டமாக வெளிவந்த உண்மை..!