சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பல திரைப்படங்களை கண்டு ரசித்திருப்போம் ஆனால் அத்திரைப்படங்களில் இன்றும் நம்மால் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அதுதான் முத்து, பாட்ஷா, அருணாச்சலம், அண்ணாமலை போன்ற இன்னும் பல திரைப்படங்களை நாம் சொல்லலாம்.

ஆனால் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் 175 படங்களில் இன்றும் ரசிகர்களால் முக்கிய படமாக பார்க்கப்படுவது "படையப்பா" திரைப்படம் தான். இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களாக இருக்கட்டும் சிவாஜி கணேசனின் நடிப்பாக இருக்கட்டும் அத்தனையும் அல்டிமேட் ஆக இருக்கும். குறிப்பாக திரைப்படத்தில் தனது சொத்துக்கள் அனைத்தையும் சித்தப்பாவிடம் இழந்து போன ரஜினிகாந்த், கடவுளின் அருளால் அவர் சம்பாதித்த பணத்தில் அவரது தந்தை சிவாஜிகணேசன் வாங்கிய மலையில் தனது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வருவார். அப்பொழுது ஒரு நாள் அந்த மலையில் உள்ள கற்கள் கிரானைட் கற்கள் என தெரியவர அதிலிருந்து பல கோடி சம்பாதித்து மிகப்பெரிய பணக்காரனாக வலம் வருவார்.
இதையும் படிங்க: மகனுக்கு 51வது பிறந்தநாள்.. சாய்பாபா கோவிலில் தாய் ஷோபா செய்த காரியம்..!

இந்த நிலையில், மிகவும் பிரமாதமான கேரக்டர் என்றால் அதுதான் வில்லி கேரக்டர். அதுவரை தமிழ் சினிமாவில் வந்த நிறைய படங்களில் இப்படி ஒரு வில்லியை யாரும் கண்டதும் இல்லை இனி காண போவதுமில்லை. அந்த அளவிற்கு நீலாம்பரி என்னும் கேரக்டரில் நடித்திருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தனக்கு கிடைக்காத எதுவும் யாருக்கும் கிடைக்கக்கூடாது என நினைக்கும் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யாவை பழிவாங்கவும் ரஜினியை பழிவாங்கவும் தீராத பகையுடன் காத்துக் கொண்டிருப்பார். பின்பு தனது அண்ணனின் மகனை வைத்து ரஜினியின் மகளை காதலிக்க செய்வார்.

பின்பு கல்யாண நேரத்தில் ரஜினிக்கு பெரிய அவமானத்தை கொடுப்பார் கடைசியில் ரஜினியை வெற்றி பெறுவார். இத்திரைப்படம் அட்டகாசமான திரைப்படமாக இருக்கும். மேலும் திரைப்படத்தில் ரஜினி கூறும் வார்த்தைகள் அனைத்தும் கூஸ்பம் ஆக இருக்கும். அதில் ஒன்றுதான் " அதிகமாக ஆசைப்படும் ஆம்பளையும்... அதிகமாக கோபப்படும் பொம்பளையும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது" என அவர் சொன்ன டயலாக் இன்று வரை ஃபேமஸ் ஆக உள்ளது. மேலும், இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை பார்த்து "மின்சார கண்ணா வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டு குறையவே இல்லை" என்று சொல்வதெல்லாம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இப்படி இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் கூட்டணியில் உருவான திரைப்படம். அப்பொழுதே உலக அளவில் ரூபாய் 58 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் முதல் முதலாக 50 கோடியை பாக்ஸ் ஆபீஸில் பெற்ற திரைப்படமும் இதுதான். காரணம் இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைத்து சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், ரமேஷ் கண்ணா, சௌந்தர்யா, லட்சுமி, ராதாரவி என பலரும் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து பல வருடங்களுக்கு பின்பாக நடிகர் ரஜினியுடன் ஜெயலர் திரைப்படத்தில் திரையில் தோன்றினார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அவரை திரையில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரப்படுத்தினர். காரணம் தனக்குவில்லியாக இருந்த நீலாம்பரியையே திருமணம் செய்து இருக்கிறாரே நடிகர் ரஜினிகாந்த் என கூறி வந்தனர். இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் தற்பொழுது நடித்தும் வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

இந்த நிலையில், தற்பொழுது அவர் தனியார் சேனலுக்கு கொடுத்திருக்கும் பேட்டி ஆனது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி, தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசுவையில், " உண்மையில் 'படையப்பா' திரைப்படத்தில் மட்டும் எனக்கு ஹீரோயினை மாற்றும் சான்ஸ் இருந்திருந்தால் கண்டிப்பாக சௌந்தர்யா கேரக்டரில் நானே நடித்திருப்பேன். ஏனெனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடிக்க ஒருவரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அந்த சமயத்தில் யாரும் ஒத்துக்கொள்ளவும் இல்லை. ஆதலால் இத்திரைப்படத்தில் நான் மாட்டிக் கொண்டேன்.

என்ன தான் அந்த திரைப்படத்தில் எங்கள் இருவரது காம்போவும் பயங்கரமாக இருந்தாலும் இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது படப்பிடிப்பில் இருந்த அனைவரும் என்னிடம் சொன்ன ஒரே ஒரு வார்த்தை கொஞ்ச நாட்கள் சென்னைக்கு நீங்கள் வராமல் இருப்பது உங்களுக்கு நல்லது என சொன்னார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு மிகவும் திகைத்துப் போன நான், படம் ரிலீஸ் ஆகிய பின்பு சென்னையிலேயே இல்லை. சிறிது நாட்கள் கழித்து தான் சென்னைக்கு நான் திரும்ப வந்தேன்"என தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ரஜினியை எதிர்த்த வில்லியான நீலாம்பரியே தெறிக்க ஓட வைத்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள் என நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எனக்கு அந்த மாதிரி ஆசை இல்லை.. ஆனால்...! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஓபன் டாக்..!