பிரபல தனியார் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இப்படி மிகவும் பிரபலாமா இவரது ஆரம்ப வாழ்க்கை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் மற்றும் மாரி தொடர்கள் மூலம் தொடங்கியது. அதில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி நாராயணன்.

இவர் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை தொடரில் தற்பொழுது நடித்து வருகிறார். இப்படிப்பட்ட சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சால்மா அருண், அனிலா குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் அண்ணாமலை மற்றும் விஜயா ஆகிய தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். அதில் மூத்த மகனான 'மகோஜ்', பார்லர் வைத்திருக்கும் 'ரோகிணி'யை திருமணம் செய்து கொண்டார், கதையின் கதாநாயகனான 'முத்து' பூக்கட்டி விற்பனை செய்யும் 'மீனா'வை திருமணம் செய்து கொண்டார். அதே போல் 'ரவி' டப்பிங் ஆர்டிஸ்ட்டான 'ஸ்ருதி'யை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரே வீட்டில் எட்டு பேர் கொண்ட குடும்ப பாங்கான கதை தான் இந்த "சிறகடிக்க ஆசை" சீரியல்.
இதையும் படிங்க: என்ன விஜய் உங்க பிறந்த நாளில் பாஜக சாயல் அதிகமாக வீசுது..! விஜய்க்கு யார் வாழ்த்து சொல்லி இருக்காங்க தெரியுமா..!

இந்த சீரியலில் மக்களின் ஆழ் மனதில் வில்லியாகவும் பித்தலாட்ட காரியாகவும் அனைவரது மனதில் நடிப்பால் குடிபுகுந்த கேரட்ர் என்றால் அது ரோகிணி கேரக்டர் தான். இவர் எப்பொழுது குடுத்பத்திடம் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி பட்ட ரோகிணிக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இந்த சீரியலில் ரோகிணிக்கு துணை நிற்பதோடு அடிக்கடி அவருக்கு தக்லைஃப் கொடுத்து வரும் இவர் மிகவும் பிரபலமாகி உள்ளார். இப்படி நடிப்பில் மிகவும் பிசியாக இருக்கும் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த சிலர் இது 'ஏய் தொழில்நுட்பம்' மூலமாக உருவாக்கப்பட்ட மார்பிங் வீடியோ என கூறிவந்தனர்.

மறுபக்கம், இது ஒரு 'casting couch வீடியோ', சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஸ்ருதியை இவ்வாறு செய்ய வைத்தி இருப்பார்கள் எனவும் இருபுறமும் மாறி...மாறி... பேசி பலர் பதிவிட்டு வந்த நிலையில், தனது அனைத்து இணையதள பக்கங்களையும் பிரைவேட்டில் போட்டு அமைதியாக இருந்தார் ஸ்ருதி நாராயணன். திடீரென பிரைவேட்டில் போட்டிருந்த தனது இன்ஸ்டா தளத்தை மீண்டும் அனைவரும் பார்க்கும் வண்ணம் மாற்றி, தான் புடவையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டு, பிறகு ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ.. சரியானதை கண்டுபிடியுங்கள்? என கேட்டு, அதற்கு பின், உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்திருந்தார் ஸ்ருதி. பின் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்தவர் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த வீடியோக்கள் வெளிவர, அது ஏஐ அல்ல தன்னுடைய வீடியோ தான் என்பதை ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில்,சமீபத்தில் கடுக்கா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வேலுநாச்சியார் போஸ்டரை ஸ்ருதி நாராயணன் வெளியிட்டதால் பத்திரிகையாளர் ஒருவர் காட்டமாக கேள்வி கேட்டதால் அங்கிருந்து கண்கலங்கியபடி சென்றார். இந்த நிலையில், ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள 'கட்ஸ்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதி நாராயணன். போன வாரம் வெளியான இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார் ஸ்ருதி. இந்த சூழலில் தற்பொழுது தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஸ்ருதி நாராயணன் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதன்படி, தொகுப்பாளர் ஒருவர் ஸ்ருதியிடம் உங்களுக்கு ப்ரபோசல் எல்லாம் வந்திருக்கிறதா என கேட்க, அதற்கு பதிலளித்த அவர், "இதெல்லாம் ஜோக்காக கடந்து போய்விட வேண்டும். டேர் என சொல்கிறீர்கள். ஆனால் இந்த டேர்ரை உண்மையில் ஜோக் என்று நினைத்துக்கொண்டு கடந்து சென்றிட வேண்டும். அதன்படி சொல்ல வேண்டுமானால் இதுவரை ஓப்பனாக யாரும் என்னிடம் காதலை சொன்னது இல்லை. மகளிர் பள்ளி, மகளிர் கல்லூரியில் தான் நான் படித்தேன். அதனால் எந்த ஆண்கள் பழக்கமும் கிடையாது. இதில், நான் எங்கு போய் ப்ரோபோசலை தேடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பற்றி எரியும் நெருப்புக்கு நடுவில் விஜய்..! 12 மணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனநாயகன் டீம்..!