தமிழ் திரையுலகில் பல பெண்களின் மனதில் வாழ்ந்து வரும் கனவு நாயகன் தான் நடிகர் ரவி மோகன். இவரது சிரிப்பிற்கும் இவரது பேச்சிக்கும் ரசிகர் பட்டாளங்கள் அதிகமாக குவிந்து வருகின்றனர். இப்படிப்பட்ட ரவி மோகன் தான் இந்த வருடத்தின் டாப் ட்ரெண்டிங் நியூஸில் இருக்கிறார். டீவி ஆன் செய்தாலே யார் செய்திகள் வருகிறதோ இல்லையோ ரவி மோகனின் செய்திகள் அவ்வப்பொழுது வரும் அளவிற்கு தற்பொழுது அவர் ஃபேமஸ் ஆகி இருக்கிறார்.

இப்படி நடிகர் ரவி மோகன், ஃபேமஸாக இருக்க காரணம் தனது மனைவியை விவாகரத்து செய்து பாடகியை மனம் முடிக்க இருப்பதால் தான் என்று பல நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு தற்பொழுது ரவி மோகனின் நிலைமை கவலைகிடமாகவே இருக்கிறது என்றே சொல்லலாம். நடிகர் ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் கணவன் மனைவியாக பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இப்படி இருக்க எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சமூக வலைத்தளத்தின் தனியார் சேனல்களாக இருந்தாலும் அங்கு ரவி மோகன் பேட்டிக்கு செல்கிறார் என்றால் அவருடன் ஆர்த்தி ரவியும் இருப்பார்.
இதையும் படிங்க: ஒரே கலர்ல டிரஸ் போட்டா லவ்வா.. மன்னிப்பு கேட்டு சரண்டரான பாடகி கெனிஷா..!

இவர்கள் இருவரது இன்டர்வியுக்களை பார்க்கும் பொழுது இப்படி ஒரு ஃபேர் வாழ்க்கையில் அமையாதா என பலரும் ஏங்கி போய் கிடந்தனர். ஏனெனில் அந்த அளவிற்கு ரவி மோகன் பற்றி முழுவதுமாக புரிந்து இருந்தார் ஆர்த்தி ரவி. அதே போலவே ஆர்த்தி ரவியை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருந்தார் ரவி மோகன். இப்படி இருக்க, இவர்களது ஒற்றுமையும் காதலையும் பார்த்த அனைவரும் தங்களுக்கு வாழ்க்கைத் துணை என்றால் இப்படித்தான் அமைய வேண்டும் வாழ்க்கை என்றால் இவர்களை போலத்தான் வாழ வேண்டும் என இவர்களது வாழ்க்கையை தங்களது வாழ்க்கையின் தாரக மந்திரமாக மாற்றி வாழ்ந்து வந்தனர் அநேகர்.

இப்படி இருக்க, எப்பேர்ப்பட்ட காதலாக இருந்தாலும் அதிலும் ஒரு குறைகள் இருக்கத்தான் செய்கிறது என்பதை நிரூபித்து இருந்தார் நடிகர் ரவி மோகன். அதன்படி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்யப் போவதாகவும் அதற்குண்டான வக்கீல் நோட்டீஸும் அவர் விட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் இருவரும் பிரியக்கூடாது என கடவுளிடம் வேண்டி வந்தவர்களும் அனேகர். இந்த சூழலில், திடீரென்று ஒரு நாள் பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவிற்கு தனது காதலியான பாடகி கெனிஷாவை அழைத்து வந்தார் நடிகர் ரவி மோகன். வந்தவர் சும்மா வராமல் இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து வந்திருப்பதை பார்த்த அனைவரும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று வதந்திகளை பரப்பினர்.

அதுவரை மௌனம் காத்து வந்த ஆர்த்தி ரவி தற்பொழுது எங்கள் பிரிவுக்கு யார் காரணம்? என்பது உங்கள் அனைவருக்கும் தெளிவாக தெரிந்திருக்கும் எனக் கூற, அனைவரது கோபமும் கெனிஷாவின் மீது பாய்ந்தது. இதனை அடுத்து ரவி மோகன் ஆர்த்தி ரவியால் தான் படாத பாடுபட்டதாகவும் அதனால்தான் அவரை விட்டு விலகிப் போவதாகவும் தெரிவித்திருந்தார். கெனிஷாவும் ஒரு நல்ல ஆண்மகன் மனைவியிடம் மட்டுமே அனைத்தையும் எதிர்பார்ப்பார். நீங்கள் அதை கொடுக்கவில்லை என்றால் அன்பு அதிகமாக காண்பிக்கும் பெண்ணிடமே வந்துவிடுவார் எனக் கூறி இருந்தார். இப்படி இருக்க, தனது கணவனை எப்படியாவது மீட்டு விடவேண்டும் என நினைத்த ஆர்த்தி ரவி நீதிமன்றத்தில் தனக்கும் தனது இரண்டு மகன்களுக்கும் ஜீவனாம்சமாக மாதம் தோறும் ரூபாய் 40 லட்சம் கொடுக்க வேண்டும் என ரவி மோகனுக்கு செக் வைத்தார்.

ஆனால் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத ரவி மோகன் தற்பொழுது ரீசன்டாக வெளியான கெனிஷாவின் "அன்றும் இன்றும்" பாடலில் இடம்பெற்று ஆர்த்தி ரவியை மட்டுமல்லாது அனைவரையும் சூடேற்றி இருக்கிறார். இந்த சூழலில் தற்பொழுது இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடிகர் சரத்குமார், சித்தார்த், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கும் வகையில் தயாராகியுள்ள திரைப்படம் தான் "3 bhk".

இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரவி மோகன் பேசுகையில், " நான் பிறந்ததிலிருந்தே சொந்த வீட்டில் தான் குடியிருந்தேன். ஆனால் தற்பொழுது வாடகை வீட்டில் தங்கி இருக்கிறேன். இந்தப் படத்தில் இயக்குனர் காண்பித்த பல விஷயங்களை என்னோடு இணைத்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் இப்படம் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்ததோடு மட்டுமல்லாமல் எமோஷனலாக கனைக்ட் ஆகிவிட்டது. எனது வாழ்க்கையை மீண்டும் இப்பொழுதுதான் வாழத்துவங்கியுள்ளேன். அதனால் இனிமேல் நல்லபடியாக எனது வாழ்க்கை மாறப்போகிறது என என்னுடைய மனதில் என்றும் தோன்றியது" என கூறினார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ரவி மோகன்.. புதிய படத்தின் டைட்டில் இதுதான்..!