ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, இன்று ஜெயம் ரவி என்று சொன்னால் அது யார் என தெரியும் அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ரவி மோகன். இதனை அடுத்து "எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி" என்ற படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதற்கு பின் தாஸ், மழை, இதயத் திருடன், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதிபகவன், நினைத்தது யாரோ, நிமிர்ந்து நில், பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், டிக் டிக் டிக், மற்றும் அடங்கமாறு இன்னும் பல படங்களில் நடித்து உள்ளார்.
இதையும் படிங்க: தன்னை பற்றிய அவதூறு பதிவுகளை நீக்குங்கள்.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஆர்த்தி ரவி..!
இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு எடுத்து அதற்க்கான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஏறிய ரவிமோகன் நடிகர் வினையை பார்த்து "ப்ரோ ஆசம் ப்ரோ.. ஜில் ப்ரோ.." என்று சொன்ன டயலாக் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் விவாகரத்து பெற்றால் கவலையில் இருப்பார்கள், ஆனால் ரவி மோகன் தற்போது தான் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் என பலரும் சொல்லி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் ஈஞ்சம்பாக்கத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரவி மோகனிடம், உங்களின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என ரசிகர்கள் மற்றும் பத்திக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிபில், ஏ.ஆர்.ரகுமான் இசையில்,சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி முதலானோர் தன்னுடன் நடித்து வெளியாகவுள்ள "ஜீனி" படத்திற்கான அப்டேட் விரைவில் வரும் என்றார்.

இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் ரோலில் நடித்து வருகிறார். இதனையடுத்து, 'டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நடிகர் ரவிமோகன் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும், கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'ப்ரோ கோட்' (Bro Code) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸின் முதல் படமாகும், இதன் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். இப்படம் ஒரு பான்-இந்திய ஆக்ஷன் காமெடி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது, மேலும் இதில் நான்கு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் நேர்மறையான மற்றும் விரும்பத்தக்கதாக இருக்கும் என்று இயக்குனர் கார்த்திக் யோகி தெரிவித்துள்ளார். படத்தின் இசையை 'அனிமல்', 'கபீர் சிங்' படங்களுக்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் அமைப்பார். படப்பிடிப்பு செப்டம்பர் 2025 இல் தொடங்க உள்ளது, மேலும் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்களுக்கு திறமையான குழு பணியாற்றும் என்று இயக்குனர் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி 2 பேரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!