தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட நடிகர் கமலஹாசன், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என ஒரு வார்த்தை சொல்ல, அது தற்பொழுது கர்நாடகாவில் பூதாகரத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தற்பொழுது மொழி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்து நடிகர் கமலஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியானால் தியேட்டரை கொளுத்துவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மாறியிருக்கிறது.

இந்த பிரச்சனை எங்கு ஆரம்பித்தது என பார்த்தால், மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: வெளியானது சிம்புவின் "ஓ மாறா" பாடல்..! ரசிகர்களை உற்சாகப்படுத்திய தக் லைஃப் பட சாங்..!

இப்படி இருக்க, இப்படத்தின் ஃபிரமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்தினம், சிம்பு, திரிஷா, கமல்ஹாசன், சிவராஜ்குமார் என பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய சிவராஜ்குமார், "நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரியும். எனது சகோதரன் மறைவுக்கு பின் எனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தனர் மருத்துவர்கள். இதனால் அமெரிக்காவிற்கு என்னை அழைத்து சென்று ஆபரேஷன் செய்தனர். ஆப்ரேஷன் முடிந்த சமயத்தில் நடிகர் கமலிடம் இருந்து எனக்கு போன் வந்தது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் சரியாகவிடும் என்றார். அந்த இரண்டே வார்த்தையில் என்னை மறந்து அழ ஆரம்பித்து விட்டேன்.

உண்மையில் ஹீரோ என்றால் கமல் மாதிரி தான் இருக்கணும். கமல் என்றால் அழகு. ஒருவேளை நான் மட்டும் பெண்ணாக பிறந்து இருந்தால் கண்டிப்பாக அவரை திருமணம் செய்து இருப்பேன். இதனை நான் பலமுறை உங்கள் மத்தியில் கூறியிருக்கிறேன். ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அப்பாவிடம் என்னை யார் என கேட்டார். அதற்கு அப்பா இவன் என் மகன் என்றார். அப்போது நான் கமலை பார்த்து ஒருமுறை உங்களை கட்டிப்பிடிக்கலாமா என கேட்டேன். அவரும் உடனே சம்மதித்தார். அதன்பின் மூன்று நாட்கள் நான் குளிக்கவே இல்லை. ஏனெனில் கமலின் ஆரா எனக்கு தேவைப்பட்டது. அந்தளவுக்கு நான் அவரின் வெறித்தனமான ரசிகன்" என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், " உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை பார்த்த கர்நாடக மக்கள் கன்னட மொழியை குறித்து அவதூறாக கமல் பேசியிருப்பதாக கூறி தக் லைப் படம் வெளியிட கூடாது என பிரச்சனை செய்து வருகின்றனர்.

இதனை அடுத்து பேசிய கமல், "சிவராஜ்குமார் மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என பேசியிருந்தார். அது தற்பொழுது கர்நாடகாவில் பெரிய கலவரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடகர் கமல், "நிறைய வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றைக் கற்பித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மொழி பிரச்சனை குறித்து பேச அரசியல் வாதிகளுக்கு தகுதியும் கிடையாது. தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்ப்பதில்லை.. ஆனால் அரசியல் எதிர்பார்க்கும்" என கூறி சென்றார்.

இதனை அடுத்து பேசிய சிவராஜ்குமார், கமல் அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டார் என கொந்தளிக்கிறீங்க என சொல்ல, தற்பொழுது அவர் மீதும் கன்னடர்கள் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் கன்னட சலுவாலி இயக்கத் தலைவர் வட்டாள் நாகராஜ் இதுகுறித்து பேசுகையில், "கமல் ஒரு ஏமாத்துக்காரன். கன்னட பாஷையை பத்தி பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்ல, அவர் தமிழ்நாட்டு காரன், நல்லா பாருங்க மக்கள் நீதி மையம் என கட்சி ஆரமிச்சார் அதுலயும் எந்த முன்னறேற்றமும் இல்ல, ஆனா இப்ப திமுகவுடன் இணைந்து ராஜ்ய சபா சீட்டுக்கு முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். உண்மையிலேயே தமிழ்ல இருந்துதான் கன்னடம் வந்தது என கமல் சொல்லுவது பெரிய பொய் என்பதை கன்னடர்களாகிய நாம் முதல்ல தெரிஞ்ச்சாகனும். இந்த பிரச்சனையை நாம்ம அவ்வளவு ஈஸியா எடுத்துக்க கூடாது. வாய்க்கு வந்தபடி எல்லாம் பேச கூடாது.

கன்னட மொழி பத்தி வெளியே தெரியணும். ஆதலால் போராட்ட காரர்கள் கட்சிக்காரர்கள் என எல்லாரும் ஒன்றாக திரண்டு போராடலாம் வாங்க. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கிறவரைக்கும் நம்முடைய போராட்டம் தொடரவேண்டும். கமலஹாசன் மட்டுமல்ல ஸ்டாலினுக்கும் சொல்லுகிறேன், கமலுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கக்கூடாது. அப்படி செய்தால் கர்நாடகாவில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கு எந்த வித முக்கியத்துவமும் சலுகையும் இங்கே கொடுக்கப்படமாட்டாது. அவரது பேச்சால் கன்னட காரர்களுக்கு அவமானமா இருக்கு, போராட்டம் பண்ணனும். ஒரு பக்கம் ஹிந்திகாரங்க மதிப்பதில்லை மறுபக்கம் தமிழ் காரங்க மதிப்பதில்லை. ஆதலால் கமல் சொன்ன வார்த்தைகளை வாபஸ் வாங்கிக்கணும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காருக்குள்ள ஷாக்ஷி அகர்வால் செய்த வேலையை பாருங்க..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!