இந்திய திரைதுறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சமந்தா என்றும் கியூட்டாக சிரித்தபடியே இருப்பார். இவரது சிரிப்பிற்கு அடிமையான ரசிகர்கள் பலர் உண்டு. ஆனால் குறிப்பிட்ட சில ஆண்டுகளாக அவர் சிரிப்பதும் இல்லை படங்களில் நடிப்பதும் இல்லை, இதற்கு காரணம் இவரது விவாகரத்து. ஆம்,தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் இத்திருமணம் நடைபெற்றது. நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். இதனை அடுத்து, சிறிது காலம் அமைதியாக இருந்த நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார்.
பின் இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிரபலங்கள் வாய்பிளக்கும் அளவிற்கு இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சமந்தாவுக்கு இப்படி ஒரு ரசிகரா..? இதெல்லாம் தேவையா.. கொஞ்சம் ஓவரா தெரியல..!

இந்த சம்பவங்களினால் மனவேதனையில் இருந்த சமந்தா தன்னுடைய தனிமையை போக்க, ஈஷா யோகா மையம் போன்ற பல பகுதிகளுக்கு சென்று தன்னை ஆசுவாசப்படுத்தி வந்தார். இப்படி இருக்க, நாக சைதன்யாவே தன்னுடைய வாழக்கையை மாற்றி வாழும் பொழுது நம்மால் முடியாத என புரிந்து கொண்ட சமந்தா, சினிமா தான் என் முதல் "காதல்" அதனுடன் தான் இனி பயணிக்க போகிறேன் என கூறி தற்பொழுது பல படங்களில் நடித்து வருவதுடன் படங்களை தயாரித்தும் வருகிறார். மேலும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களுக்கு சென்று தனது தனிமையை அழகாக போக்கி வருகிறார். மேலும் இரண்டாவது திருமணம் குறித்தும் எந்த வித ஐடியா இல்லை என சொல்லி மகிழ்ச்சியாக சுற்றி வருகிறார் சமந்தா.

இந்த சூழலில், சமீபத்திய பேட்டியில்" கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டான படங்களையும் கொடுக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியவில்லை. இந்த அன்பிற்கு நான் தகுதியானவள் தானா என்றும் எனக்குத் தெரியவில்லை" என மேடையில் கண்கலங்கி பேசி இருக்கிறார். இதனை அடுத்து பல மேடைகளில் எரிய சமந்தா அங்கும் கண்கலங்கிய படியே பேசி வருகிறார்.

இப்படி நடிகை சமந்தா, எந்த மேடை ஏறினாலும் அங்கு கண் கலங்குவதை பார்த்த ரசிகர்கள், 'சமந்தாவின் இந்த அழுகைக்கு காரணம் நாக சைதன்யா தான். அவருடனான பிரிவால் தான் சமந்தா இப்படி கண்கலங்குகிறார்' என இணையத்தில் கூறி வருகின்றனர். இதனை பார்த்த சமந்தா தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், தான் ஏன் மேடையில் அடிக்கடி கண் கலங்குகிறேன் என்பதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், "நான் மேடையில் அடிக்கடி கண்கள் கலங்குகிறேன் என ரசிகர்கள் வருத்தப்படுவது எனக்கு தெரிகிறது.

ஆனால் அதற்கு உண்மையான காரணம் நான் எமோஷனலாகி கண் கலங்குவதில்லை மேலும், நாக சைதன்யாவை நினைத்தும் நான் கண் கலங்குவதில்லை. உண்மையில் நான் கண்கலங்க காரணம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உள்ள லைட் மேன் தான். அவர்கள் வைக்கும் அதிகமான வெளிச்சத்தை பார்த்தால் எனது கண்கள் சென்சிட்டிவ் ஆகிவிடும். அதன் காரணமாக எனக்கு அதிகமாக கண்ணீர் வரும். இந்தக் காரணத்தால் தான் நான் மேடைகளில் அடிக்கடி கண்களில் வரும் கண்ணீரை துடைத்து கொண்டு இருப்பேன். இதனை பார்த்த பலரும் நான் எமோஷனலாகி அழுவதாக பேசுவது வேடிக்கையாக உள்ளது.

கவலை வேண்டாம் நான் நன்றாகவும், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன். நம் வாழ்க்கை நம் கையில் இருக்கும் பொழுது பின் கவலை எதற்கு" என்றார்.
இதையும் படிங்க: அவர் என் குடும்பத்தில் ஒருவர்..! சமந்தா சொன்ன அந்த ஸ்பெஷல் நபர் யார்..?