நடிகர் சந்தானத்தின் படம் என்றால் அதில் கண்டிப்பாக காமெடி இருக்கும் அதில் பேய்களும் கலந்து இருக்கும் என்ற சூழலில் அவரது படங்கள் மாறி வருகின்றன. இப்படி இருக்க, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.

ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி சக்கைபோடு போட்டது.
இதையும் படிங்க: அமலா பால் மகனுக்கு கோலாகலமாக நடைபெற்ற கிறித்தவ சடங்கு விழா..!

இந்த படத்தை குறித்து பார்த்தால், இதுவரை எந்த படம் எடுத்தாலும் அதனை விமர்சனம் செய்து பணம் ஈட்டும் யூடியூபர்கள் இன்று அதிகரித்து உள்ளனர். படம் எத்தனை கோடி செலவு செய்து எடுக்கிறார்கள் என்பது எல்லாம் இங்கு பிரச்சனை இல்லை. யூடியூபில் படத்திற்கு உண்டான விமர்சனங்களை எப்படி கொடுக்கிறார்கள் என்பது தான் பல தயாரிப்பாளர்களின் பிரச்சினையாகவே உள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு உரியவர்களை வைத்தே படத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்து இருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.

அதன்படி பார்த்தால், இப்படத்தின் கதாநாயகனான சந்தானத்தின் பெயர் கிருஷ்ணா. இவர் யூடியூபில் விமர்சனம் செய்வதில் வல்லவராக திகழ தனது பெயரை கிஸ்ஸா என மாற்றிக்கொண்டு பல படங்களை தாறுமாறாக பேசி பல லைக்குகளை அள்ளி வருவதுடன், படங்களை விமர்சனம் செய்து தயாரிப்பாளர்களின் சாபத்தையும் வாங்கிக் கொள்கிறார்.

இப்படிப்பட்ட சந்தானத்திற்கு பாடம் புகுட்ட நினைக்கும் செல்வராகவன் சந்தானத்தை தியேட்டருக்கு வரவழைத்து படத்திற்குள் அனுப்பி என்ஜாய் பண்ணும் கதையாக இப்படம் உள்ளது. இப்படத்தில் சுவாரசியம் என்னவென்றால் திரைக்குள் சென்ற பின் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் கதாபாத்திரமும் அவர்களது கெட்டப்பும் மாறுவதுதான். அந்த வகையில் பார்த்தால் சந்தானத்தின் அப்பாவான நிழல் ரவி, நிஜ உலகத்தில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் திரைக்குள் கப்பலின் கேப்டனாக மாறுகிறார். அதேபோல் வீட்டில் ஹவுஸ் வைஃப் ஆக சந்தானத்தின் அம்மா கேரக்டரில் இருக்கும் கஸ்தூரி, திரைக்குள் சென்றவுடன் கவர்ச்சி திருடியாக மாறி அனைவரது கைதட்டலையும் பெற்றார்.

சந்தானத்துக்கு தங்கையாக வந்த யாஷிகா ஆனந்தை பார்த்த ரசிகர்கள், யாஷிகா ஆனந்தை போய் இப்படி அடக்க ஒடுக்கமாய் வைத்து விட்டாரே இயக்குனர் என்று சொல்லிக் கொண்டிருக்க திரைக்குள் சென்ற பின் யாஷிகா ஆனந்த் வழக்கம் போல ரசிகர்களை ஏமாற்றாமல் கவர்ச்சி கன்னியாக மாறி கௌதம் மேனனுக்கு ஜோடியாக தோன்றி ரசிகர்களுக்கு ஆத்ம திருப்தி கொடுத்தார். மேலும் இந்தக் கதையில் ட்விஸ்ட் என்று பார்த்தால் அது கதாநாயகியை வைத்து தான். இப்படி பார்க்க பார்க்க அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந்த படம் சூரியின் மாமன் படத்தால் வசூலில் பின்தங்கியது. காமெடியை செண்டிமெண்ட் ஜெயித்தது.

இந்த நிலையில், சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வரும் ஜூன் 13ம் தேதி பிரபல ஓடிடி தளமான 'ஜீ5' தளத்தில் வெளியாக உள்ளது என்ற அதிகார பூர்வ தகவலை கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.
இதையும் படிங்க: கோலிவுட்டின் அடுத்த அனுஷ்கா! அழகில் சொக்க வைக்கும் நடிகை கீதிகா திவாரி!