திரையரங்குகளில் புது படங்கள் வெளியே வந்தால் முதல் பேட்டி கூல் சுரேஷாக தான் இருக்கும். அப்பொழுது அவர் பேசும் வார்த்தை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும். ஏனெனில் அவரது பேச்சுக்கள் ஒன்று சர்சையாக மாறும் அல்லது காமெடியாக மாறும். அப்படிப்பட்ட கூல் சுரேஷ் செய்த அட்ராசிட்டி சம்பவம் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வகையில், இயக்குநர் இசக்கி கர்வண்ணன் இயக்கத்தில், தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் 'பரமசிவன் பாத்திமா'. ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய இப்படம் நடிகர் விமலின் 34-வது திரைப்படம் என்பதாலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இப்படத்தில் சாயாதேவி, கூல் சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், அருள் தாஸ், ஸ்ரீ ரஞ்சனி, காதல் சுகுமார், அதிரா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு வரவேற்பு பெற காரணம், இப்படம் காதலுக்கு மதங்கள் தடையாக இருப்பதை உணர்த்தும் படமாக இருப்பதாலேயே என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இப்படத்தின் இசைவெளியிட்டு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். மேலும் படக்குழுவினர் மற்றும் நடிகர் நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், விழாவில் பரமசிவன் கெட்டப் போட்டு பங்கேற்ற கூல் சுரேஷ், வழக்கம் போல் தனது பாணியில் பேச ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: சந்தானத்தை மன்னிச்சிடுங்க பவன் கல்யாண்.. ப்ளீஸ்..! நண்பனுக்காக பேசிய கூல் சுரேஷ்..!

அப்பொழுது தனது உரையை பேச ஆரம்பித்த அவர், வந்திருந்த சிறப்பு விருந்தினரான சீமானை பாராட்டியபடி வரவேற்றார். அப்பொழுது பேசிய அவர், " பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது சீமான் சௌக்கியமா" என பாட்டுப்பாடி வரவேற்றார். அதுமட்டுமல்லாமல், சீமான் என்றால் என்ன தெரியுமா..? தெரியாதவர்களுக்கு சொல்கிறேன், சீமான் என்றால் எழுச்சி... அதுலயும் கூல் சுரேஷ் என்றால் குளிர்ச்சி... நாம் தமிழருக்கு சீமானால் என்றும் உண்டு வளர்ச்சி... நான் ஏன் சீமானை இப்படி புகழ்ந்து பேசுகிறேன் என உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். அதற்கு காரணம் என்னெவெனில், விமலின் 'பரமசிவன் பாத்திமா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு உண்மையில் தகுதியானவர் என பார்த்தால் அது நம் அண்ணன் சீமான் மட்டும் தான். இன்னொரு காரணம் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, பெண்களுக்கு சம உரிமை கொடுத்தவர் அண்ணன் சீமான் மட்டும் தான். அதனால் தான் அவரை தகுதியுடையவர் என சொல்கிறேன் என்றார்.

இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவை குறித்து பேசிய கூல் சுரேஷ், நடிப்பில் இன்றும் அரக்கனாக இருக்கும் கமல்ஹாசன் தற்பொழுது உலக நாயகனாக இருந்து விண்வெளி நாயகனாக மக்கள் மத்தியில் மாறி இருக்கிறார். அதனால், தற்பொழுது உலக நாயகன் பட்டம் காலியாக இருப்பதால், என் அருமை தலைவன் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு அந்த பட்டத்தை கமல்ஹாசன் கொடுக்க வேண்டும் என்று இந்த மேடையில் தாழ்மையுடன் நான் கேட்டுக்கொள்கிறேன். ஆதலால் மக்களே இன்று முதல் உங்கள் உலக நாயகன் சிலம்பரசன். அதேபோல் உங்கள் விண்வெளி நாயகன் கமலஹாசன் என அவரே பட்டத்தை மாறி மாறி பகிர்ந்து கொடுத்து வந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், இது மட்டும் கமல்ஹாசனுக்கும் சிம்புவுக்கும் தெரிந்தால் உங்கள் நிலைமை என்ன ஆகும் என தெரியுமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாஸ் ஹிட் கொடுக்கப்போகும் விஜய் ஆண்டனியின் படம்..! ட்ரெய்லரில் தெறிக்க விட்ட திரில்லர் காட்சிகள்...!