ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் மற்றும் மாரி தொடர்கள் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி நாராயணன். இவர் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை தொடரில் தற்பொழுது நடித்து வருகிறார். இப்படிப்பட்ட சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சால்மா அருண், அனிலா குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் அண்ணாமலை மற்றும் விஜயா ஆகிய தம்பதிக்கு மூன்று பிள்ளைகள்.

அதில் முத்த மகனான 'மகோஜ்', பார்லர் வைத்திருக்கும் 'ரோகிணி'யை திருமணம் செய்து கொண்டார், கதையின் கதாநாயகனான 'முத்து' பூக்கட்டி விற்பனை செய்யும் 'மீனா'வை திருமணம் செய்து கொண்டார். அதே போல் 'ரவி' டப்பிங் ஆர்டிஸ்ட்டான 'ஸ்ருதி'யை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரே வீட்டில் எட்டு பேர் கொண்ட குடும்ப பாங்கான கதை தான் இந்த "சிறகடிக்க ஆசை" சீரியல்.
இதையும் படிங்க: விண்வெளி நாயகனின் பட வசூல் வான்வழி அளவுக்கு கூட நெருங்கவில்லையா.. தியேட்டரில் இருந்து ஓடிடிக்கு மாறும் 'தக்லைப்'..!

இந்த சீரியலில் மக்களின் ஆழ் மனதில் வில்லியாகவும் பித்தலாட்ட காரியாகவும் அனைவரது மனதில் நடிப்பால் குடிபுகுந்த கேரட்ர் என்றால் அது ரோகிணி கேரக்டர் தான். இவர் எப்பொழுது குடுத்பத்திடம் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி பட்ட ரோகிணிக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இந்த சீரியலில் ரோகிணிக்கு துணை நிற்பதோடு அடிக்கடி அவருக்கு தக்லைஃப் கொடுத்து வரும் இவர் மிகவும் பிரபலமாகி உள்ளார்.

இப்படி நடிப்பில் மிகவும் பிசியாக இருக்கும் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த சிலர் இது 'ஏய் தொழில்நுட்பம்' மூலமாக உருவாக்கப்பட்ட மார்பிங் வீடியோ என கூறிவந்தனர். மறுபக்கம், இது ஒரு 'casting couch வீடியோ', சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஸ்ருதியை இவ்வாறு செய்ய வைத்தி இருப்பார்கள் எனவும் இருபுறமும் மாறி...மாறி... பேசி பலர் பதிவிட்டு வந்த நிலையில், தனது அனைத்து இணையதள பக்கங்களையும் பிரைவேட்டில் போட்டு அமைதியாக இருந்தார் ஸ்ருதி நாராயணன்.

திடீரென பிரைவேட்டில் போட்டிருந்த தனது இன்ஸ்டா தளத்தை மீண்டும் அனைவரும் பார்க்கும் வண்ணம் மாற்றி, தான் புடவையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டு, பிறகு ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ.. சரியானதை கண்டுபிடியுங்கள்? என கேட்டு, அதற்கு பின், உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதன்மூலம் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்திருந்தார் ஸ்ருதி. பின் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்தவர் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த வீடியோக்கள் வெளிவர, அது ஏஐ அல்ல தன்னுடைய வீடியோ தான் என்பதை ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில்,சமீபத்தில் கடுக்கா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வேலுநாச்சியார் போஸ்டரை ஸ்ருதி நாராயணன் வெளியிட்டதால் பத்திரிகையாளர் ஒருவர் காட்டமாக கேள்வி கேட்டதால் அங்கிருந்து கண்கலங்கியபடி சென்றார். இந்த நிலையில், ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள 'கட்ஸ்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதி நாராயணன். இந்த வாரம் வெளியாக உள்ள இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார் ஸ்ருதி.

இப்படி இருக்க, படத்தை குறித்து பேசிய இயக்குனரும் நடிகருமான ரங்கராஜ், " இந்த படத்தை பல ஆண்டுகள் போராடி இயக்கியுள்ளேன். ஆனால், சொன்ன தேதியில் இந்த படம் வெளியாகவில்லை. காரணம் என் படம் வெளியாகும் நேரத்தில் கமல்ஹாசனின் 'தக்லைப்' வந்ததால் எங்களுக்கு தியேட்டரே கிடைக்கவில்லை. சரி இந்த வாரம் வெளியிடலாம் என பார்த்தால் வெறும் 77 தியேட்டரில் தான் என்படம் ரிலீஸ் ஆகிறது. ஏன் ஒரு படத்தை பார்க்காமலே அதன் தரத்தை நீங்கள் மதிப்பிட்டு குறைவான தியேட்டரையே ஒதுக்குகிறீர்கள்.

உண்மையில் ஸ்ருதிநாராயணனை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் 'கட்ஸ்' படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ருதிநாராயணன். அவர் படப்பிடிப்பில் இருப்பதால் தான் இந்த பட நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஒண்ணுமில்லை ஒரு சிங்கிள் ஷாட் தான்.. அதிலேயே பிரமாதமாக நடித்து கலக்கியிருக்கிறார். இந்த படத்துக்காக கடுமையாக உழைத்து இருக்கிறார். இங்கே எல்லோரும் தவறு செய்யாத உத்தமர்கள் கிடையாது. அவரது போதாத காலம் அவருக்கு அவப்பெயர் வந்து இருக்கிறது. அதையே சொல்லி அவரை கஷ்டப்படுத்தாதீங்க..அவரை வாழ விடுங்க" என்றார்.
இதையும் படிங்க: எனக்கு ஒரு முகம் இல்ல 100 முகம்.. தனது பயோபிக் படத்திற்கு பெயர் வைத்த சாய் பல்லவி..!