நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என சொல்றது போலத்தான் இப்ப நடிகர் சூரி வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக மட்டுமே விளங்கி வந்த நடிகர் சூரி என்று தனது முகத்தை திரையில் ஹீரோவாக பார்த்தாரோ அன்றிலிருந்து நான் மீண்டும் காமெடி நடிகராக போக மாட்டேன் என அடம்பிடித்து வருகிறார்.

பரோட்டா சூரி என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த இவரது காமெடிகளுக்கு தனி ஃபேன்ஸ் பட்டாளமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நடிகர் சூரி, சாதாரணமாக ஏதோ சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவர் என நினைத்தால் அதுதான் கிடையாது. பல இடர்பாடுகளைக் கடந்து தனது குடும்பத்தின் சூழ்நிலைக்காக பட்டணங்கள் தோறும் சுற்றித் திரிந்த நடிகர் சூரிக்கு கிடைத்த வாய்ப்பை தனது வாழ்க்கையில் கடவுள் கொடுத்த வரமாக நினைத்து அதில் தனது முழு உழைப்பை செலுத்தி இருக்கிறார். அதனால் தான் இப்பொழுது அவர் இந்த வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: "அந்த மனசு தான்யா கடவுள்".. ஈக்குவாலிட்டினா இப்படி இருக்கனும்.. பலரது கவனத்தை ஈர்த்த நடிகர் சூரியின் பதிவு..!

இப்படிப்பட்ட இவர் கடந்த சில வருடங்களாகவே கதாநாயகன் என்ற ரோலிலேயே நடித்து வருகிறார். ஆனாலும் யாராவது ஒருவரின் துணையுடன் இருப்பதைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதால் என்ன பயன் என நினைத்த அவர் தனியாக திரையில் கதாநாயகனாக தோன்ற வேண்டுமென நினைத்து அவரே ஒரு கதை எழுதி இருக்கிறார் என்றால் அதுதான் 'மாமன்' திரைப்படத்தின் கதை. இந்தக் கதையை எழுதியது என்னமோ நடிகர் சூரி தான். ஆனால் இத்திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிக்கா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர் உள்ளிட்டவருடன் இணைந்து நடித்து இருக்கிறார் நடிகர் சூரி. இந்த படமானது மே மாதம் 16ஆம் தேதி நடிகர் சந்தானத்தின் 'டிடி நெக்லஸ் லெவல்' திரைப்படத்துடன் நேரடியாக மோதி களமிறங்கியது.

ஆனால் யார் கண் பட்டதோ என தெரியவில்லை இவரது படத்தால் சந்தானம் படம் பிளப்பானதா அல்லது அவரது படத்தின் குறைகளால் ஃபிளாப் ஆனதா என தெரியவில்லை அவரது படம் முற்றிலுமாக தோல்வி அடைந்தது. மேலும், நடிகர் சூரியன் 'மாமன்' திரைப்படம் சென்டிமென்டில் அனைத்து மக்களின் கண்ணீரையும் வாரி குமித்தது. அதோடு நிற்காமல் கிட்டதட்ட இதுவரை ரூபாய் 45 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆகி சாதனையும் படைத்திருக்கிறது. இதனைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்த நடிகர் சூரி பரவாயில்லையே நம்மளையும் மக்கள் நடிகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே என அடுத்து திரைப்படத்திற்கு கேப்பை விடாமல் மீண்டும் ஒரு அப்டேட்டை மக்களுக்கு கொடுத்து திணற வைத்திருக்கிறார்.

ஒரே போஸ்டால் உலகையே அதிர வைத்திருக்கிறார் நடிகர் சூரி என இணையவாசிகள் பேசும் அளவிற்கு தற்பொழுது அவரது பதிவு அனைவரையும் கவர்ந்து இழுத்து இருக்கிறது. காரணம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ் இன்போ நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு "மண்டாடி" என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் பொழுது அவருக்கு கதாநாயகி ஒருவர் வேண்டுமல்லவா அதற்காக அவருக்கு கதாநாயகியாக களமிறங்கியிருக்கிறார் மகிமா நம்பியார். அனைவருக்கும் மிகவும் பிடித்த இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையில் திரைப்படம் உருவாக இருப்பதால் ஒரு பக்கம் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மறு பக்கத்தில் நடிகர் சுபால் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறாராம். இப்படிப்பட்டதான சூழலில் நடிகர் சூரி அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் இதற்கு உண்டான அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதனைப் பார்த்த அனைத்து நெட்டிசன்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் 'மாமன்' திரைப்படத்தைப் போல உங்களது அடுத்த திரைப்படம் மாபெரும் வெற்றியை அடையட்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்ன மக்களே... சூரியின் 'மாமன்' படத்தை ஓடிடியில் காண தயாரா...!