தமிழ் மட்டுமல்லாமல் உலகின் அனைத்து மொழிகளிலும் மக்களின் அதீத கவனத்தை ஈர்க்கும் விஷயம் என்றால் அதுதான் பாடல்கள். மன்னர் ஆட்சி காலம் முதல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களாட்சி காலம் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பது நடிகர் நடிகைகள் மட்டுமல்ல பாடல்களுமே. சுமார் 70, 80, 90 கால கட்டங்களில் வந்திருக்கும் பாடல்கள் என்றால் கண்ணதாசனின் எழுத்துக்களிலும் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையிலும் பெரிதாக ஈர்க்கப்பட்ட பாடல்களாகவே இருக்கும். இப்பாடல்கள் கேட்க கேட்க அருமையாக இருந்தாலும் அதன் அர்த்தங்களை உற்று நோக்கினால் அந்தப் பாடல்கள் எவ்வளவு கவர்ச்சி வண்ணமயமானது என்பது நமக்குத் தெரியும்.

ஆனாலும் தமிழில் இலக்கண முறைப்படி செதுக்கப்பட்ட கவர்ச்சிகரமான பாடல்கள் இன்று பாடினாலும் தவறாக சித்தரிக்கப்பட மாட்டாது. ஆனால் தற்பொழுதைய கால கட்டங்களில் வரும் ஒரு சில பாடல்கள் கவர்ச்சிகளை வெளிப்படையாக சொல்லும் அளவிற்கு இருக்கிறது. அதிரடியான பாடல்கள், அசத்தலான பாடல்கள், வருத்தமளிக்கும் பாடல்கள், மன அமைதி பாடல்கள், காதல் பாடல்கள், காதல் தோல்வி பாடல்கள், அம்மாவை சார்ந்த பாடல்கள், அப்பாவை சார்ந்த பாடல்கள், சகோதர சகோதரிகள் சார்ந்த பாடல்கள், உறவுகள் சார்ந்த பாடல்கள் என பல பாடல்கள் உள்ளது.
இதையும் படிங்க: இனி தீபாவளி, பொங்கல் என்றால் இவர் படம் இல்லை.. கண்கலங்கியபடி சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார் நடிகர் விஜய்..!

இப்படி, நாம் ஒரு பயணத்தை தொடங்க வேண்டும் என்றாலும், ஒரு நிகழ்ச்சிகளை தொடங்க வேண்டும் என்றாலும், அல்லது ஒருவரது இறுதி ஊர்வலமாகவே இருந்தாலும் அங்கும் பாடல் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படி இருக்க தமிழ் திரையுலகில் தனது வசீகரிக்கும் குரலால் அனைவரையும் தனது உள்ளங்கையில் வைத்திருந்தவர் தான் பாடகி சின்மயி. இவரது குரல்களுக்கு அடிபணியாத ஆட்களே இருக்க முடியாது. அந்த வகையில் அழகான குரலை வைத்திருக்கும் பாடகி சின்மயி, 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற திரைப்படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" என்ற அழகான பாடலை பாடி திரையுலகில் அறிமுகமானார். இதனை அடுத்து 'என்னோடு நீ இருந்தால், மன்னிப்பாயா, வாகை சூடவா திரைப்படத்தில் வரும் சரசர சார காத்து வீசும் போது' முதலான பாடல்களைப் பாடி ஹிட் பாடகையாக வலம் வந்தவர்.

இப்படி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பாடல்களைப் பாடுவதோடு மட்டுமல்லாமல் பின்னணியில் டப்பிங் குரல்களும் கொடுத்து பிரபலமாக வலம் வந்த சின்மயி, சமீபத்தில் '#மெட்டோ' என்ற செயலியில், ஏராளமான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலில் கொடுமைகளை பற்றி தெரிவித்து வந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலில் தொந்தரவுகளை குறித்து பாடகி சின்மயியும் அதில் பகிரங்கமாக தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டுகளை பார்த்து பலர் அவருக்கு ஆதரவு குரல்களை கொடுத்து வந்தாலும், மறுபக்கம் வேண்டுமென்றே அவர் கவிஞர் வைரமுத்துவின் மீது பழி போடுகிறார் என்று தெரிவித்து வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் அதற்குப் பின்பு அவருக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் திரை உலகில் குறைந்து வர, நடிகர் ராதாரவி உத்தரவின் பெயரில் தொலைக்காட்சி மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் சந்தா செலுத்தவில்லை என்ற காரணத்தை கூறி அதிலிருந்து பாடகி சின்மையை வெளியேற்றினார். இதனால் அவருடைய பல வாய்ப்புகள் அவரை விட்டுக் கடந்து சென்றாலும் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை சரி வர பயன்படுத்தி வந்தார் பாடகி சின்மயி.

அதன் விளைவாகவே யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார். இப்படி இருக்க, தற்பொழுது கர்நாடகாவில் மொழி பிரச்சனையை தூண்டி விஸ்வரூபம் எடுத்துள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மேடையில் திடீரென தோன்றிய பாடகி சின்மயி, "முத்த மழை " என்ற பாடலை தனது வசீகரிக்கும் குரலால் பாட, அங்கிருந்த ரசிகர்கள் முதல் பல பிரபலங்கள் வரை அவருடைய பாடலுக்கு மயங்கி கிடந்தனர்.

இந்தப் பாடல்கள் அனைத்தும் யூடுபில் சுமார் 4 மில்லியன் பார்வைகளையும் கடந்து செல்வதால், மீண்டும் சின்மயின் பெயர் சினிமா வட்டாரத்தில் ஒலிக்க தொடங்கி இருக்கிறது என்று கூறலாம். இதனை அடுத்து பல ரசிகர்கள் இந்த பாடலை கேட்டு சின்மையைப் போல ஒரு பாடகியை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பதால் அவருக்கு உண்டான தடைகளை எப்பொழுது நீக்குவீர்கள் என கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். மேலும் அவருடைய தடைகள் நீக்கப்பட்டால் இன்னும் பல வசீகரிக்கும் பாடல்களும் வசீகரிக்க கூடிய நடிகைகளின் குரல்களில் இனிமையும் கிடைக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சக்க போடு போடும் சூரியின் ’மாமன்'... ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது முழுவிவரம்!!