தமிழ் சினிமாவில் "சம்போ சிவ சம்போ" என பாட்டு பாடி உண்மையாக காதலிக்கும் ஜோடிகளை சேர்த்து வைக்க போராடும் நல்ல நண்பர்கள் கொண்ட அதிரடி படமாக வந்து, அனைத்து இளசுகளின் ஆழ் மனதிலும் காதலர்களுக்கு கஷ்டம் என்றால் உதவி செய்ய வேண்டும் என்ற அழகான எண்ணத்தை மனதில் விதைத்த படம் தான் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான "நாடோடிகள்". இந்த படத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் இவரது புகழ் பரவ ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் இவரது வசனங்கள் எல்லாம் ஹிட் தான் குறிப்பாக "குத்துவது நண்பனாக இருந்தாலும் செத்தாலும் வெளியே சொல்ல கூடாது" என்ற வசனத்திற்கு எல்லாம் தியேட்டரில் விசில் பறந்தது.

இவர் 2008ம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்த "சுப்ரமணியபுரம்" படத்தை யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக அந்த படத்தில் வரும் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" என்ற பாடலைஇன்று கேட்டாலும் அனைவரது உள்ளத்தில் இருந்து காதல் மலரும். இதனை அடுத்து " நாடோடிகள்" படத்திற்கு கிடைத்த வரவேற்பு இதனை அடுத்து எடுத்த நான்கு படங்களுக்கு இல்லாமல் போனது.
இதையும் படிங்க: சண்டைய ஆரம்பிச்சுட்டீங்க... ஆனா மக்கள மறந்துட்டீங்க... நடிகை சிம்ரன் பேச்சு..!

ஈசன், போராளி, கோ, மெரினா ஆகிய படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தாலும் அதற்கு பின்பாக வந்த சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, பலே வெள்ளையத் தேவா, கிடாரி, வெற்றிவேல், கொடிவீரன், அசுரவதம், அடுத்த சாட்டை, எனை நோக்கி பாயும் தோட்டா, கென்னடி கிளப், பேட்ட, நாடோடிகள் 2, உடன்பிறப்பே, முந்தானை முடிச்சு, எம் ஜி ஆர் மகன், ராஜ வம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, காரி, நான் மிருகமாய் மாற, அயோத்தி, நா நா, நந்தன், கருடன் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட் படங்காளாவே அமைந்தது.

இப்படி இருக்க, தற்பொழுது நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி, இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக இருப்பது தான் டூரிஸ்ட் ஃபேமிலி படம். இந்த படத்தை 24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து தமிழ் மக்களும் பார்த்து விட்டு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் முரளி என்ற கேரக்டரில் வரும் கமகேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சூழலில், இப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து நடிகர் சசிகுமாருக்கு பல படவாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்க தற்பொழுது நேர்காணலில் பேசிய சசிகுமார், "இந்த படம் வெற்றி அடைந்ததால் இனி நான் நடிக்கும் படங்களில் சம்பளத்தை உயர்த்தி கேட்பேன் என சொல்லுகின்றனர். அப்படியெல்லாம் கிடையாது நான் என் சம்பளத்தை உயர்த்த போவதில்லை. மேலும் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் பலரின் கனவை நினைவாக்கியுள்ளது. நல்ல கதைகள் வைத்திருப்போருக்கும் நிறைய நம்பிக்கை கொடுத்துள்ளது. இனி யாரும் ஒரே மாதிரியான பேட்டனில் படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வித்தியாசமான படம் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை டூரிஸ்ட் ஃபேமிலி படம் கொடுத்துள்ளதாக நினைக்கிறேன். இன்னும் நிறைய ஃபேமிலி ஆடியன்ஸ் திரையரங்குக்கு வந்து படம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பின் எனக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இப்படியா படம் எடுப்பாங்க.. யார் அந்த டைரக்டர்..! டூரிஸ்ட் ஃபேமிலி பற்றி விமர்ச்சித்த அமைச்சர் மா.சு..!