அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்லும் அளவிற்கு, நடிகர் விஜய் என்று தமிழக வெற்றிக்கழகம் என பெயர் சூட்டப்பட்டு கட்சியை தொடங்கினாரோ அன்றிலிருந்து அவருக்கு எதிர்ப்புகளும் வந்த வண்ணமே இருக்கிறது என்று கூறலாம். அந்த வகையில் தற்பொழுது ஜனநாயகன் திரைப்படத்தை முடித்துக் கொண்டு முழுநேர அரசியல்வாதியாக களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜய், தமிழக மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்து இதுதான் நம்ம சர்கார் என கூறிக் கொண்டு வருகிறார்.

சர்க்கார் திரைப்படத்தில் எந்த இடமாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும் சரி, அந்த இடத்தில் நேரடியாக சென்று கேள்விகளை அதிரடியாக கேட்பதை தனது வழக்கம் என்று கூறிய விஜய், அதேபோல் நிஜ வாழ்விலும் அரசியல் களத்தில் எந்த இடமாக இருந்தாலும் நேரடியாக சென்று தனது கேள்விகளை அதிரடியாக கேட்டுக் கொண்டு வருகிறார். அதனாலையே அவருக்குப் பின்பாக தொண்டர்கள் பட்டாலும் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இப்படி இருக்க, நடிகர் விஜய் எப்படிப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்தாலும் அதற்கு சிக்கல் கொடுப்பதற்கும், சிக்கலான பேச்சுகளை பேசுவதற்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது என அவரது தொண்டர்களும் ரசிகர்களும் பெரும்பாலாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் பிடியில் ஜனநாயகன்.. அனுமதி பெற காத்திருக்கும் பட குழுவினர்..!

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்த தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் நடந்து முடிந்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு அவ்வப்போது ஊக்கம் அளிக்கும் வகையில் நடிகர் விஜய் அவர்களுக்கு கௌரவ பரிசுகளை வழங்கி வருகிறார். அந்த மேடையில் தன்னிடம் வரும் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் மாணவ மாணவி செல்வங்களின் ஆசைக்கு இணங்க அவர்கள் தோள்களின் மீது கையை போட்டு குடும்பத்தில் ஒருவரை போல புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார் நடிகர் விஜய். இந்த சூழலையில் அதனை தவறாக சித்தரித்து பேசி இருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

அதன்படி செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் பேசுகையில், "சேலம் கூட்டத்தில் இளம் பெண்கள் பல கணவன் மனைவி தாய் தந்தையர்கள் கூடுகிற இடத்தில், அநேக பெண்கள் பல சினிமா நிகழ்ச்சிகளில் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சினிமா கதாநாயகர்களையே தங்களுக்கான அவதார புருஷனாக நினைத்து கொண்டு, அவர்களை கட்டிப்பிடிப்பது முத்தமிடுவது என பெற்ற தாய் தந்தையர்கள் முன்னிலையில் இது போன்ற அநாகரிகமான காரியங்களை செய்வது. பல்வேறு ஊடகங்கள் பத்திரிகைகள் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி செய்வது வாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல.. பல நடிகர்களின் பெயர்களை இந்த நேரத்தில் பட்டியலிட்டு அவர்களது நடிப்பை பாராட்டுங்கள். அவர்களது நடிப்பை நீங்கள் எப்பொழுதும் ரசியுங்கள், அதனை ஒருபொழுதும் நான் எதிர்க்க மாட்டேன். ஆனால், பெற்றோர்களாகிய நீங்கள், இத்தனை வருட காலம் கஷ்டப்பட்டு பெத்து வளர்த்து ஆளாக்கிய உங்களது குழந்தை செல்வங்களை குறிப்பாக பெண்களை நீங்கள் இது போன்ற அரிதான சினிமாக்காரர்களிடம் அதிக அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ள அனுமதிக்க கூடாது.

இது நாகரிகமான காரியமே அல்ல நம்மளுடைய தமிழுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது தமிழகத்தில் வாழும் காமராஜர், வருங்கால காமராஜர் என்று எல்லாம் விஜயை ஒப்பிட்டு பேசியதற்கு பதில் சொல்வதைப் போல் இப்பொழுது நான் சொல்லுகிறேன், தற்பொழுது ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அரசியலுக்கு வந்த விஜய் எல்லாம் காமராஜருடன் ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல. காமராஜருடைய தியாகம், அர்ப்பணிப்பு, நேர்மை, ஒழுக்கம் இவையெல்லாம் துளி கூட இல்லாத சிலர் திரைத்துறையில் வசனங்களை பேசக்கூடிய சினிமா நடிகர்களை அவர்களுடன் ஒப்பிடக் கூடாது. உங்களைப் பெற்ற தாய்க்கு என்றைக்காவது பாலபிஷேகம் செய்திருக்கிறீர்களா எதற்காக சினிமாக்காரனுக்கு போய் பாலபிஷேகம் செய்கிறீர்கள். அப்படிப்பட்ட சினிமாக்காரர்களுக்காக, படங்களை பார்க்க ஒரு நாளைக்கு முன்பாகவே வந்தேன் அவரைப் பார்த்தால் போதும் அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்தால் போதும் என பத்திரிகை ஊடகங்களில் பெண் பிள்ளைகள் பேசுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.

இதையெல்லாம் பெற்றோர்கள் ஒரு காலமும் அனுமதிக்க கூடாது. நான் பேசிய அனைத்து வீடியோக்களையும் பார்க்காத சில அரைகுறைகள், என்னை பார்த்து எங்களுடைய தளபதி குறித்து நீ பேசி விட்டாய் உன்னை சும்மா விட மாட்டோம், நீ ஒழுங்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கூக்குரல் இடுவது எல்லாம் இங்கு வேண்டாம். என்னை நீங்கள் அனைவரும் சும்மாய் நினைக்க வேண்டாம் நான் சும்மா ஒன்றும் அரசியலுக்கு வரவில்லை ஒன்றிய அரசாங்கத்திலிருந்து தவறு செய்கின்ற அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்து அரசியலுக்கு வந்தவன். எங்கேயாவது நடிகர் விஜய் இளம் பெண்களை கட்டி அனைத்து முத்தம் கொடுத்தார் என்று நான் சொல்லி இருக்கேனா? பரிசு கொடுக்க வந்த இடத்தில் அப்படி நடந்து கொண்டார் என நான் சொல்லி இருக்கேனா... அப்படி நான் சொல்லாத ஒன்றை சித்தரித்து பேசி நீங்கள் ஏன் இப்படி பிரச்சினைகளை எடுத்துக் கொள்கிறீர்கள். அதேபோல் நடிகர் விஜய் நான் பேசுவது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் ஒரு தலைவராக நீங்கள் அறிக்கையை வெளியிடுங்கள் அல்லது நீங்கள் பேசுங்கள் ஆனால் நேற்று மழையில் இன்று முளைத்த காளான்களை எல்லாம் ஒரு கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய என்னை பேச அனுமதிக்காதீர்கள்" என பேசியிருந்தார்.

இப்படி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதை கேட்ட நடிகர் தாடிபாலாஜி, அவரது கட்சியின் அலுவலகத்திற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவரது கட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய நடிகர் தாடி பாலாஜி, "இன்று நான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தை நடத்தலாம் என்று முடிவெடுத்து இருந்தேன். ஏன் எனப் பார்த்தீர்கள் என்றால் மரியாதைக்குரிய அண்ணன் வேல்முருகன் அவர்கள், நடிகர் விஜய் அவர்களை குறித்து மிகவும் தவறாக பேசியிருந்திருக்கிறார். அவர் பேசியிருப்பதை நான் தனி மனித தாக்குதலாகவே பார்க்கிறேன். வேல்முருகன் பேசியது மிகவும் பெரிய தவறு ஏனெனில், தொடர்ந்து நடிகர் விஜயை கூத்தாடி என்பது சினிமாக்காரன் என பல நாகரிகம் மற்றும் முறையில் பேசி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் ஒரு கல்வி சார்ந்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் விஜயை பார்த்து, அந்த நிகழ்ச்சியை மிகவும் கொச்சைப்படுத்தும் அளவிற்கு வேல்முருகன் பேசியிருக்கிறார்.

அதில் நடிகர் விஜய் குழந்தைகள் மீது கையை போட்டு பேசுகிறார், இதெல்லாம் அவருக்கு கேவலமாக இல்லையா என்றெல்லாம் பேசுகிறார். நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் முதலாவதாக அவர்கள் அனைவரும் விஜயை அண்ணனாக பார்க்கிறார்கள், அதுமட்டுமல்லாமல் அப்பாவாகவும் பார்க்கிறார்கள் இப்படி இருக்கும் பொழுது அவரை நீங்கள் எப்படி தவறாக கூறுவீர்கள். அதனாலேயே என்று அவர்கள் அலுவலகத்திற்கு முன்பாக தர்ணா போராட்டம் செய்ய இருந்தேன். இதனை எப்படியோ தெரிந்து கொண்ட வேல்முருகன் காவல்துறையை நாடிவிட்டார். உடனே இன்ஸ்பெக்டர் எனக்கு தொடர்பு கொண்டு என்னிடம் பேசியதால் மட்டுமே இப்பொழுது இந்தப் போராட்டத்தை கைவிட்டு இருக்கிறேன். இதனை தொடர்ந்து இதே போல் வேல்முருகன் பேசிக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் என்னுடைய போராட்டத்தை அவர் காண வேண்டி இருக்கும்" என தெரிவித்தார்
இதையும் படிங்க: இனி தீபாவளி, பொங்கல் என்றால் இவர் படம் இல்லை.. கண்கலங்கியபடி சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார் நடிகர் விஜய்..!