தமிழ் திரையுலகில் "நானும் மதுர காரன் தாண்டா" என சொல்லி மக்கள் மத்தியில் அதிகம் ஃபேமஸ் ஆனவர் தான் நடகர் விஷால். அவரது படங்களில் தாமிரபரணி, சண்டைக்கோழி படங்களை யாராலும் மறக்க முடியாது. அப்பொழுதே மக்கள் மனதில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஷால், அடுத்தடுத்து தனது நடிப்பால் பல இளசுகளின் மனதை கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் பார்க்க கருமையாக இருந்தாலும் உடல் வலிமையில் ஜைஜான்டிக்காக இருந்தாலும் மனதளவில் ஒரு குழந்தை என்றே சொல்லலாம்.

முன்னணி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான ஜி. கே. ரெட்டி என்பவரின் மகனான விஷால் தனது கல்லூரி படிப்பை முடித்ததும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரரும் அவரை படத்தில் நடிக்க வைக்க விரும்பினர், அதனால் சினிமா துறையில் கால் வைத்த விஷால் முதலில், நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி சினிமாவின் நுணுக்கங்களை கற்று கொண்டார். அதன் பின், செல்லமே படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்க உடனே நடிப்பிற்கான பயிற்சியை பெற்று அந்த படத்தில் நடித்தார். அந்த படமும் ஹிட் அடிக்க அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: சந்தானத்தை மன்னிச்சிடுங்க பவன் கல்யாண்.. ப்ளீஸ்..! நண்பனுக்காக பேசிய கூல் சுரேஷ்..!

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பொழுது அவரது ஆர்.கே. நகர் தொகுதியில் தைரியமாக போட்டியிட்டார். இது அந்த சமயத்தில் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்த சூழலில் தற்பொழுது தமிழ் சினிமா சங்கக்கத்தில் தலைவராக உள்ளார் நடிகர் விஷால். இப்படி இருக்க, இதுவரை தமிழ் திரையுலகில், செல்லமே, சண்டக்கோழி, சிவப்பதிகாரம், டிஷ்யூம், திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, வெடி, அவன் இவன், சமர், தீயா வேலை செய்யணும் குமாரு, பட்டத்து யானை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஆம்பள, பாயும் புலி, தாக்க தாக்க, கதகளி, மருது, கத்திச்சண்டை, துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டகோழி 2, ஆக்ஷன், அயோக்யா, எனிமி, சக்ரா, லத்தி, வீரமே வாகை சூடும், மார்க் ஆண்டனி, ரத்னம், நாளை நமதே, துப்பறிவாளன் 2, மத கஜ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த சூழலில், ஏற்கனவே 'மதகஜராஜா' விழாவில் கலந்து கொண்ட விஷாலிடம் பேசும்பொழுது கைகள் நடுங்குவதை பார்த்து ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற கூவாகம் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் விஷால், அப்போது திடீரென மேடையிலிருந்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பலரும் விஷால் குடித்து வந்தார், போதை பொருள் பயன்படுத்தியதால் தான் மயங்கி விழுந்தார் என கூறி வந்தனர். இது குறித்து பேசிய விஷால், மது, சிகரெட் என எல்லா கெட்ட பழக்கங்களையும் நான் விட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 2 வருடத்திற்கு முன்பே குடிப்பதையும் நிறுத்திவிட்டேன்.

இதனாலேயே நான் பார்ட்டிக்கு போவதையும் விட்டுவிட்டேன். நான் கடைசியாக இயக்குனர் சுந்தர் சி சார் பர்த்டே பார்ட்டிக்கு தான் போனேன். என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. கண்களுக்கு தெரியாத சிலரது கற்பனைகளுக்கு ஏற்றவாறு பேசுவார்கள். அது ஒருபோதும் என்னை பாதிக்காது. இதிலிருந்தும் நான் சீக்கிரம் மீண்டு வருவேன். எனக்காக குரல் கொடுக்கும் எனது ரசிகர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி" என கூறினார்.
இதையும் படிங்க: ஆர்த்தி வேண்டாம் குழந்தைகள் போதும்..! கெனிஷா தான் என் புது துணை - ரவி மோகன் அறிக்கை..!