தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு ஆர்.பி.சவுத்ரி சென்றிருந்த போது, அவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Films) நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.பி.சவுத்ரி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தவர். விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பல முன்னணி இயக்குநர்களையும், நடிகர் விஜய் போன்ற நட்சத்திரங்களின் திரைப்பயணத்தில் முக்கியத் திருப்புமுனை ஏற்படுத்திய படங்களையும் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு.
இதையும் படிங்க: ஜனநாயகன் படத்தில் வரப்போகும் டிவிஸ்ட்..!! தளபதி விஜய் கிடையாது.. பட்டத்தை மாற்றிய படக்குழு.. என்ன தெரியுமா..!
அவரது மறைவுக்குத் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் சூழலில், அவரது ஆரம்பகால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளரின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் நடத்திய பாலிவுட் நடிகை சாரா அலிகான்..! அசர வைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!