கொளத்தூரில் பல்வேறு நலத் உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். மேலும் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திறந்து வைத்தும் வருகிறார். இன்றைய தினம் சென்னை கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள மறுவாழ்வு மையம் மற்றும் நியாய விலை கடை ஆகியவற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மேலும் பட்ஜெட் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

அப்போது, மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். பாஜகவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று உறுதிப்பட கூறினார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்காதது குறித்த கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பதில் கொடுத்தார். சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குழு விரைவில் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!
காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார். யாரையும் நான் எதிரியாக பார்ப்பதில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் நுழைந்துள்ள புதிய எதிரிகள் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இவ்வாறு பதிலளித்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு டான்ஸ் ஆட தான் தெரியும்..! ஒரு கட்சித் தலைவரின் செயலா? பாஜக குறித்த விமர்சனத்துக்கு நயினார் பதிலடி..!