• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரி குடும்பத்தினர்! அரசு உடனே மீட்க வேண்டும் என மகன் கண்ணீர் கோரிக்கை!

    அவர்கள் எந்த இடத்தில் உள்ளனர், தற்போதைய சூழ்நிலை எப்படி உள்ளது என்பது குறித்த முழுமையான தகவல் கிடைக்காததால் உறவினர்கள் கவலையுடன் உள்ளனர்.
    Author By Pandian Thu, 27 Aug 2026 13:40:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puducherry Kailash Yatra Three Pilgrims Safe in Nepal Flood Son Seeks Government Rescue

    புதுச்சேரி: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கியதாகக் கருதப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்களை விரைவாக தொடர்புகொண்டு மீட்டு புதுச்சேரிக்கு அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரியைச் சேர்ந்த கீதா, அவரது மகள் வைஷ்ணவி மற்றும் உறவினரான ஆனந்தசுந்தரி ஆகிய மூவரும் கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலா முகமை மூலம் கைலாச யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட அவர்கள், திங்கள்கிழமை காலை நேபாள தலைநகர் காத்மாண்டுவை சென்றடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    பயணம் தொடங்கியதிலிருந்து தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசி வந்துள்ளனர். இதனால் அவர்களது பயணம் குறித்து குடும்பத்தினரும் தொடர்ந்து தகவல்களை அறிந்து வந்தனர்.

    இதையும் படிங்க: சற்றே நிம்மதி! நேபாள வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி தம்பதி நலம்! மகளுக்கு போன் மூலம் தகவல்!

    இந்த நிலையில், புதன்கிழமை காலை மூவரும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். அதன்பிறகு நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் மற்றும் மோசமான வானிலை குறித்த செய்திகள் வெளியாகத் தொடங்கியதால், குடும்பத்தினர் பதற்றமடைந்துள்ளனர்.

    மூவரையும் செல்போன் மூலம் தொடர்புகொள்ள குடும்பத்தினர் பலமுறை முயன்றபோதும் தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்களது நிலை குறித்து கவலை ஏற்பட்டது.

    KailashYatra

    இதனிடையே, புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத் துறையிடமிருந்து மாலை 6.30 மணியளவில் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதில், காணாமல் போனதாகக் கருதப்பட்ட கீதா, வைஷ்ணவி மற்றும் ஆனந்தசுந்தரி ஆகிய மூவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும், நேரடியாக அவர்களுடன் பேச முடியாததால் குடும்பத்தினரின் பதற்றம் முழுமையாக நீங்கவில்லை. அவர்கள் எந்த இடத்தில் உள்ளனர், தற்போதைய சூழ்நிலை எப்படி உள்ளது என்பது குறித்த முழுமையான தகவல் கிடைக்காததால் உறவினர்கள் கவலையுடன் உள்ளனர்.

    இதுகுறித்து கீதாவின் மகன் விஷ்ணுராம் கூறுகையில், தனது தாய், சகோதரி மற்றும் உறவினர் ஆகிய மூவரும் கைலாச யாத்திரைக்காக நேபாளம் சென்றதாகவும், புதன்கிழமை காலை வரை தங்களுடன் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதன்பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மைத் துறையிடம் இருந்து மூவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் அவர்களுடன் நேரடியாக பேச முடியாததால் கவலை நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், “அவர்களை உடனடியாக தொடர்புகொண்டு, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்து, அங்கிருந்து புதுச்சேரிக்கு அழைத்து வர அரசு மற்றும் அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என விஷ்ணுராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நேபாள வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியுள்ள நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் பாதுகாப்பாக இருப்பதாக கிடைத்துள்ள தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டு, பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை குடும்பத்தினர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேர் மாயம்! ஏஜென்சி அலுவலகத்தில் போலீஸ் விசாரணை! தொடரும் பதற்றம்!

    மேலும் படிங்க
    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    இந்தியா
    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    2029-ல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்! அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    2029-ல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்! அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    இந்தியா
    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய

    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'ஒலிய் தராஜலி துஸ்ட்லிக்' விருது வழங்கி கவுரவம்!

    உலகம்

    செய்திகள்

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    இந்தியா
    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    2029-ல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்! அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    2029-ல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்! அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    இந்தியா
    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'ஒலிய் தராஜலி துஸ்ட்லிக்' விருது வழங்கி கவுரவம்!

    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'ஒலிய் தராஜலி துஸ்ட்லிக்' விருது வழங்கி கவுரவம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share