• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'ஆன்மீகத்தின் முதல் எதிரி… திமுக அரசே தெளிவுபடுத்து...' திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொங்கியெழுந்த எம்.பி.,சு.வெங்கடேசன்

    திடீரென இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது. 
    Author By Thiraviaraj Thu, 06 Feb 2025 09:12:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-government-please-clarify-mp-su-venkatesan-who-was

    ''திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப்பெருமான் சம்பந்தப்பட்டதோ, மலை சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க பாஜக-வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது'' என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், ''பாஜக வின் வெறுப்பு அரசியலை முறியடிக்கும் வலிமை திருப்பரங்குன்றத்து மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு. திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. 90-களில் இராமகோபாலன் வகையறாக்கள் முயற்சி செய்து தோல்வியடைந்ததை இப்பொழுது ஹெச்.ராஜா,அண்ணாமலை வகையறாக்கள் கையிலெடுத்துள்ளனர். 

    BJP

    திருப்பரங்குன்றம் மலை மீது இந்து அறநிலையத்துறைக்கான உரிமை என்ன, சிக்கந்தர் தர்காவுக்கான உரிமை என்ன என்பது குறித்து, பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தீர்ப்பு வழங்கி உறுதிப்படுத்தியுள்ளன. திருப்பரங்குன்றத்து மக்களாலோ, அல்லது சம்பந்தப்பட்ட இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தாலோ அல்லது தர்கா நிர்வாகத்தாலோ உரிமை சம்பந்தமான பிரச்சனை எதுவும் இப்போது எழுப்பப் படவில்லை. பின்னர் பிரச்சனையை எழுப்புவது யார்? ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் அமைப்புகள்தான். ஒன்றாகவும் நன்றாகவும் இருக்கும் ஊரில் மதவெறியை கிளப்பிவிட்டு தங்களின் வாக்கு வங்கியை பலப்படுத்த இதுவொன்றே வழி என்று இறங்கியுள்ளன.

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு.. வெற்றி யாருக்கு..?

    அயோத்தி துவங்கி சம்பல் வரை அரங்கேற்றிய நிகழ்ச்சி நிரலை இங்கும்  அரங்கேற்ற முயல்கின்றனர்.இவர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிய இந்த இடங்களில் எல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றங்கள், இவர்களின் செயல்திட்ட நிறைவேற்றத்தின் பகுதியாக இருந்துள்ளன என்பது கசப்பான உண்மை. திருப்பரங்குன்றத்திலும் அச்சு அசலாக அதே மாதிரியை இவர்களால் அரங்கேற்ற முடிகிறது என்றால் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது என்பதே பொருள். திடீரென இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது. 

    BJP

    இங்கு வழிபாடு சார்ந்த உரிமை பிரச்சனை எழுப்பப்பட்டது என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள். இந்த பிரச்சனையை எழுப்பியது யார்? தர்காவில் கந்தூரி வழிபாட்டு உரிமையில் எந்த அடிப்படையில் காவல்துறை தலையிட்டது. காவல்துறைக்கு புகார் கொடுத்தது யார்? வருவாய் துறை எந்த அடிப்படையில் இதில் தலையிட்டது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் இந்துத்துவா அமைப்பினரின் நுண் திட்டங்களுக்குள் பொதிந்து கிடக்கிறது. 

    திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்று அவர்களாகவே கேள்வி எழுப்பி, போலி வாட்ஸ் அப் செய்திகளை உருவாக்கி, பொது சமூகத்தில் பரப்பியவர்கள் குறித்து துளி அளவாவது அக்கறை கொண்டு காவல்துறை தலையீடு செய்ததா? வெறுப்பு பிரச்சாரம் தங்கு தடையின்றி பரப்படும் போது ஒரு நடவடிக்கைகூட காவல்துறையிடமிருந்து இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. 

    ஜனவரி 27 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் திமுக, அதிமுக, காங்., சிபிஎம், சிபிஐ, தெமுதிக, விசிக, மநீமை, மமக, ஐயூஎம் எல் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் இது வரை இருந்து வந்துள்ள வழிபாட்டு மரபுகள் என்ன என்பதையும், அதில் தலையீடு செய்து பிரச்சனையை உருவாக்கி மக்கள் ஒற்றுமையை கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் ஆணையருக்கும் மனு அளித்துள்ளனர். மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பவர்களை தனிமை படுத்த கோரும் மிக முக்கிய நடவடிக்கை இது. அரசியல் கட்சிகள் மிகுந்த பொறுப்புணர்வோடு இந்த பணியை செய்தன. 

    இந்த கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டுந்தான், இதற்கு முன் இந்த ஊரில் இருந்தார்களா? மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையில் அயல்நாட்டிலிருந்து ஜனவரி மாதம் தான் திருப்பரங்குன்றத்தில் நுழைந்துள்ளார்களா? காலகாலமாக இருந்து வரும் வழிபாட்டு மரபுகள் பற்றி எதுவும் தெரியாதது போல, கட்சிகள் சொல்வதை எழுதி வாங்கி, நாங்கள் நீதிமன்றத்தில் தருகிறோம் என்று சொல்வது மட்டும்தான் மாவட்ட நிர்வாகத்தின் பணியா?

     BJP

    மதவெறியர்களை தனிமைப்படுத்த வேண்டிய ஒரு பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமான அணுகுமுறையோடு செயல்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு நிறைவேற்றப்பட்ட முறையும், நேற்று நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் வாதிட்ட முறையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதற்கு யார் பொறுப்பேற்பது என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும். திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப்பெருமான் சம்பந்தப்பட்டதோ, மலை சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க பாஜக-வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது. 

    அக்கட்சியின் தலைவர் ஹெச்.ராஜா, திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும், அயோத்தி போல முதல் யுத்தம் திருப்பரங்குன்றத்தில் துவங்கிவிட்டது என்றும் பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஷம் கக்கியுள்ளார். எந்த அயோத்தியை தங்கள் அரசியலின் அடிப்படையாக்கினார்களோ அதே அயோத்தியில் இந்த மக்களவை தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள்.  

    மதவெறியை தனிமை படுத்தும் ஆன்மீக பலமும், பாசிசத்தை எதிர்கொண்டு வீழ்த்தும் மதச்சார்பற்ற அரசியலின் தனித்துவமிக்க பலமும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.  ஹெச் ராஜாவின் மதவெறி கணக்குகளை தவிடுபொடியாக்கும் வலிமை குன்றத்திற்கு உண்டு. தீய நோக்கங்களுக்காக இறைவனின் பெயரை பயன்படுத்துபவனே ஆன்மீகத்தின் முதல் எதிரி என்பதை நன்கு அறிந்த திருப்பரங்குன்றத்து மக்களும், தமிழகத்து மக்களும் பாஜக-வின் வெறுப்பு அரசியலை முறியடித்து காட்டுவார்கள்'' என அவர் தெரிவித்துள்ளார்.
     

    இதையும் படிங்க: கள்ள ஓட்டு போட முயன்ற நாதகவினர்... கையும் களவுமாக பிடித்த திமுகவினர்... ஈரோடு கிழக்கில் பரபரப்பு..! 

    மேலும் படிங்க
    #BREAKING: இரு நாட்டு பிரதமர்களின் விவேகத்தை பாராட்டுகிறேன்! போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மகிழ்ச்சி....

    #BREAKING: இரு நாட்டு பிரதமர்களின் விவேகத்தை பாராட்டுகிறேன்! போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மகிழ்ச்சி....

    உலகம்
    தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கும் விஜய் மகன்..! ஜேசன் சஞ்சய் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா..!

    தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கும் விஜய் மகன்..! ஜேசன் சஞ்சய் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா..!

    சினிமா
    போர் நிறுத்தப்பட்டது; ஆனால் இது கண்டிப்பா தொடரும்.. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!!

    போர் நிறுத்தப்பட்டது; ஆனால் இது கண்டிப்பா தொடரும்.. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!!

    இந்தியா
    இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகும் டாப் 5 கார்கள் லிஸ்ட்!

    இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகும் டாப் 5 கார்கள் லிஸ்ட்!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. டிரம்ப் செய்த தரமான சம்பவம்; என்ன பேசி போரை நிறுத்தியிருப்பார்?

    இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. டிரம்ப் செய்த தரமான சம்பவம்; என்ன பேசி போரை நிறுத்தியிருப்பார்?

    உலகம்
    முதல் முறையாக இளையராஜாவை புகழும் ரசிகர்கள்..! ராணுவத்திற்கு என்ன கொடுத்திருக்கிறார் தெரியுமா..! 

    முதல் முறையாக இளையராஜாவை புகழும் ரசிகர்கள்..! ராணுவத்திற்கு என்ன கொடுத்திருக்கிறார் தெரியுமா..! 

    சினிமா

    செய்திகள்

    #BREAKING: இரு நாட்டு பிரதமர்களின் விவேகத்தை பாராட்டுகிறேன்! போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மகிழ்ச்சி....

    #BREAKING: இரு நாட்டு பிரதமர்களின் விவேகத்தை பாராட்டுகிறேன்! போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மகிழ்ச்சி....

    உலகம்
    போர் நிறுத்தப்பட்டது; ஆனால் இது கண்டிப்பா தொடரும்.. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!!

    போர் நிறுத்தப்பட்டது; ஆனால் இது கண்டிப்பா தொடரும்.. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!!

    இந்தியா
    இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. டிரம்ப் செய்த தரமான சம்பவம்; என்ன பேசி போரை நிறுத்தியிருப்பார்?

    இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. டிரம்ப் செய்த தரமான சம்பவம்; என்ன பேசி போரை நிறுத்தியிருப்பார்?

    உலகம்
    #BIG BREAKING: பாகிஸ்தானின் தற்காப்பு திறன்களை இந்தியா அழித்துவிட்டது.. மத்திய அமைச்சக அதிகாரிகள் அறிவிப்பு..!

    #BIG BREAKING: பாகிஸ்தானின் தற்காப்பு திறன்களை இந்தியா அழித்துவிட்டது.. மத்திய அமைச்சக அதிகாரிகள் அறிவிப்பு..!

    இந்தியா
    #BIG BREAKING: அமெரிக்காவால் போர் நிறுத்தமா? இந்தியா மறுப்பு..!

    #BIG BREAKING: அமெரிக்காவால் போர் நிறுத்தமா? இந்தியா மறுப்பு..!

    உலகம்
    #BREAKING முடிவுக்கு வந்தது பதற்றம்.. போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது இந்தியா!!

    #BREAKING முடிவுக்கு வந்தது பதற்றம்.. போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது இந்தியா!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share