அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இதன் உச்சமாக, 36 குழந்தைகளை சீரழித்த உலகின் மோசமான காமுகன் ஒருவனுடன் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக மஸ்க் கூறி இருப்பது உலகத்தையே திடுக்கிட வைத்துள்ளது. உலகின் பயங்கரமான காமுகன்களில் ஒருத்தனான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் Jeffrey Epstein டிரம்புக்கு தொடர்பு இருக்கிறது என்று மஸ்க் அதிர வைத்துள்ளார்.

‛உண்மையிலேயே பெரிய குண்டை போடுவதற்கான நேரம் வந்து விட்டது. எப்ஸ்டீன் ஆவணத்தில் டிரம்பும் இருக்கிறார். எனவே தான் அந்த ஆவணத்தை பொதுவெளியில் வெளியிடவில்லை’ என்று சொன்ன மஸ்க், அதோடு, ‛Have a nice day, டிரம்ப்’ என்று சொல்லி சீண்டி இருக்கிறார். ஜெஃப்ரீ எப்ஸ்டீன் அமெரிக்காவையே நடுங்க வைத்த மிகப்பெரிய காமுகன்.
இதையும் படிங்க: U Turn அடித்தார் ட்ரம்ப்.. இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை என விளக்கம்..!
ஆசிரியராக வேலையை ஆரம்பித்தவன். பின்னர் நிதி சார்ந்த வேலைகளை கவனித்தான். பெரிய பெரிய புள்ளிகளுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் நட்பாக பழகிக்கொண்டான். அவனுக்கு பணமும் கொட்ட ஆரம்பித்தது. தனி தீவு ஒன்றை வாங்கினான்.

அங்கு அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் அவனது பார்வை குழந்தைகள் மீது திரும்பியது. மொத்தம் 36 குழந்தைகளை கடத்தி, தீவுக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்தான்.ஒரு கட்டத்தில் அவனது உண்மையான முகம் படிப்படியாக வெளியே தெரிய ஆரம்பித்தது.
அவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிறுமிகளின் புகார்கள் குவிய ஆரம்பித்தன. 2008ல் முதல் முறையாக அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதுவும் 2 வழக்குகளில் மட்டும் தான். ஒன்று சிறுமியிடம் அத்துமீறி நடந்த வழக்கு. இன்னொன்று சிறுமியை விபச்சாரத்துக்கு ஈடுபடுத்த முயன்ற வழக்கு. தண்டனை பெற்று சிறைக்கு சென்றவன், 13 மாதங்களில் வெளியே வந்து விட்டான். பின்னர் 2019ல் மீண்டும் அவனை போலீசார் கைது செய்து உள்ளே போட்டனர். இந்த முறை அவன் மீது பிடி இறுகியது.

ஆனால், அதே ஆண்டில் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தான் எப்ஸ்டீன். தண்டனைக்கு பயந்து உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது.இருப்பினும் அவனது சாவின் பின்னால் இருக்கும் மர்மம் இப்போது வரை முழுமையாக வெளியே வரவில்லை.
சிறுமிகளை சீரழித்த சம்பவங்களில் அவனுடன் பெரிய பெரிய கைகளுக்கு தொடர்பு இருந்திருக்க வேண்டும்; உண்மை வெளியே வராமல் இருக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து அதிகாரத்தை பயன்படுத்தி எப்ஸ்டீனை சிறையில் வைத்தே கொன்றுவிட்டார்கள் என்று பலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
இருப்பினும் அவன் வழக்கு தற்கொலை வழக்காகவே போலீசாரால் முடித்து வைக்கப்பட்டது.

எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் பல முக்கிய புள்ளிகள் பெயர் இருப்பதாக அப்போது முதல் தகவல் பரவி வருகிறது. முன்னாள் அதிபர் கிளின்டன் மற்றும் பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோர் பெயர்கள் கூட இருப்பதாக கடந்த ஆண்டு தகவல் பரவியது. ஆனால் இப்போது வரை எப்ஸ்டீன் ஆவணத்தின் முழு பகுதி வெளியாகவில்லை. வெளியானால் பல முக்கிய புள்ளிகளின் முகத்திரை கிழியும் என்று கூறப்படுகிறது. அந்த வரிசையில் தான் டிரம்ப் பெயர் எப்ஸ்டீன் ஆவணத்தில் இருப்பதாக மஸ்க் கூறி உள்ளார். எனினும் சில நிமிடங்களிலேயே எலான் மஸ்க் அந்த ட்வீட்டை நீக்கினார்.
இதையும் படிங்க: 200 தொகுதிகளில் வெற்றி என முதல்வருக்கு பகல் கனவு... லெப்ட் ரைட் வாங்கிய எடப்பாடி