• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    10 மசோதாக்கள் மீது படுத்துத் தூங்கிய ஆளுநர்... உச்சநீதிமன்ற தீர்ப்பை உதார்விடும் தற்குறிகள்… திமுக முனங்கல்..!

    ‘இந்தத் தீர்ப்பில் பெரிய வெற்றி எதுவும் இல்லை’ என்று சில தற்குறிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் ஊளையிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது.
    Author By Thamarai Fri, 11 Apr 2025 07:56:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Governor sleeps on 10 bills... DMK groans

    ‘10 மசோதாக்கள் தீர்ப்பில் பெரிய வெற்றி எதுவும் இல்லை’ என்று சில தற்குறிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் ஊளையிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது முரசொலி.

    திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி 'தீர்ப்பின் சிறப்பு என்ன?' என்கிற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ''தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி தராமல் அதன் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் ஆளுநர் ரவி. இது ‘சட்டவிரோதமானது’ என்று உச்சநீதிமன்ற நீதியரசர்கள் தீர்ப்பு அளித்தார்கள். இதன்பிறகும், ‘இந்தத் தீர்ப்பில் பெரிய வெற்றி எதுவும் இல்லை’ என்று சில தற்குறிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் ஊளையிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது.

    10 bills

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பின் சிறப்பு என்ன? தமிழ்நாடு அரசு தனது உரிமையாக எதைக் கேட்டதோ, அதை வழங்கி இருக்கிறது இந்தத் தீர்ப்பு. அதுதான் தீர்ப்பின் சிறப்பு ஆகும்.

    இதையும் படிங்க: 10 மசோதாவில் இப்படியொரு சிக்கலா..? மேல்முறையீட்டுக்குப் போனால் திமுகவின் ஆட்டம் மொத்தமும் காலி..!

    நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்த போது, “தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியும் – உதாசீனப்படுத்த முடியும் என்றால் – இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் மாநிலங்களின் கதி என்ன? அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு எங்கே போகும்? பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம் பண்பாடு கொண்ட மக்களின் நிலைமை என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கொள்கை முடிவை, வெறும் நியமனப் பதவியில் அமர்ந்திருக்கும் ஓர் ஆளுநர் மதிக்காமல் திருப்பி அனுப்புவது மக்களாட்சித் தத்துவத்துக்கே எதிரானது அல்லவா? பிறகு எந்த நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள்? யாரை நம்பி வாக்களிப்பார்கள்? என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி ஆகும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடு. அதனைச் சிதைக்கலாமா? இவற்றை எல்லாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

    10 bills

    இதனை வலியுறுத்தும் வகையில் மிக முக்கியமான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார் முதலமைச்சர். 9.1.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர், “மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களையும் வலியுறுத்துவது என்றும்;

    மக்களாட்சித் தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று, ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

    10 bills

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தைத் தான், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பாக அளித்துள்ளது. மசோதா மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். மசோதாவை நிறுத்தி வைப்பதாக இருந்தால் மூன்று மாதத்துக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அதனைச் செய்ய வேண்டும்.

    மறுபரிசீலனை செய்வதற்காக மசோதாவை மாநில அரசுக்கு அனுப்பி, அதே மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு வந்தால் அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்  என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரையறுத்துவிட்டார்கள். இதுதான்  முதலமைச்சரின் சட்டசபைத் தீர்மானத்தின் உள்ளடக்கம் ஆகும்.

    “மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும்” என்று கேட்டார் முதலமைச்சர். அத்தகைய கால நிர்ணயத்தைச் செய்துள்ளது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

    10 bills

    ஆளுநர் ரவி என்ன சொல்லித் திரிந்தார்? ‘நான் நிறுத்தி வைத்தாலே நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம்’ என்று கொக்கரித்தார். இவர் ஏதோ நாட்டின் அதிபர் போலச் சொன்னார். “இந்த ஆணவம் கூடாது, அப்படி எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை” என்று சொல்லி விட்டார்கள் நீதிபதிகள்.

    அரசமைப்பின் 200ஆவது விதிப்படி சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். நிறுத்தி வைத்தால் காரணத்தை உடனடியாகச் சொல்ல வேண்டும். குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும் காரணம் சொல்ல வேண்டும். மீண்டும் அரசு அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் – என்று ஆளுநர்களுக்கு மிகச் சரியான கடிவாளத்தை உச்சநீதிமன்றம் போட்டுள்ளது.

    இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கூடாது, அது சட்டவிரோதமானது என்று சொல்லி விட்டது உச்சநீதிமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் உரிமையை நிலைநாட்டி இருக்கிறது உச்சநீதிமன்றம். நியமனப் பதவியில் உட்கார்ந்து கொண்டு நிர்வாகத்தை முடக்கி, மக்களாட்சி மாண்பை நிர்மூலமாக ஆக்கத் துடிக்கும் ஆளுநர்களின் ஆணவச் செயல்களுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

    தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னதைப் போல, ‘இது இந்தியாவுக்கே வாங்கித் தரப்பட்ட தீர்ப்பு’ ஆகும். பிரிட்டிஷ் ஆட்சியின் கவர்னர் ஜெனரல்களைப் போல நினைத்துக் கொள்பவர்களின் பின் மண்டையில் தட்டி இருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்'' எனத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: 10 மசோதாவில் இப்படியொரு சிக்கலா..? மேல்முறையீட்டுக்குப் போனால் திமுகவின் ஆட்டம் மொத்தமும் காலி..!

    மேலும் படிங்க
    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    சினிமா
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்

    செய்திகள்

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share