மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதற்கு பதிலடியாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது நிச்சயம் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தரப்பில் கூறப்பட்டது. தற்போது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ட்ரோன்களை ஏவியது ஈரான். ஈரானிய நீர்மூழ்கிக் கப்பல் இஸ்ரேலிய பிரதேசங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அதிரடியாக தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்த ஈரான் மீது முன்கூட்டியே இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய நிலையில், அணு உலைகள் ராணுவ தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்கியது.
இதையும் படிங்க: இந்தியர்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: அதிபர் ட்ரம்ப் திட்டம்..!
இவ்வாறாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 4வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரே இரவில் 80 நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ கமென்டர்கள் உயிரிழந்தனர்.

மேலும், ஈரானின் முக்கிய தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரையில் ஈரானில் 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் பொதுமக்கள் என்று ஈரான் கூறியுள்ளது. அதேபோல, இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்களை பேருந்து மூலம் அர்மேனியா எல்லைக்கு அழைத்து வந்து, அங்கிருந்து விமானம் அல்லது கப்பல் மூலம் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஈரானில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் உள்ளனர். அவர்களை வெளியேற்ற முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான்-இஸ்ரேல்.. இந்தியாவில் எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை..!