ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகளின் தளவாட அமைச்சராகப் பணியாற்றி வந்த அமீர் அஜிஸ் நசீர்சாதே, இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டுப் படைகள் நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்தார். தெஹ்ரானில் நடைபெற்ற 'தேசிய பாதுகாப்பு கவுன்சில்' கூட்டத்தின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் ஒட்டுமொத்த ராணுவப் படைகளின் தலைமைத் தளபதியான அப்துல் ரஹீம் மொசாவி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் ராணுவம் உறுதி செய்துள்ளது. இவர்களுடன் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி முகமது பாக்பூர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி ஷாம்கானி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமை (பிப் 28) இரவு முதல் இன்று (மார்ச் 1) காலை வரை ஈரானின் ராணுவத் தலைமையகங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விமானங்கள் ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி (Operation Epic Fury) என்ற பெயரில் தொடர் தாக்குதல்களை நடத்தின.
இதையும் படிங்க: துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!
உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அதேத் தாக்குதலில், ஈரானின் மிக மூத்த ராணுவத் தளபதிகளும் பலியாகியுள்ளது அந்நாட்டு ராணுவத்திற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. இதனால் ஈரானின் அடுத்தகட்டப் பதிலடித் தாக்குதல்களை வழிநடத்துவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஈரானின் இந்த முக்கியத் தலைவர்களின் மறைவையடுத்து, நாடு முழுவதும் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களது வீரத் தளபதிகளின் தியாகத்திற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் மாளிகை மீண்டும் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!