ஈரான் இஸ்ரேல் மீது 12 நாட்களாக நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சேதத்தையும், சவாலையும் எதிர்கொண்டதாக இஸ்ரேல் நிதி அமைச்சகம் மற்றும் வரி ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், போரின் ஒட்டுமொத்த செலவு 12 பில்லியன்கள் அதாவது இந்திய மதிப்பில் 1,200 கோடியை எட்டக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இஸ்ரேல் வங்கியின் ஆளுநர் அமீர் யாரோன் ப்ளூம்பெர்க் டிவிக்கு அளித்த பேட்டியில் சுமார் $6 பில்லியன் அளவிற்கு மட்டுமே செலவழித்ததாக மதிப்பை குறைத்துக் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு, ஈரானுடனான 12 நாட்கள் போரில் இவ்வளவு பெரிய தொகை சேதம் ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய பொருளாதார அழிவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக V.S. பாபு நியமனம்

12 நாள் போரில் இஸ்ரேலின் பொருளாதாரம் கிட்டத்தட்ட ஸ்தம்பிதமடைந்தது, அத்தியாவசிய சேவைகளைத் தவிர பள்ளிகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டன. பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, இதற்காக மட்டும் நிதி அமைச்சகத்திற்கு 1.4 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த எண்ணிக்கை மட்டும், ஹமாஸின் தாக்குதல்களில் அழிக்கப்பட்ட முழு சமூகங்களுக்கும் இழப்பீடு , அத்துடன் வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் ஹெஸ்பொல்லா ராக்கெட் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் உட்பட, அக்டோபர் 2023 முதல் சொத்து சேதத்திற்கு அரசாங்கம் செலுத்தியதை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். ஆனால் லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதல்களை விட ஈரான் மீதான போருக்கு அதிக செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 10 நாட்களுக்கு முன்னாடி கூட கூட்டணி மாறலாம்... குண்டை தூக்கி போட்ட ராஜேந்திர பாலாஜி!!