இசை மீது மோகம் இருந்த பெண் ரசிகை ஆர்வ மிகுதியால் பாடகரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அது பாலியல் வழக்காக மாறிய அதிர்ச்சி சம்பவம் கொரிய நாட்டில் நடந்துள்ளது. உலகில் உள்ள அனைவருக்கும் விருப்பமான ஒன்று என்றால் அது இசை தான். மொழிகளை கடந்த இசைக்கு ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்டை இசை கலைஞருக்கு தென்கொரிய ரசிகை ஒருவர் ஆர்வ மிகுதியால் முத்தம் கொடுக்க அது வேண்டாத விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்காசிய நாடான தென்னாப்பிரிக்காவில் 2013ம் ஆண்டு பிடிஎஸ் என்ற இசைக்குழு தொடங்கப்பட்டது. இளைஞர்களால் உருவான இந்த இசைக்குழுவுக்கு கிழக்காசிய நாடுகளில் பிரபலமானது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட பிடிஎஸ் இசைக்குழுவுக்கு பெண் ரசிகர்கள் அதிகம். பிடிஎஸ்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் பிடிஎஸ் ஆர்மி உருவாக்கி பலரும் அதில் தங்களை இணைத்துள்ளனர்.

இப்படி பாட்டு, மியூசிக் என எண்டர்டெயின்மென்டாக சென்று கொண்டிருந்த பிடிஎஸ் குழுவுக்கு ஒரு பெண் ரசிகையால் தலைவலி ஏற்படுள்ளது. பொதுவாக தென்கொரியாவில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் 18 மாதம் கட்டாயம் ராணுவ பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அந்நாட்டின் விதிமுறை. இந்த ராணுவ பயிற்சியை பிடிஎஸ் இசைக்குழுவில் உள்ள பாடகரான ஜின் முடித்துள்ளார். அதேநேரம் பிடிஎஸ் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதையும் படிங்க: ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோவில் பயணம்.. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
இந்த இரு நிகழ்வுகளையும் ஒன்றாக கொண்டாட நினைத்த ஜின் அதற்கான இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார். அங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்துள்ளது. ஜின்னின் இசை நிகழ்ச்சிக்கு பெண்கள் பலர் வந்துள்ளனர். அப்படி வந்த 50 வயதான பெண் ரசிகை ஒருவர், ஆர்வத்தால் ஜின் -க்கு அருகில் சென்று அவரை கட்டிப்பிடித்து அனைவரது முன்னிலையிலும் முத்தம் கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியான ஜின் அந்த ரசிகையிடம் இருந்து விலகியதுடன், நடந்தது தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணையில் குதித்த தென்கொரிய போலீசார், அந்த ரசிகை யார் என தேடினர். ஒருவழியாக வர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த ரசிகை மீது பாலியல் தொந்தரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த ரசிகைக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இசைக்கு அடிமையாகி ஆர்வத்தில் கொடுத்த ஒரு முத்தத்துக்கு பாலியல் வழக்கா என பலரும் கேள்வி எழுப்பி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: உலகின் தொழிற்சாலையாக முன்னேறி வரும் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்