• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மகன் மீது ஏறி அமர்ந்த 154 கிலோ தாய்.. மூச்சுத்திணறி இறந்த 10 வயது சிறுவன்.. விளையாட்டு வினையான விபரீதம்..!

    அமெரிக்காவில் விளையாட வெளியில் செல்ல அடம் பிடித்த 10 வயது சிறுவன் மீது 154 கிலோ எடை கொண்ட தாய் ஏறி அமர்ந்ததால் சிறுவன் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
    Author By Pandian Fri, 14 Mar 2025 17:17:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jennifer-lee-williams-case-america

    அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வால்பரைசோ பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் லீ வில்சன் (வயது 48). அவரது வளர்ப்பு மகன் டகோடா லெவி ஸ்டீவன்ஸ் (வயது 10). கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி டகோடா ஸ்வீவன்ஸ் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாட சென்றுள்ளான். வெகுநேரம் ஆகியும் டகோடா திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவனது தாய் ஜெனிபர் லீ வில்சன், வெளியில் சென்று தேடி உள்ளார். சிறுவன் பக்கத்தி வீட்டில்விளையாடியது தெரிந்தது. சிறுவனை வீட்டிற்கு வா என தாய் ஜெனிபர் லீ வில்சன் அழைத்துள்ளார். 

    America

    ஆனாலும் சிறுவன் விளையாடுவதில் உள்ள ஆர்வத்தில் வீட்டிற்கு வர மறுத்துள்ளான். தாய் ஜெனிபர் லீ வில்சன், சிறுவனை உருட்டி, மிரட்டி வம்படியாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பிறகும் சிறுவன் விளையாட செல்ல வேண்டும் என அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.

    ஜெனிபரின் சற்று கவனம் திசை திரும்பியதும் மீண்டும் சிறுவன் வெளியில் ஓடி சென்றுள்ளான். அவனை வெளியில் சென்று வீட்டிற்கு இழுத்து வந்த ஜெனிபர் லீ வில்சன், இனி வெளியில் செல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். சிறுவன் விடாமல் அடம் பிடித்து அழுததாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் பிடியில் இருந்து நழுவி வெளியில் சென்று விடாமல் இருக்க, சிறுவனை கீழே தள்ளி, ஜெனிபர் அவன் மீது ஏறி அமர்ந்துள்ளார்.

    இதையும் படிங்க: இதுக்குலாமா கல்யாணத்த நிறுத்துவாங்க.. மணமகன், தாயாருடன் சேர்ந்து 'கனவு இல்ல'த்தை வாங்கியதால் மணப்பெண் ஆத்திரம்..!

    America

    இதில் சிறுவன் மயங்கியதாக கூறப்படுகிறது. உடனே ஜெனிபர் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து பேசி உள்ளார். போலீசாரிடம் பேசிய ஜெனிபர், எனது 10 வயது மகன், டகோடா சுயநினைவின்றி கிடக்கிறான் என கூறியுள்ளார். போலீசார் உடனே விரைந்து சென்று பார்த்தபோது, டகோடாவின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் காணப்பட்டன. அவனை சுயநினைவுக்கு கொண்டு வர போலீசார் முயற்சித்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டான் என டாக்டர்கள் கூறினர்.

    America

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பேசிய ஜெனிபர், டகோடா வீட்டை விட்டு ஓடி விட்டான். தேடி பார்த்தபோது பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. அவனை வீட்டுக்கு அழைத்து வந்த பின்பும், வீட்டை விட்டு போகிறேன் என அடம் பிடித்தான். தரையில் அழுது புரண்டான்.

    இதனால் அவனை வெளியில் விடக்கூடாது என சிறுவன் மீது ஏறி அமர்ந்தேன் என கூறி உள்ளார். அதாவது அந்த 10 வயது சிறுவனின் மீது 154 கிலோ எடை கொண்ட ஜெனிபர் 5 நிமிடங்கள் வரை அமர்ந்து இருக்கிறார். ஜெனிபர் ஏறி அமர்ந்ததும் சிறிது நேரத்தில் சிறுவன் அசையாமல் கிடந்துள்ளான். அவன் நடிக்கிறான் என நினைத்ததாக ஜெனிபர் தெரிவித்தார். 

    America

    இதன்பின்னர் அவனை பரிசோதித்தபோது, சுயநினைவின்றி சென்றதுபோல் தெரிந்ததாகவும், இதனால், முதலுதவி சிகிச்சையை அளித்ததாகவும் ஜெனிபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுபற்றி கோர்ட்டில் நடந்த விசாரணையில், சிறுவன் வெளியே ஓடி விட கூடாது என்பதற்காகவே சிறுவன் மீது அமர்ந்ததற்கான காரணங்களாக அவர் கூறியுள்ளார். பிரேத பரிசோதனையில் சிறுவன் டகோடா மூச்சு திணறி உயிரிழந்தது உறுதியானது.

    America

    அவனுக்கு கடுமையான உள்ளுறுப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தன. நடந்த சம்பவங்களுக்கு சாட்சியான பக்கத்து வீட்டுக்கார பெண்மணி கூறும்போது, சிறுவன் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன் என்னுடைய வீட்டுக்கு வந்து, என்னை தத்தெடுத்து கொள்ளுங்கள். ஏனெனில் பெற்றோர் முகத்தில் குத்தி விட்டனர் என கூறினான் என்றார். எனினும், சிறுவனின் முகத்தில் காயங்கள் எதனையும் நான் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதன்பின்னர் ஜெனிபர் சிறுவனை அழைத்து செல்வதற்காக உடனடியாக வந்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: புது ரூட்டெடுத்த சீனா.. இந்தியாவுக்கு வளர்ச்சி..? அமெரிக்காவுக்கு சிக்கல்!!

    மேலும் படிங்க
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share