வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கு இடையே பதற்றம் நிலவியது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிப் முனீர் தான் முக்கிய காரணம்.

1971ல் வங்கதேசம் உருவாக காரணமாக இருந்ததே இந்தியா தான். ஆனால் இன்று வங்கதேசம், பாகிஸ்தானின் பேச்சைக்கேட்டு இந்தியாவிற்கு எதிராக மாறிவிட்டது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது முதல் தற்போது வரை, இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டு தலங்கள், வீடுகள், சொத்துகள், உடமைகள் சேதம் அடைக்கின்றன.
இதையும் படிங்க: வங்கதேச அமைச்சரவை கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்.. தலைமை ஆலோசகராக யூனுஸ் நீடிப்பு..!

இந்த நிலையில் இந்தியாவின் சிக்கன் நெக் என்ற பகுதியை துண்டித்து விட்டு நம் வடகிழக்கு மாநிலங்களை எடுத்துக்கொள்வோம் என்பது போல் யூனுசின் அடியாட்கள் பேச ஆரம்பித்தனர். சீனா சென்று அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்த யூனுசும் பொறுப்பே இல்லாமல் வடகிழக்கு மாநிலங்களை குறி வைத்து பேசினார்.அதே போல் தேவையே இல்லாமல் எல்லையில் பதற்றத்தை உண்டு பண்ணியினார். துருக்கியின் உளவு ட்ரோன்களை நம் எல்லைக்கு நெருக்கமான இடங்களில் நிறுத்தினார்.

வங்கதேசத்தின் மொத்த எல்லையில் பெரும்பகுதியை இந்தியாவுடன் தான் பகிர்கிறது. அதாவது, வங்கதேசத்தை சுற்றி 4 ஆயிரம் கிலோ மீட்டர் நம் எல்லை இருக்கிறது. இப்படியொரு சூழலில் நம்மையே எதிர்த்து வங்கதேசம் செயல்பட ஆரம்பித்தது. இதனால் இந்தியாவுக்கும் யூனுஸ் அரசுக்கும் இடையேயான உறவு பலவீனம் அடைந்தது. யூனுஸ் அரசாங்கம் செய்த அடாவடி வேலைக்கு இந்தியா வார்னிங் கொடுத்து இருக்கிறது.
இருப்பினும் வங்கதேசத்தின் இடைக்கால அரசு திருந்தவில்லை. தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவு அமைப்புகளிடம் தீவிர நெருக்கம் காட்டி வருகிறது. இப்படியொரு சூழலில் தான் பாகிஸ்தான் பயங்கரவாதி அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை கொடுத்து இருக்கிறான். அணு ஆயுத சோதனை வெற்றி பெற்ற நாளை மே 28ம் தேதி பாகிஸ்தான் கொண்டாடியது.

அரசு நிகழ்ச்சி ஒன்றில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முசாமில் இக்பால் ஹாஷ்மி சர்வ சாதாரணமாக தோன்றினான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் சேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததே நாங்கள் தான் என்று அதிர்ச்சி அளித்தான். அதோடு நம் பிரதமர் மோடியையும் பகிரங்கமாக சீண்டினான். வங்கதேசத்தில் உங்களை நாங்கள் தான் தோற்கடித்தோம் என்று ஆணவத்துடன் பேசினான். இந்த வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.
வங்கதேசத்தில் கலவரம் ஏற்படும் போதே பயங்கரவாத பின்னணி இருப்பது கண்கூடாக தெரிந்தது. இருப்பினும் அது உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் வேலையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் மீதும் சந்தேகம் கிளம்பியது. ஆனால் இப்போது அதை லஷ்கர் பயங்கரவாதி உறுதி செய்து விட்டான். இவனை இந்தியா மட்டும் அல்ல; அமெரிக்காவும் பயங்கரவாதியாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவன் சார்ந்த லஷ்கர் இ தொய்பா தான், பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்றது. இதற்கு பொறுப்பேற்பது போன்றும் இக்பால் ஹாஷ்மி பகிரங்கமாக பேசி இருக்கிறான். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது முரிட்கேவில் இருந்த லஷ்கர் இ தொய்பாவின் முகாமை இந்தியா குண்டு வீசி தகர்த்தது. அதை மீண்டும் கட்டி எழுப்புவது தொடர்பாக இதே இக்பால் ஹாஷ்மியுடன், பாகிஸ்தான் அமைச்சர் ராணா தன்வீர் உசேன் பேசியதாக செய்தி வெளியான, சில நாட்களில் இக்பால் ஹாஷ்மி அரசு நிகழ்வில் சர்வசாதாரணமாக மேடை ஏறி இந்தியாவை சீண்டி இருக்கிறான்
இதையும் படிங்க: ரொம்ப நெருக்கடி கொடுக்குறாங்க.. ராஜினாமா பண்ணப்போறேன்.. வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் ஆட்சி..!