இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்றான சவுதி அரேபியாவின் மக்கா நகரை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சவுதி அரேபியாவின் மக்கா நகரத்தின் வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாகவே, அதன் தெற்குப் பகுதியில் வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் எனக் கூறப்படும் ஆளில்லா விமானத்தை சவுதி வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் முயற்சிக்குப் பிறகு, சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவின் பாதுகாப்பு தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும், அவற்றின் பாதுகாப்பு தங்களுக்கான ‘சிவப்புக் கோடு’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புனித நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING சோதனை மேல் சோதனை... விடிந்ததுமே அன்பில் மகேஷுக்கு இறங்கிய இடி... ஷாக்கில் திமுக...!
கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்காவை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் முயற்சி இது என்று சவுதி தரப்பு தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு மக்காவை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிக்கப்பட்டதாக சவுதி தரப்பு தெரிவித்திருந்தது.
குறிப்பாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய அமைப்பாகும். 2015ஆம் ஆண்டு ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சவுதி அரேபியா தலையிட்டது. இதன் பின்னர் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் உள்ளிட்ட மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
2022ஆம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நீண்ட காலமாக ஒப்பீட்டளவில் அமைதி நிலவியது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை நோக்கி ட்ரோன் சென்றதாக சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும், மக்காவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஹவுதி தரப்பு மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்கா நகரத்தின் வான்வெளிக்குள் ட்ரோன் நுழைவதற்கு முன்பாகவே தெற்குப் பகுதியில் வைத்து சவுதி வான் பாதுகாப்புப் படையால் அது வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து சவுதி அரேபியா மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தற்போது மக்கா நகரை நோக்கி ட்ரோன் சென்றதாக சவுதி தரப்பு தெரிவித்திருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கா மற்றும் மதீனா உள்ளிட்ட புனிதத் தலங்கள் தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதாகவும், அவற்றின் பாதுகாப்பு தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் சவுதி தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... கார் விபத்தில் ஒரு குடும்பமே காலி... தந்தை, தாய், மகன் பலி...!