கடந்த மே மாதத்தில் மட்டும் 6,000 பேரை பணி நீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது மீண்டும் 300 பேரை அதிரடியாக நீக்கி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 1.26 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஐடி துறையே ஆட்டம் கண்டது போல் இருக்கிறது. ஏஐ வந்த பிறகு டெக் துறையில் புரட்சி ஏற்பட்டாலும், அது ஊழியர்களின் வேலையை காலி செய்து வருவது பலரையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், தற்போது 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் திட்ட இயக்குனர்கள் மற்றும் மென்பொறியாளர்கள் ஆவர். மனைவி, மகனுடன் சுற்றுலா சென்றிருந்தபோது பணி நீக்கம் குறித்த மின்னஞ்சல் வந்ததாக LINKED IN தளத்தில் ஊழியர் ஒருவர் புலம்பியுள்ளார்.
இதையும் படிங்க: சாம்சங் ஊழியர்கள் செம்ம குஷி...முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் கிளவுட் சேவைகளுக்கான செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் பணிநீக்கத்திற்கான முக்கிய காரணமாக அதிகரித்து வரும் சந்தை போட்டித்தன்மை, செலவுகள் இதையெல்லாம் குறைக்க ஊழியர்கள் பணிநீக்கத்தை விட்டால் வேறு ஆஃப்சன் இல்லை என நிறுவனம் கூறியுள்ளது. உலகெங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 2.28 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 3 சதவீதம் பேரை நிறுவனம் தற்போது பணி நீக்கியுள்ளது.

முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் உலக அளவில் சுமார் 2,28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதே போல் 10,000 ஊழியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு வேலையை விட்டு அனுப்பி இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மிகப்பெரிய அளவில் பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
மைக்ரோசாஃப்ட் மட்டுமல்லாமல் உலகின் பெரும்பாலான முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர் பணிநீக்கம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.8.6 கோடி மதிப்பு.. உயர் ரக கஞ்சாவுடன் சிக்கிய பெண்கள்.. மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு..!