அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கியுள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் பணம் ஒதுக்கும் இந்த நிதி ராணுவ செலவினம் என்று அழைக்கப்படுகிறது. நேட்டோவிற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியது அமெரிக்காதான்.

டிரம்ப், 2வது முறையாக அமெரிக்க அதிபராக பதிவு ஏற்ற பிறகு மற்ற நாடுகளும் அதிக அளவில் நேட்டோவின் ராணுவ செலவினத்திற்கு செலவழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இல்லை என்றால் நேட்டோவில் இருந்து வெளியேறுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதையும் படிங்க: ஈரானின் அணுசக்தி தளங்களை துல்லியமாக தாக்கிய அமெரிக்கா.. ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

மேலும் 2035ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நாடும் அதன் ஜிடிபியில் 5 சதவீதம் செலுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். தங்களால் அவ்வளவு தொகை செலவழிக்க முடியாது என ஸ்பெயின் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ராணுவ செலவினங்களை அதிகரிக்க நேட்டோ தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

32 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. தனிப்பட்ட மற்றும் கூட்டு கடமைகளை உறுதி செய்ய ஒருங்கிணைத்த பாதுகாப்பு தேவைகளுக்காக ஜிடிபி-யில் 5 சதவீதம் முதலீடு சேய்ய நேட்டோ நாடுகள் ஒப்புக்காண்டுள்ளன என நேட்டோ மாநாட்டில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: “மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு” அழிவின் விளிம்பில் அமெரிக்கா... கதறும் டிரம்ப்...!